வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பெரியாரவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம் - 4

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

ஆரியர் இயல்பு


ஆரியர் என்பவர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு நாடோ, ஊரோ, குறிப்பிட்ட மொழியோ, கொள்கை கோட்பாடுகளோ கிடையாது. அவர்கள் நாடோடியாக இருந்து பல நாட்டின ரின் கொள்கை. கோட்பாடுகள். மொழிகள் ஆகியவற்றிலி ருந்து தங்கள் சுயநலத்திற்கு ஏற்றவற்றைத் தொகுத்துக் கொண்டு தங்களைத் தனிப் பிறப்பினமாகக் கூறிக்கொள் கின்றனர். இந்த திருட்டுச் சொத்தின் வண்டவாளத்தை பிறர் சந்திக்கு இழுக்காதிருப்பதற்காகத் தெய்வீகம், தெய்வத்தின் அருள் மொழிகள், தெய்வீகத்தின் மக்கள் என்றும் பொய்யா கப் பிரசாரம் செய்து தங்களுக்குச் சிறப்புத் தேடிக்கொண் டனர்.

மற்றும், தாங்களே உயர் சாதியார் - மேல் இனத்தார் என் றும், மற்றவர்கள் எல்லாம் தங்களுடைய அடிமைகள், தாசி புத்திரர்கள், தாசர்கள் என்றும் கூறி அதற்கான ஆதாரங் களை சமஸ்கிருத வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் எனப்படும் நூல்களில் எழுதி வைத்துக்கொண்டு பிறமக் களை ஏமாற்றி அதிகாரம் செலுத்திச் சமுதாயத்தின் பெய ரால், மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்தி சுரண்டிப் பிழைத்து வருகின்றனர்.

அறிவுக்கொவ்வாத இந்தக் கோட்பாடுகளையும், சுரண் டல்களையும் ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்தும், சுரண்டலிலி ருந்தும், அவர்களால் நேர்ந்துள்ள மானக்கேடான நிலைமை யிலிருந்தும் திராவிட மக்கள் மீட்சிபெற்று தன்மான - தன்ன றிவு - தன்னியக்க மக்களாக வாழ்ந்து உயர் நிலைமை பெற வேண்டும் என்பதாக தன்மான இயக்கத் தந்தை பெரியார வர்களும் திராவிடர் கழகத்தினரும் கடந்த முப்பது ஆண்டு களுக்கு மேலாக திராவிட மக்களிடையே பிரச்சாரம் செய்து மக்கள் நல்லறிவு பெற பகுத்தறிவாளர்களாகச் செய்து வருகின்றனர்.

இதைக்கண்டு பார்ப்பனர்கள், பெரியாரவர்கள் செய்து வரும் பிரச்சாரம் வெறும் கற்பனை என்றும், ஆதாரமற்ற தென்றும் எதிர்ப்பிரச்சாரம் செய்து மக்களின் அறிவுக் கண் ணில் மண் தூவ முயற்சித்து வருவதும் அறிந்ததே. அண் மையில் காங்கிரசு ஆட்சி மூலவர்களும்கூட இந்தக் குருட்டுக் கோட்பாடு வேதாந்தப் பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டு, தங்களுடைய அரசியல் ஆதிக்கச் செல்வாக்கைப் பயன்படுத்தித் திராவிட மக்களை இழிவுபடுத்தும் ஆரியக் கோட்பாடுகளுக்கும் புராண இதிகாச கட்டுக் கதைகளுக்கும் ஆக்கம் தேட முற்பட்டிருப்பதும் அறிந்ததே.

பெரியார் அவர்களும் மேற்படி கருத்துக்களை, பகுத் தறிவு கொண்டு கணித்தறிந்துதான் கூறி வருகிறார். வேதம், மதம், புராணங்களிலுள்ள மனிதத் தன்மைக்கும், பண்புக்கும், நடைமுறைகளுக்கும், நியாயத்துக்கும், நேர்மைக்கும் தகுதி யற்ற கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் கண்டு தான் அவைகளின் தகுதியற்ற தன்மையை அம்பலப்படுத்தி வருகிறார். ஆனால், இது இவர் மாத்திரம் கற்பனை செய்து கூறுவதாக பார்ப்பனர்களும், வைதீகர்களும் செய்து வரும் பிரச்சாரம் முற்றும் பொய்; சுயநலப் பித்தலாட்டம் என்பதற்கு உலக வரலாற்று ஏடுகளில் ஏராளமான ஆதாரங்கள் இருக் கின்றன.

மேனாட்டுப் பேரறிஞர்கள் மாத்திரமின்றி, தமிழ்நாட்டு அறிவாளர்களும் பார்ப்பனப் பிரமுகர்களும் வங்காளத்தில் தினேஷ் சந்திரசென் போன்ற சரித்திர சமுதாய ஆராய்ச்சிப் பேரறிஞர்களும் தக்க ஆதாரங்கள் தந்துள்ளனர்; தந்து வருகின்றனர்.

முன்ஷி குழுவினர் நூல்


முன்னர் டில்லி சர்க்கார் உணவு மந்திரியாக இருந்து, இப்போது அய்க்கிய மாகாணக் கவர்னராக இருப்பவரும் வடமொழிப் புலமையாளரும் சரித்திர ஆராய்ச்சியாளரும், பார்ப்பனருமான திரு.கே.எம். முன்ஷியை தலைவராகவும் மற்றும் பெரும் ஆலை முதலாளியான ஜி.டி.பிர்லாவைத் துணைத் தலைவராகவும், ஆந்திர பார்ப்பனரும் உலகப் புகழ் பெற்ற தத்துவ சாஸ்திரியும் இப்போது இந்திய சர்க்கார் துணை ஜனாதிபதியாகவிருப்பவருமான டாக்டர். ராதா கிருஷ்ணன், சென்னை பார்ப்பனர் மகா சபைத் தலைவரும் சென்னை அட்வகேட் ஜெனரலாக முன்னர் வேலை பார்த்தவருமான திருவாளர் டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி மற்றும் சில வடக்கத்திக் கலைஞர்கள் ஆகியோரை உறுப் பினர்களாகவும் செயலாளராகவும் கொண்ட பாரத இதிகாச சமீதி என்றொரு கழகம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. சமஸ் கிருத வேதம், பிராமண மதம் ஆகியவற்றிற்கு உயிரளிப்பதே இக்கழகத்தின் குறிக்கோள் என்பது அக்கழக அமைப்பே சுட்டிக்காட்டும்.

இக்கழகத்தார் இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் என்ற பெயரில் ஓர் ஆராய்ச்சி நூல் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளனர். முதல் தொகுப்பு இப்போது வெளிவந்துள்ளது. வேதகாலம் என்ற தலைப்பில் எழுதப் பட்டுள்ள ஆராய்ச்சிக் கருத்துக்கள், பெரியாரவர்களின் கருத்துக்களை முழு அளவுக்கு ஆதரிப்பதாகவுள்ளன. பார்ப்பனர்களைத் தலைவராகவும், அங்கத்தினர்களாகவும் கொண்ட கழகம் பார்ப்பன ஆராய்ச்சி அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து அவர்களுடைய விருப்பு வெறுப்பு களுக்கு ஏற்ப வடிகட்டியும் திருத்தியும் வெளியிட்டுள்ள நூலில் அதுவும் இந்திய சர்க்காரின் சரித்திர ஆதார ஏடாக மதிப்பும் பெறும் சரித்திர நிகண்டில் (என்சைக்ளோபீடியா) பெரியாரவர்களுடைய கருத்துக்கும் அவர் கூறிவரும் மெய்மைகளுக்கும் சரித்திரப் பூர்வமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்நூலுக்குத் திரு.கே.எம்.முன்ஷியே முன்னணிச் சிறப்புரையும் தந்திருக்கிறார். சமஸ்கிருத - வேத நூல் காப்பாளர்களும், ஆராய்ச்சியாளர்களுமான பார்ப்பன பேரறிஞர்கள் தொகுத்துள்ள இந்நூலில் பெரியாரவர்கள் கூறும் மெய்மைகளுக்கு ஆதாரமாகத் தரப்பட்டுள்ள சில முக்கிய கருத்துக்களை மாத்திரம் தொகுத்தளிக்கிறோம் பகுத்தறிவுலகத்தின் நேர்மை நியாயத்தை பொதுமக்கள் கண்டு தெளிவடைய வேண்டும்.

மேலும், சுயநலக் கும்பல்களின் பித்தலாட்டப் பிரசாரம், சுயநல வேடம் ஆகியவற்றை அறிந்து மெய்யறிவு பெற்று தன்னிறவு தன் சக்தியை பயன்படுத்தி, திராவிட மக்கள் தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே நல்வழி வகுத்துக்கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால், தெய்வத்தின், சமுதாயத்தின் பெயரால், விதி பிறவியின் பெயரால், கூறப்படும் உயர்வு - தாழ்வு பொய்க்கூற்றுகளை ஒதுக்கித்தள்ளி, எல்லோரும் சமத்துவமாக வாழவேண்டும் என்ற உயர்நோக்கத்துடன் தான் இக்கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

புராணங்கள் கற்பனையே


புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய்ச் சரித்திரமல்ல இவைகள் மக்கள் வரலாற்றை அறிவதற்கோ சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகாது. இவைகள் வெறும் இலக்கியத் தொகுப்புக்களே என்று திரு. முன்ஷி இந்நூலின் முன்னுரையில் ஒப்புக்கொண்டிருக்கிறார் (பக்கம் - 8).

எனவே, வேத - இதிகாச புராணங்கள், இந்தியாவில் வசித்த முற்கால மக்கள் வரலாறு என்பது பொய்யாகிறது. இந்நாட்டு மக்களுக்குரியதல்லாத கற்பனைக் கோட்பாடு முட்டுக்கட்டைகளே வேத புராணங்கள் என்ற மெய்யும் உறுதிப்படுகிறது. வைதீக கோட்பாடுகளுக்கு சரித்திர அடிப்படை இல்லை என்றும் திரு.முன்ஷியார் வெட்ட வெளிச்சமாக்குகிறார்.

மற்றும், ஆரியர்கள் அனாதி காலமக்கள் (கடவுள் புத்திரர்) சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்று கூறப்படும் கூற்றை இந்நூலுக்கு முன்னுரை தந்துள்ள பேராசிரியர் ஆர்.சி.மஜும்தார் என்பவரே பொய்ப்படுத்துகிறார்.

அதாவது, ஆரியர்கள் சிந்து வெளியில் குடியேறுவதற்கு முன்பா - பின்பா நாகரிக மக்களாயினர் என்று நிர்ணயிப்பது கடினம் என்று கூறி, மாக்கள் நிலையிலும் நாடோடிகளாக வுமிருந்த ஆரியர் சிந்து வெளியில் குடியேறி அங்கிருந்த பழங்குடி மக்களுடன் கலந்து வாழ்ந்தபின் தான் அறிவு வளர்ந்த மக்களாயினர் என்ற உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

உபநிஷத்துக்களும் புராணங்களும்


மற்றும், வேதகாலத்தையும் உபநிஷத்துகள் சூத்திரங்கள் ஆகியவற்றின் காலத்தையும் திட்டமாக நிர்ணயிக்க முடியவில்லை என்கிறார். மற்றும், வேதவித்துகளெனப்படும் உபநிஷத்துக்களுக்கும் பிற்கால புராண இதிகாச கதைக ளுக்கும் தொடர்பு காண இயலவில்லை என்றும், கி.மு. 7ஆவது 8-9ஆவது நூற்றாண்டுகளென சுமாராக அதுவும் யூகத்தால்தான் கணித்து இந்நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறார்.

இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தொகுப்பு அன்றென்றும் பலர் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து சேர்த்த தொகுப்பென்றும் இந்த முன்னுரையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் நீதிபதிகளின் கூட்டுத் தீர்ப்பு போன்றதேயாகும். அதாவது, மறுக்கமுடியாத ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகிறது. அதுவும், வேதகாப்பாளர் எனப் படும் பார்ப்பன அறிஞர்களின் தீர்ப்பு நகலாகிறது.

மற்றும், இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள கருத்துக் களுக்கு ஆதாரமாக, பேராசிரியர் ராதாகிருஷ்ணனும் (ஆந்திர பார்ப்பனர் - பந்துலு) மற்றும் வட இந்திய - மேனாட்டு ஆராய்ச்சியாளரும் எழுதிய நூல்களும், சர்க்கார் வசமுள்ள கல்வெட்டு ஆராய்ச்சி ஏடுகளுமான சுமார் நூற்றைம்பது ஏடுகளின் பெயர்ப் பட்டியலும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.

ரிக்வேதம் முதலிய ஆரியமத நூல்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்டவை என்று இந்நூல் கணித்துக் கூறுகிறது.

வேதங்கள்


வேதங்கள் இந்திய நாட்டு அரசியல் வரலாற்றை அறியத் துணையாகவில்லை. மத - கலாசார வரலாறுகளே காணப் படுகின்றன. எனவே, மக்களின் பழைய வரலாறு யூகத்தால் தான் அறியவேண்டியுள்ளது. இந்த யூகக் கருத்துக்களைப் பலர் பலவாறு வெளியிட்டுள்ளனர். அவை பலவகைச் சந்தேகங்களுக்கும் இடமளிக்கின்றன.

பிற்கால சரித்திரக் குறிப்புக்களிலும் புராணங்கள் ஊடு ருவி மெய்வரலாற்றைக் கணித்தறியவியலாது செய்துள்ளன. ஆந்திரர் ஆட்சி முடிவுக்கு முன் 3000 ஆண்டுகளின் நாட்டு வரலாறு, சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டே யூகிக்க வேண்டியுள்ளது. - என்று இந்நூல் கருத் துத் தெரிவிக்கிறது. எனவே, இந்த புராண வரலாறுகளும், வேதக் கூற்றுகளும் பிராமணியக் கருத்துக்களும் சரித்திர ஆதாரமற்றவை என்பதாகிறது.

அதாவது, சாதாரண நாவல்கள், கட்டுக்கதைகள் என்று தான் தீர்மானிக்கச் செய்கிறது. ஆரிய மதக் கூற்றுக்கு ஆதா ரமாக இருந்த சரித்திர ஏடுகள் நாசமாகி விட்டதாகவும் கட லுண்டுவிட்டதாகவும் கூறப்படும் கூற்றுகளும் வெறும் புராணப் புளுகுகளே வாகின்றவென்பது, இந்நூலில் சுமார் 100 பக்கங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ள கருத்துக்களால் எண்ணச் செய்கிறது.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் விளக்கம்


வேதம் என்றால் அறிவு ஞானம் என்பதே பொருள். இந்த வேதங்கள் சுருதிகளைக் கொண்டவை. சுருதி என்றால் கேட்கக்கூடியது என்றே பொருள்.

(இசைக் கருவிகள் இப்போது இசை சுருதி - (சுதி) கூட்டப்படுவது அறிந்ததே. பிராமண மதப் பிரமாணங்களை (கொள்கைகளை)க் கொண்டதே இது. இந்த வேதம் நான்கு:

1. ரிக் வேதம்

2. யஜுர்வேதம்

3. சாம வேதம்

4. அதர்வணவேதம்

இவைகளில் பல கடவுள்களின் (தேவர்கள்) பெயர் காணப்படுகின்றன.

பிராமணன் என்றால் தலைமைப் பூசாரி. வேதச் சடங்குகளில் தலைமை வகித்துக் கண்காணிப்பது இவர்கள் பொறுப்பு. இவர்களுக்குத் தனி வேதநூல் கிடையாது. மற்ற முப்பிரிவுப் பூசாரிகளின் வேதங்களை அறிந்து அதற்கான நடைமுறைகளைக் கவனிப்பதே இவர்களுக்கு வேலை. பூசாரிகளில் பிராமணர் நான்காம் பிரிவினர். பிராமணர்களே பிரமாணங்களைத் தோற்றுவித்துக் கொண்டனர்.

இந்தப் பிரமாணங்கள் அரண்யகா உபநிஷத்துக்கள் என்ற பிரிவினதாகும். அரண்யகா என்றால் காட்டுக்கு சம்பந்தமான நிகழ்ச்சி முறைகள் என்று அர்த்தம். அதாவது, வனவாசிகள் (சந்தியாசம், துறவு கொண்டவர்கள்) அறிந்து கொள்ளவேண்டிய அல்லது படிக்கவேண்டிய மத நூல்; மதச் சடங்குகளே இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. உபநிஷத்து என்பது தத்துவ நூல். அதாவது, கோட்பாடு விளக்க நூல். இது யூகக் கருத்துக்களையே பெரும்பான்மையாகக் கொண்டது.

- செவ்வாய்க்கிழமை தொடரும்

- விடுதலை நாளேடு, 22. 8 .19

1 கருத்து:

  1. The games alone aren't the one factor attracting clients. Developers have hired high-profile celebrities to assist to endorse them as nicely. The games are 'normalizing playing behavior,' says researcher Sally Gainsbury. At Gambling.com, we suggest you replace your web browser before you start. Most trendy slots 카지노 require an up-to-date browser similar to Google Chrome 30+ that may handle slots programmed in HTML5. We’ve crossed the end line, and it’s time to recap our winners.

    பதிலளிநீக்கு