வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பெரியார் மறைவுக்குப்பின்னரும் அதிகமான இளைஞர்கள் அவர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்

திராவிடர் கழகம் தோன்றி  75 ஆண்டுகளுக்குப் பின்னரும்   திராவிட மண்ணாக நீடித்திருக்கிறது


தி இந்து ஆங்கில ஏடு  (26.8.2019)  படப்பிடிப்பு




பெரியார் கொள்கைகளை திராவிடர் கழகம் 75 ஆண்டுகளாக முன்னெடுத்துவருவதால் திராவிட மண்ணாக தொடர்கிறது

1944ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 27இல் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களால் திராவிடர் கழகம்  தொடங்கப்பட்டது. தற்பொழுது அதற்கு 75 வயதா கிறது.

சமூக இயக்கமான திராவிடர் கழகத்தில் பெரியார் வழியில் வந்த சி.என். அண்ணாதுரை1949 செப்டம்பரில் சமூக இயக்கத்தில் பிளவை  ஏற் படுத்தியதால் பாதிப்பு ஏற்பட்டது.

1973 பெரியார் மறைந்தபோதிலும் திராவிட மண்ணாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன்  கூறுகையில்,

கேரளாவில் நாராயணகுரு, மராட்டியத்தில் ஜோதிராவ் புலே, அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகள் திராவிடர் கழகத்தைப்போல் ஓர் இயக்கமாக தலைவர்களுக்குப் பிறகு தாக்கத்தை பெற்றிருக்க வில்லை. பெரியார் கொள்கைகளை திராவிடர் கழகம்தான் முன்னெடுத்து செல்கிறது.

பெரியார் கொள்கைப்படி தம் வாழ்நாளில் காண விரும்பியவை பல அரசுகளால் நடைமுறைப் படுத்தும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

1927 ஆம் ஆண்டில் பெயருக்குப் பின்னால் நாயக்கர் எனும் ஜாதிப்பட்டத்தை துறந்தார். பெய ருக்கு பின்னால் ஜாதிப்பட்டத்தை நீக்கிய  மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.

வழக்குரைஞர் அருள்மொழி

திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி கூறுகையில்,

விதவைத்தன்மை கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, மறுமணம் மற்றும் ஜாதியத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்றார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு இயக்கம் என்ன செய்தது என்று விமர்சனங்கள் உள்ளதே என்று கேட்டதற்கு,

திராவிடர் கழகம். தாழ்த்தப்பட்டவர்களுக்காக நீண்ட காலமாக பாடுபட்டு வருகிறது திராவிடர் கழகம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு திராவிடர் கழகம் செய்ததென்ன என்றுவிமர்சிப்பதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது என்றார்.

குறிப்பிடத்தக்க முக்கிய கருத்து


அரசியல் விமர்சகர் பி.இராமஜெயம்


அரசியல் விமர்சகர் பி.இராமஜெயம் வேறு கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்து கூறுகையில், அனைத்து திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சந்திக்கின்ற குறிப்பிடத்தக்க புள்ளியாக திராவிடர் கழகம் விளங்குகிறது. திராவிடக் கட்சி களும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் உறுதியாக பெரியார் கொள்கைகளையே பின்பற்றுகின்றன.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்தல் வாக்குகளை அதிகம் பெறாதவராக இருக்கலாம். ஆனால், அரசியல் மேடையில் அவர் இருக்கிறார் என்று சொன்னால், ஏராளமான அரசியல் கட்சி களும், அவற்றின் தலைவர்களும் அந்த மேடையில் இருப்பார்கள் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பாஜக மட்டுமே உள்ளது. அப்படி இல்லாமல், திராவிடர் கழகத்துடன் இணைந்து பணியாற்றும் நிலையினை ஏராளமான கட்சிகள் விரும் புகின்றன.

திராவிடர் கழகத்துக்கு மட்டும் பெரியார் அல்லது சில எல்லைகளுக்குள் பெரியார் என் பதைத்தாண்டி,  உலகெங்கும் பன்னாட்டு அறிஞர்களால் குறிப் பிடத்தக்கவராக ஜாதி ஒழிப்பில் பெரியார் திகழ்கிறார். பெரியார் காலத்துக்குப் பின்னரும், அமைப்புகளைக் கடந்து,  பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஏராளமான இளைஞர்கள்  அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்று பி.இராமஜெயம் கூறினார்.

-  விடுதலை நாளேடு, 26.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக