சனி, 31 ஆகஸ்ட், 2019

திராவிடர் கழக பவள விழா மாநாடு (சேலம்-27.8.2019) மாட்சிகள்


சேலம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (27.8.2019)

சேலம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (27.8.2019)



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பவள விழா மாநாடு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.



தந்தை பெரியார் படத்தை பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசுவும், அன்னை மணியம்மையார் படத்தை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தை ஆத்தூர் ஏ.வி. தங்கவேலுவும் திறந்து வைத்தார்கள்.



பெரியார் சமூகக் காப்பணியினர்  தமிழர் தலைவருக்கு அணி வகுப்பு மரியாதை செலுத்தினர்.

சேலம் மாநகரெங்கும் கழகக் கொடிகள் தோரணங்களின் அணிவகுப்பு அனைவரையும் மாநாட்டுத்திடலை நோக்கி வரவேற்ற மாட்சி!

திராவிடர் கழக பவள விழா மாநாடு தொடங்கியது

சேலம்,ஆக.27, நீதிக்கட்சி 1944இல் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்ற அதே சேலம் நகரில் இன்று (27.8.2019) திராவிடர் கழகத்தின் 75ஆம் ஆண்டு விழா, திராவிடர் கழக பவள விழா மாநாடு தொடங்கி நடைபெறுகிறது.

திராவிடர் கழக பவளவிழா மாநாடு இன்று (27.8.2019) நடைபெறுவதை சேலம் மாநகரின் எல்லை தொடங்கி மாநகரின் மூலை முடக்குகளிலெல்லாம் விளம்பரங்கள் பறை சாற்றின. பொதுமக்களே மாநாட்டு அரங்கிற்கு வழி சொல்லும் அளவிற்கு அனைத்து தரப்பினரின் பெரும் ஆதரவுடன் மாநாடு  எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.

கருங்கடலானது சேலம் மாநகரம் எனும்வண்ணம் திராவிடர் கழக பவள விழா மாநாடு கருப்புடை தரித்தவர்கள் பெருந்திரளாக குடும்பம்குடும்பமாக திரண்ட எழுச்சியைக் கண்டுள்ளது. இந்நாள் சேலம் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

சேலம் மாநகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என கழகத் தோழர்கள் முழக்கமிட தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்த பெரியார் சமூகக் காப்பு அணி தோழர்களின் கட்டுப்பாடான  பயிற்சி, கட்டளைகள் அனைத்தும் அழகுத் தமிழில். அடடா! கட்டுப்பாட்டின் இலக்கணமே கருஞ்சட்டைத் தோழர்கள். அவர்களில் இராணுவ மிடுக்குடன் சீருடையுடன்  அழகுத் தமிழ் கட்டளை யுடன் பெரியார் சமூகக் காப்பு அணித் தோழர்களின் பயிற்சியைக் கண்ட அப்பகுதி மக்கள்  மலைத்தனர் .

ஆரிய ஆதிக்கத்தின் ஆணிவேரை அகற்றும் பணியில் தன் இறுதி மூச்சு வரை அயராது தொண்டாற்றிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்  காட்டிய வழியில் நூற்றாண்டு விழா காணும் அன்னை மணியம்மையாரைத் தொடர்ந்து தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் பட்டாளம் அன்றிலிருந்து சளைக்காமல் களம் கண்டு வருகிறது.

ஆரிய ஆதிக்கம், சுரண்டல் எந்த இடத்தில் தலை தூக்கினாலும் முன்னதாகவே, அதை அடையாளம்   கண்டு அதைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்கும் இன உரிமைப்போரில் தமிழர் தலைவர் தலைமையில் தமிழகம் அணிதிரண்டுள்ளது.

பகுத்தறிவு இசை - நிகழ்ச்சி

திராவிடர் கழக பவளவிழா  மாநாடு இன்று (27.8.2019)சேலம் அம்மாப்பேட்டை கொங்கு வெள்ளாள திருமண மண்டபத்தில் எடப்பாடி இராமன் நினைவு முகப்பில் அன்னை மணியம் மையார்  நினைவரங்கத்தில் காலை 8.30 மணிக்கு கலைமாமணி டாக்டர் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்றது.  மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் ஒருங்கிணைப்பில் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு கலைநிகழ்ச்சியுடன் பா.மணியம்மை, புதுவை குமார் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் கலைநிகழ்ச்சியில் சிறப்பு சேர்த்தன.

கலைக்குழுவினருக்கு சிறப்பு

திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம், ரமேஷ், அன்வர், செல்வம் குழுவினருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்..

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பழநி.புள்ளையண்ணன் வரவேற் புரை ஆற்றினார்.

மாநாட்டின் தலைவரை கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி முன்மொழிந்து உரையாற்றினார்.

மாநாட்டின் தலைவரை வழிமொழிந்து மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில மகளிரணி அமைப்பாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர்.

தந்தைபெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, பவள விழா காணும் திராவிடர் கழகம் வாழ்க எனும் முழக்கங்களைத் தோழர்கள் முழங்க, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கழகக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டினை  திறந்துவைத்து உரையாற்றினார். 1944 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு உள்ளிட்ட பல்வேறு கழகச் செயல்பாடுகளில் தம் பங்களிப்பு குறித்தும், கழகத்தின் மாநில மாநாடுகள், மாநாட்டுப் பேரணிகளில் பரிசு பெற்ற மாவட்டம் மற்றும் மாநாடுகளுக்கான நன்கொடை வசூலிப்பில் பாராட்டு பெற்ற மாவட்டம் சேலம்  என்று குறிப்பிட்டார். கழகத் தலைவரின் கட்டளைக்கிணங்க கட்டுப்பட்டு செயல்பட இலட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர் என்று பெருமிதத்துடன் கூறினார்.

படத்திறப்புகள்

தந்தை பெரியார் படத்தை பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு திறந்து வைத்து உரையாற்றினார்.

சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சிக்கு தலைவராக தந்தை பெரியார் நியமிக்கப்பட்டார். தேர்தலில் நிற்காத தந்தை பெரியாரை அரசியல் கட்சிக்கு தலைவராக்கிய போது, நீதிக்கட்சி 1944இல் திராவிடர் கழகமாக பெயர் மாற்றப்பட்டது. ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் பெரியார் மண் இது என்றார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல்  திறந்தவைத்தபோது, மாநாட்டில் தோழர்களால் வீரவணக்கம் வீரவணக்கம், சுயமரியாதை சுடரொளிகளுக்கு வீரவணக்கம் என்று முழக்கமிடப்பட்டது.

ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் பக்தராக இருந்தபோது தந்தைபெரியார் உரையை முதல்முறையாக கேட்டதாகவும், அப்படி பெரியார் உரையைக் கேட்ட போது ஏற்பட்ட சிலிர்ப்பை உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார்.

கழகக் குடும்பத்தினரிடையே நீந்தி வந்தார் தமிழர் தலைவர்

கழகக் குடும்பத்தலைவர்  தமிழர் தலைவர்  முகத்தில் புன்னகை தவழ, கழகக் கொடியேந்தியபடி கழகக் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து அனைவரையும் வரவேற்றார். அனைவரும் தமிழர் தலைவரின் அன்பைக் கண்டு பெருமகிழ்வு அடைந்தனர்.

தீர்மான அரங்கம்

தீர்மான அரங்கத்தின் தலைமையுரையை கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றினார்.

தீர்மான அரங்கத்தில் மாநாட்டின் வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு பார்வையாளர்களிடையே வாசிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

முன்னதாக தீர்மான அரங்கில் கழக மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர்  மஞ்சை வசந்தன்,  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் ஆத்தூர் த.பிரபாகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்,  தென் மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர் சீ.டேவிட் செல்லதுரை, வேலூர் மண்டலத் தலைவர் வி.சடகோபன், வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அகிலா எழிலரசன்,  வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், சென்னை மண்டல மகளிரணி செயலாளர் ஓவியா அன்புமொழி, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ்குப்தா,பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், அரியலூர் மாவட்டத் தலைவர் சிந்தனைச் செல்வன், மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் முத்து.கதிரவன், கோவை மண்டலச் செயலாளர்  கோவை ம.சந்திரசேகரன், திருச்சி மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட் ஆகியோர் 25 தீர்மானங்களை வாசித்து முன்மொழிந்து உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்களுக்கு மாநாட்டில் சிறப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்பயனாடை அணிவித்து பவள விழா மாநாடு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு

பொத்தனூர் க.சண்முகம், இராசகிரி கோ.தங்கராசு, ஆத்தூர் தங்கவேல்  ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

நூற்றாண்டு விழா காணும் அன்னை மணியம்மையார் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்குறித்து கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி  கருத்துரை யாற்றினார்.

மாநாட்டுத் தலைவர் கழகத் துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று திராவிடர் கழகத்துடன் சேலம் மாநகர் கொண்டுள்ள வரலாற்று சிறப்புகளைப் பட்டியலிட்டு உரையாற்றினார்.

சமூக நீதித் தடத்தில் கழகம் கண்ட களங்களை விளக்கிப் பேசினார்.

நீதிக்கட்சி திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வரலாறு மற்றும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டியதன்  அவசியம்குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

1944 மாநாட்டின் தீர்மானங்கள் இன்றைக்கும் பேசப்படு வதைப் போல இன்று திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று குறிப் பிட்டார்.

நூல் வெளியீடு

தமிழர் தலைவர் நூல் வெளியீட்டு விழாவில் உரையில் அனைவரும் புத்தகங்களுடன் வீடு திரும்ப வேண்டும் என்றார்.

-தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ள திராவிடர் கழக வரலாறு'' நூல் வெளியிடப்பட்டது. நூலின் நன்கொடை மதிப்பு ரூ.700. நூல் வெளியீட்டு விழாவில் மாநாட்டில் ரூ.100 கழிவு போக ரூ.600க்கு அளிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் திராவிடர் கழக வரலாறு நூலின் 50 பிரதிகளை அதற்கான தொகையை அளித்து பெற்றுக் கொண்டார்.

திராவிடர் கழக வரலாறு'' நூலை வெளியிட்டு திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினார்.

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் த.வீரசேகரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, திராவிடர் கழக விவசாயத் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் இராயபுரம் இரா.கோபால், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் திண்டுக்கல் அ.மோகன் மற்றும் பலர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

வாழ்த்தரங்கம்-மாநாட்டில் தலைவர்கள் உரை

தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தரங்கில் உரையாற்றினார்கள்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பெரியார் சமூகக் காப்பு அணி பொறுப்பாளர்கள் பெரியார் செல்வன், சோ.சுரேஷ், அண்ணா.சரவணன், திமுக மேனாள்சட்டமன்ற உறுப்பினர் குழந்தை.தமிழரசன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் காலை நேர அமர்வில் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரையாற்றினார்.!

சேலம் பவள விழா மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு  தோழர்கள் புடைசூழ திருப்பத்தூர் கே.சி.எழிலரசன்  பயனாடை அணிவித்து வரவேற்றார்.

- விடுதலை நாளேடு, 27. 8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக