சனி, 1 ஜனவரி, 2022

திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை- 2021

 

திராவிடர்களுக்கு ஒரே ஒருவர்தான் தோள் கொடுத்தார்-அவர்தான் தந்தை பெரியார் என்ற மாமனிதர்!

பெரியாரின் தோள்மீதுதான் எல்லோரும் ஏறி நிற்கிறார்கள்;

அவர் எல்லோரையும் ஏற்றுக் கொள்வார்!

திராவிடர் திருநாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னைஜன.29 திராவிடர்களுக்கு ஒரே ஒருவர்தான் தோள் கொடுத்தார்அவர்தான் தந்தை பெரியார் என்ற மாமனிதர்எல்லோரும் தந்தை பெரியாரின் தோள்மீதுதான் ஏறி நிற்கிறார்கள்பெரியாரின் தோள் இருக்கிறதேமிக அகலமான தோள்தமிழனுக்குத் தடித்த தோல்பெரியாருக்கு விரிந்த தோள்அவர் எல்லோரையும் ஏற்றுக் கொள்வார்என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.  பல்துறை சாதனையாளர்களுக்கு பெரியார் விருது வழங்கி விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தமிழர் பண்பாட்டு கலை விழா

மிகுந்த எழுச்சியோடும்மன நிறைவோடும்நம் அனைவருடைய மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய  தமிழர் பண்பாட்டு கலை விழா என்று சொல்லக்கூடிய இந்த விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் தலைவர் மானமிகு அய்யா .நடராசன் அவர்களே,

இந்நிகழ்வில் நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய மேனாள் நீதிபதி மானமிகு இரா.பரஞ்ஜோதி அவர்களேதொடக்கவுரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களேமுன்னிலை ஏற்றிருக்கின்ற கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களேநண்பர்கள் பன்னீர்செல்வம் அவர்களேமஞ்சை வசந்தன் அவர்களேஇராதமிழ்ச்செல்வன்  அவர்களேமயிலை கிருட்டிணன் அவர்களேதோழர் ஒளிவண்ணன் அவர்களேபிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களேநன்றியுரை கூறவிருக்கக் கூடிய தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களேஇணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய மானமிகு இறைவி அவர்களே.

கடந்த ஆண்டு பல்வேறு சங்கடங்கள் நிறைந்ததாக இருந்தாலும்கூடதுன்பத்திற்கு இடையில் கொஞ்சம் இன்பம் என்று சொல்லக்கூடிய வகையில்மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய நம்முடைய இயக்கத் தோழர்கள்நேரிடையான இயக்கத் தோழர்கள் அல்ல.  இயக்கத் தோழர் என்று சொல்கிறாரேகருப்புச் சட்டை அணிந்திருப் பதால் அப்படிச் சொல்கிறாரோ என்று நினைக்கவேண்டாம்இயக்கம் என்று சொல்லும்பொழுது திராவிடர் கழகம் மட்டும் இயக்கமல்லபெரியாரை எங்கெல்லாம் யாரெல் லாம் பயன்படுத்துகிறார்களோஅவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதற்கு அடையாளம் இந்த இரண்டு பெரும் போர்வாள்கள்.

கருத்து அறிவாயுதங்கள் - இவர்கள் இருவரும் கலைத்துறையில் பூத்த நறுமலர்கள்காய்த்து கனிந்த கனிகள்இவர்களை அழைத்து நாம் பாராட்டுகிறோம் என்று சொன்னால்எங்கள் குடும்பத்தில் அறிவுக்குப் பஞ்சமில்லைஆற்றலுக்குப் பஞ்சமில்லைதிறமைக்குப் பஞ்சமில்லைதுணிவுக்குப் பஞ்சமில்லை என்பதற்கு அடை யாளங்கள் இவர்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் சிறப்பு என்னவென்றால்இங்கே வந்து நான் அமர்ந்தவுடன்எதிர் வரிசையில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தேன்அங்கே அய்யா ஜெயரஞ்சன் அவர்கள் அமர்ந்துள்ளார்.

உங்களையெல்லாம் பார்க்கின்றபொழுது எனக்கு இதை விட பெரிய டானிக் வேறு எதுவும் கிடையாது

தமிழ்நாட்டில் இன்றைக்குப் பொருளாதாரத்தைப்பற்றி விலாவாரியாகவும்துணிச்சலாகவும் கருத்தைச் சொல்லக் கூடிய ஒரு தெளிவடைந்த பொருளாதார நிபுணர் ஒருவர் இருக்கிறார் என்றால்,  நாம் பெருமைப்படக்கூடியவர் அய்யா ஜெயரஞ்சன் அவர்கள்அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஇந்நிகழ்ச்சியில் நேரிடையாகக் என்னை கலந்துகொள்ளவேண்டாம் என்று சொன்னார்கள்அதை மீறித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்உங்களையெல்லாம் பார்க்கின்றபொழுது எனக்கு இதை விட பெரிய டானிக் வேறு எதுவும் கிடை யாதுஇதைவிட நல்ல மருந்து வேறு எதுவும் கிடையாது.

அய்யா ஜெயரஞ்சன் அவர்களுக்குப் பக்கத்தில் அஜயன் பாலா அமர்ந்திருக்கிறார்அவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லவேண்டுமானால்இந்த கரோனா காலத்தில்எல்லோரும் வீட்டில் முடங்கிக் கொண்டிருக் கின்ற இந்த காலகட்டத்தில்ஒரு அற்புதமான பணியை செய்திருக்கிறார்.

என்னுடைய மகள் சிகாகோவிலிருந்து தொலைபேசி யில் பேசினார்அவர் என்னிடம், ‘‘அப்பாஅய்யா தந்தை பெரியாரைப்பற்றி அஜயன் பாலா சோசியல் மீடியாவில்  பேசியிருக்கிறார்அது தொடர்ச்சியாக வருகிறதுஅதை உங்களுக்கு அனுப்புகிறேன்அதைப் பாருங்கள்'' என்றார்.

இங்கே இருக்கிறவர்தான் பேசுகிறார்பொதுவாக நான் தொலைக்காட்சி பார்ப்பதில் நேரத்தை செலவழிப்பதில்லைபுத்தகம் படிப்பதுஎழுதுவது என்கிற பணிகள்தான் அதிகமாக இருக்கும்யாராவது இந்நிகழ்ச்சியைப் பாருங் கள்அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள் என்று சொன்னால் மட்டுமே பார்ப்பேன்.

அஜயன் பாலா அவர்கள்அய்யா தந்தை பெரியாரைப்பற்றி ஒரு பெரிய தொடரில் மிக அழகாக அவர் சொல்லிய முறை இருக்கிறதே  அதனை ஒவ்வொரு குடும்பத்தினரும் கேட்கவேண்டும்.

ஒரே ஒருவர்தான் தோள் கொடுத்தார்அவர்தான் தந்தை பெரியார் என்ற மாமனிதர்!

அஜயன்பாலா அவர்களைப்பற்றி ஒரு அருமையான கருத்தை சொல்லவேண்டும்எதற்காக இதனை சொல்லுகி றேன் என்றால்நமக்கு அறிவுஆற்றல்திறமைக்குப் பஞ்சமே கிடையாதுபுதிய தலைமுறையினர் ஏராளமா னோர் வருகிறார்கள்அவர்களுக்கு கட்சி முத்திரையோவேறு முத்திரையோ கிடையாதுஅஜயன்பாலா அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்அவர் யாருடைய தோளின்மீதும் ஏறவில்லைஒரே ஒருவர்தான் தோள் கொடுத்தார்அவர்தான் தந்தை பெரியார் என்ற மாமனிதர்எல்லோரும் தந்தை பெரியாரின் தோள்மீதுதான் ஏறி நிற்கிறார்கள்பெரியாரின் தோள் இருக்கிறதேமிக அகலமான தோள்.

தமிழனுக்குத் தடித்த தோல்பெரியாருக்கு விரிந்த தோள்அவர் எல்லோரையும் ஏற்றுக் கொள்வார்அவர் நாமம் போட்டவராவிபூதி பூசுகின்றவராஎன்றெல்லாம் பார்க்கமாட்டார்நம்மவரா என்றுதான் பார்ப்பார்;  அந்த உணர்வு படைத்தவரா என்றுதான் பார்ப்பார்.

உடனேஉயர்த்துஉயர்த்துமேலே உயர்த்துஎதிரியைப் பார்அவன் எப்படி பேசுகிறான் என்பதைப் பார்ஒரு பொடிப் பயலை உட்கார வைத்துக்கொண்டுபெரியவாள் என்கிறான்புதிய பெரிவாள் என்கிறான்அவாள் என்கிறான்பெரியவாபெரியவாபெரியவா என்று சொல்கிறான்.

அஜயன்பாலா

நம்மாள் உள்ளபடியே பெரிய ஆள் என்றாலும்அவர்தானே - இவர்தானே - நேற்று அங்கே இருந்தவர் தானே என்று பேசுகின்ற மனப்பான்மையை மாற்றிக் காட்டக்கூடிய தத்துவத்திற்குப் பெயர்தான் பெரியார்அதுதான் திராவிடம்.

அஜயன்பாலா அவர்களைப்பற்றி சொல்லவேண்டும்இந்த அரங்கம் அறிவார்ந்த அரங்கமாகும்.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதுமாலை 6 மணியளவில் அவருடைய இல்லத்திற்கு அவர் வரச் சொல்லிசென்றிருந்தோம்.

எண்பேராயம் போன்று ஒரு குழு கூடும்.  என்னைப் பார்த்ததும், ‘‘ஆசிரியர் வாங்க!'' என்று சொல்வார்அமைச்சர்களும் அங்கே இருப்பார்கள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

ஒருநாள் அந்தக் குழு கூடும்போது, ‘‘ஆசிரியர் இன்னும் வரவில்லையா?'' என்று கலைஞர் அவர்கள் அங்கே இருந்தவர்களிடம் கேட்டார்.

"தொலைபேசியில் சொல்லியிருக்கிறோம்ஆசிரியர் அவர்கள் வந்துவிடுவார்என்று அவரிடம் சொன்னார் சண்முகநாதன் அவர்கள்.

ஏதோ அவசரம் போலிருக்கிறது என்றுநான் அங்கே சென்றேன்.

என்னைப் பார்த்ததும், ‘‘வாங்க ஆசிரியர்உங்களிடம் ஒரு செய்தியை அவசரமாக சொல்லவேண்டும்'' என்றார்.

"இந்த வாரம் ‘ஆனந்தவிகடன்படித்தீர்களா?" என்று கேட்டார்.

"இல்லைஎன்றேன்.

"அந்த புத்தகத்தில்பெரியாரைப்பற்றி ஒருவர் கட்டுரை எழுதுகிறார்நீங்கள் கூட அப்படி எழுதமாட்டீர்கள்அவ் வளவு சிறப்பாக இருக்கிறது;  அதனை நீங்கள் படியுங்கள்அந்த புத்தகம் இங்கே இருக்கிறதுஎன்றார்.

அஜயன்பாலா அந்தக் கட்டுரையின் தொடரை ஆரம் பித்திருந்தார்.

கலைஞர் அவர்கள் அதனைப் படித்து சுவைத்து சொன்னார்.

அதற்குப் பிறகுதான் நான் அஜயன்பாலா அவர்களு டைய திருமணம் மற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் சென்றேன்.

ஊடக செய்தியாளர் செந்தில்

அதேபோன்றுஇங்கே அமர்ந்திருக்கும் நம்முடைய செந்தில் அவர்கள்ஊடக செய்தியாளர் அவர்.

ஊடகத் துறையில்என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டேன்எனக்கு இந்த மடம் இல்லை என்றால்சந்தை மடம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்குத் துணிச்சலோடு இருக்கக்கூடியவர்தான் செந்தமிழன் செந்தில்.

அதேபோன்றுஎங்களுடைய ஒளிவண்ணன்இதே போன்று இந்த  அரங்கத்தில் அமர்ந்திருக்கின்ற ஒவ்வொரு வரைப்பற்றியும் சொல்லலாம்.

சாக்கடையை விட  மோசமானது கங்கை நீர்

பெரியார் விருது பெற்ற இந்த இருவரும் பேசிய கருத்துகளைக் கேட்டிருப்பீர்கள்.

பெரியாரை ஒழிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பைத்தியக்காரர்கள்பெரியாரை ஒழிக்கலாம் என்று முயற்சி செய்துஇப்போது சாக்கடையை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் சந்தனத்தில் இருக்கிறோம்நீங்கள் சாக் கடையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்கங்கை நீருக்காக காத்திருக்க முடியாது - ஆகவேசாக்கடை நீரை தெளித்தாவது சரி செய்துகொள்ளுங்கள் என்கிறார்கள்.

சாக்கடையை விட  மோசமானது கங்கை நீர் - இதனை நான் சொல்லவில்லை - இதற்காக 2,000 கோடி ரூபாயை வீணாக்கினீர்களே என்று உச்சநீதிமன்றம் கேட்டது.

இன்றைக்குக் கங்கை நீரை குடித்துவிட்டுநிறைய பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறார்கள்.

கங்கா புராஜெக்ட் என்றால் என்ன அர்த்தம்?

திராவிடப் பொழில்காலாண்டு இதழ் வெளியீட்டு விழா

புனிதகங்கையாம்புனிதமாக இருந்திருந்தால்எவ் வளவு தூய்மையாக இருக்கவேண்டும்ஆனால்இந்த சாக்கடைகளும்,  புனித'ங்கணளும் சேர்ந்து திராவிடத்தை ஒழிப்போம்திராவிடம் குறுகிவிட்டது என்று சொல்கிறார் களேஇதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு கிடையாது என்பதற்கு அடையாளம்தான் ‘திராவிடப் பொழில்காலாண்டு  இதழ் வெளியீட்டு விழாநான் இந்த விழா விற்குக் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணமேதிராவிடப் பொழில் வெளியீட்டு விழாவினால்தான்.

உலக அளவில் திராவிடக் கருத்தை பரப்ப இன்றைக்கு எல்லா நாடுகளிலிருந்தும் வெளியீட்டு விழாவில் பேசினார்கள்.

திராவிடம் என்பது என்ன?

திராவிடம் என்பது சமத்துவம்

திராவிடம் என்பது பகுத்தறிவு

திராவிடம் என்பது சுயமரியாதை

திராவிடம் என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான்.

ஆகவேஅப்படிப்பட்ட அந்தக் கருத்தைமிகத் தெளிவாக உள் வாங்கி - அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து என்ற அளவில் அது மிகத் தெளிவான வாய்ப்பாக அமைந்தது.

பெரியார் விருது பெற்றிருக்கும் இந்த இரண்டு பேருடைய உழைப்பு என்பது சாதாரணமானதல்ல.

போஸ் வெங்கட்

திரைப்படங்களை நானோகவிஞரோ பார்ப்பது கிடையாதுகொள்கை ரீதியான திரைப்படம் வெளி வந்திருக்கிறது - அதனை நீங்கள் பார்க்கவேண்டும் என்று அழைத்தபோது,  செல்வோம்அப்படித்தான் இவருடைய திரைப்படத்திற்குச் சென்றோம்.

முக்கியமானவர்களைப்பற்றி சொல்லும்பொழுது சில குறிப்புகளைச் சொல்வார்கள்மெட்டி ஒலி என்ற தொடர் தொலைக்காட்சியில் வருகிறதேஅந்தத் தொடரில் நடித்தவர்தான் போஸ் வெங்கட் என்பார்கள்அந்தத் தொடர் நீண்ட காலத்திற்கு முன்பு தயாரித்ததுஇப்பொழுது மீண்டும் மீண்டும் அந்தத் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

இப்பொழுது வெளிவரும் திரைப்படம் மூன்று நாள்கள் ஓடினால்மூன்றாவது நாள் வெற்றிகரமான நாள் என்று போஸ்டர் அச்சடித்து ஒட்டுகிறார்கள்.

அந்த அளவில் இருக்கும்பொழுதுஎங்கள் தோழர்க ளுக்குஎங்கள் இனத்தவருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்பதற்கு அடையாளம் அவர்.

அந்தத் திரைப்படத்திற்கு நான் சென்றிருந்தேன்ஆணவக் கொலை எந்த அளவிற்கு இருக்கிறது என்ப தற்குஒரு கொள்கையை முன்னிலைப்படுத்திஅந்தத் திரைப்படத்தை எடுத்திருந்தார்கள்.

கரு.பழனியப்பன்

அதுபோலவேகரு.பழனியப்பன் அவர்கள்அந்தக் கரு என்பதை எப்படி வேண்டுமானால்விரித்துக் கொள்ளலாம்கருத்த பழனியப்பன் என்றும் இருக்கலாம்.

கருப்புக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற மரியாதை இருக்கிறது பாருங்கள் - கருப்புதான் அமெரிக்காவையே ஆட்டி வைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

அந்த அளவிற்கு ஒரு பெரிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறதுஇவர்கள் கருப்புச் சட்டை அணிந்திருக் கிறார்களே என்று நீங்கள் நினைக்கவேண்டாம்எல்லா கட்சிக்காரர்களும் இன்றைக்குக் கருப்புச் சட்டை தைத்து வைத்திருக்கிறார்கள்.

எந்தக் கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்தினாலும்கருப்புச் சட்டை அணிந்துதான் போராடுகிறார்கள்கருப் புச் சட்டை இன்றைக்குப் பொதுவுடைமை ஆகிவிட்டது - தனியுடைமை அல்ல.

தமிழர்களேபொங்கல் திருநாள் என்று சொல்லுகின்ற நேரத்தில்,  தந்தை பெரியார் இல்லை என்றால்நாம் இந்த விழாவைக் கொண்டாட வாய்ப்புக் கிடைத்திருக்குமாதிராவிட இயக்கம் இல்லை என்றால்இந்த வாய்ப்புக் கிடைத்திருக்குமா?

அதேபோன்றுமுத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று  அறிவித்தார்அந்த அறிவிப்புக்காக ஒரு கல்வெட்டினை தந்தை பெரியார் நினைவிடத்தில் அமைத்தோம்.

ஆட்சி மாறியவுடன்ஆரியம் ஆட்சிக்கு வந்தவுடன்அதனை தலைகீழாக மாற்றிவிட்டோம் என்றார்கள்ஆனால்நன்றாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களேஇன்னும் அய்ந்தே மாதங்களில்ஆட்சி மாற்றம் வரப் போகிறதுஅப்பொழுதுமீண்டும் தை முதல் நாள்தான்தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் இட்ட ஆணை செயல்படுத்தப்படும்.

அண்ணாவிடம் கேட்ட கேள்வியும் -

அவரது பதிலும்!

அண்ணா அவர்களைப் பார்த்து,

"பத்தாண்டுகளில் நீங்கள் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறீர்களேஅது எப்படி?'' என்று கேட்டார்கள்.

மற்ற தலைவர்களாக இருந்திருந்தால், ‘‘என்னுடைய சாமர்த்தியம்'' என்று சொல்லியிருப்பார்கள்.

ஆனால்அண்ணா அவர்கள் அடக்கத்தின் சிகரம்பெரியாரிடத்திலிருந்து அவர் கற்றுக் கொண்ட கருத்து அதுதான்.

அவர் சொன்னார், ‘‘நீங்கள் தவறாக சொல்கிறீர்கள்நான் பத்து ஆண்டுகளில் இந்த வெற்றியைப் பெறவில்லைஎங்களுடைய தாத்தா நீதிக்கட்சி'' என்றார்.

‘‘நீதிக்கட்சியை, 150 அடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று சத்தியமூர்த்திகள் சொன்னார்கள்இல்லைமீண்டும் நாங்கள் உயிர்த்தெழுந்து இருக்கிறோம்அதனுடைய தொடர்ச்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்'' என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

ஆகவேஇந்த இயக்கத்தை அழித்துவிடலாம்ஒழித்துவிடலாம் என்று சொல்லிநவீன புரோக்கர்கள் யாராவது முயற்சி எடுத்தால்உங்களுக்கு புரோக்கரேஜ் கிடைக்குமே தவிரவெற்றி கிடைக்காது.

கடந்த நாடாளுமன்றத்  தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எப்படி இருந்தன?

(தொடரும்)

"போராடிப் பெற்ற உரிமைகள் இன்றைக்குப் பறிபோகின்றன" அ.தி.மு.க. ஆட்சிக்கு விடை கொடுப்பீர்!

பெரியார் விருது பெற்றவர்கள் - எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள்!

திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னைஜன.30  பெரியார் விருது பெற்றவர்கள் - எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள்!  நம்முடைய தலைவர்கள் "போராடி பெற்ற உரிமைகள் இன்றைக்குப் பறிபோகின்றன"  .தி.மு.ஆட்சிக்கு விடை கொடுப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.  பல்துறை சாதனையாளர்களுக்கு பெரியார் விருது வழங்கி விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தமிழ்நாட்டினுடைய மீட்சி இருக்கவேண்டும் - திராவிடருடைய மீட்சி இருக்கவேண்டும்!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கூட்டணி வெற்றி பெறும்திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவேண்டும் என்று சொல்வதுதிராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அல்ல நண்பர்களே - தமிழ்நாட்டினுடைய மீட்சி இருக்கவேண்டும் - திராவிடருடைய மீட்சி இருக்க வேண்டும் - சுயமரியாதை உருகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

நம்முடைய பிள்ளைகளின் மருத்துவக் கனவு என்னாயிற்று?

மாநில உரிமைகள் என்னாயிற்று?

இன்றைக்கு நாம் பொங்கலோ பொங்கல் என்று சொல்கிறோமேஉள்ளபடியே என்ன சூழல்?

இன்றைக்கு ‘விடுதலை'யில்கூட ஒரு அறிக்கையை எழுதியிருக்கிறோம்அதனை ஊன்றிப் படித்துப் பாருங்கள்நாம் இன்றைக்கு இங்கே பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்ற இதே நேரத்தில்காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கண்ணீரோடு இருக்கிறார்கள்அதனை நினைத்தால்நமக்கு வேதனையாக இருக்கிறது.

விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்

‘‘வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்'' என்று பாடினார் வள்ளலார் அவர்கள்வாடிய பயிரைக் கண்டபொழுது - வாடிய மனிதனைக்கூட அல்ல - அப்படிப்பட்ட ஒரு மனிதநேயம் - உணர்ச்சிபூர்வமான வாழ்க்கை உள்ளவர்கள் தமிழர்கள் - தமிழ்மண் - திராவிட மண்.

ஆனால்இன்றைக்கு அங்கே என்ன நிலை என்று பார்த்தால்அழுகிய பயிரைப் பார்த்துநாங்கள் அழுத வண்ணம் இருக்கிறோமே -எங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரவில்லையே என்று  விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டில்லி தலைநகரில் என்ன சூழல்?

ஒரு திரைப்படம் ஓடினால் போடுவது போன்று, ‘‘52 ஆவது நாள் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது'' என்று செய்தி வெளியிடுகிறார்கள்.

 உலகமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

ஆனால்அதேநேரத்தில்உலகமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தைஅரசியல் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தைஅந்த விவசாயப் பெருமக்கள் பஞ்சாபிலிருந்தும்அரியானாவிலிருந்தும்உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்தும் காட்டியிருக்கிறார்கள்.

70 பேர் இறந்திருக்கிறார்கள்நண்பர்களேநன்றாக நினைத்துப் பாருங்கள் - உழவர் திருநாள் - விவசாயத் திருநாள் - இந்த நேரத்தில் 70 பேர் இறந்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது? 10 ஆம் முறை பேசுகிறோம், 11 ஆம் முறை பேசுகிறோம் என்கிறார்கள்என்ன பேசிஎன்ன பயன்?

எனவேதான்விவசாயத்திற்கு ஏன்  இவ்வளவு அலட்சியம்?

இப்பொழுது மத்தியில் நடைபெறுவது மனுதர்ம ஆட்சி - பல பேருக்குத் தெரியாது.

ஏன் அம்பானிகளுக்கும்அதானிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது?

உழவுக்கும்தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்று பாட்டு பாடுகிறீர்களேஅந்த உழவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இன்றைக்கு விவசாயிகளுடைய நிலை என்ன?

அவர்களுடைய குடும்பத்தின் நிலை என்ன?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்விவசாயிகளுக்கு இரட்டிப்பு மடங்கு உதவி செய்வோம் என்று சொன்னீர்களேஅதைச் செய்தீர்களா?

மூல காரணம் உண்டு நண்பர்களேபெரியார் சிந்தனை என்பது நோய் நாடிநோய் முதல் நாடுவது என்பதுதான்.

ஏன் விவசாயிகளை அலட்சியப்படுத்துகிறார்கள் -

ஏன் விவசாயிகளைப்பற்றி மத்திய அரசு கவலைப் படவில்லை - ஏன் விவசாயிகள்மீது இரக்கப்படவில்லை-

விவசாயிகள் உங்களுடைய தந்திரங்களைக் கண்டு ஏமாறப் போவதில்லை.

நோய் நாடிநோய் முதல் நாடவேண்டும்!

நண்பர்களேசமூக விஞ்ஞானியான தந்தை பெரியார்நோய் நாடிநோய் முதல் நாடக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்அதற்கு அடையாளம் என்ன தெரியுமா?

‘‘உழுதவன் கணக்குப் பார்த்தால்உழக்குக்கூட மிஞ்சாது'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு வேதனை.

மழை அதிகமாகப் பெய்யும் - இல்லையென்றால்வறட்சி.

வறட்சி நிவாரணத்திலும் கொள்ளையடிக்கிறார்கள் - வெள்ள நிவாரணத்திலும் கொள்ளையடிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் மனுதர்மம் -  விவசாயப் போராட்டத்திற்கும்மனுதர்மத்திற்கும் என்ன சம்மபந்தம்என்று நீங்கள் நினைக்கலாம்.

மீண்டும் மனுதர்ம ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் திட்டமிட்டுக் கொண் டிருக்கிறார்கள்நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

விவசாயிகள் போராட்டத்தில் நடைபெறும் பிரச்சினை களை உங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

மனுதர்மம் அத்தியாயம் 10 - சுலோகம் 84.

நாங்கள் ஆதாரமில்லாமல் எதையும் பேசமாட்டோம் என்று இங்கே தோழர்கள் சொன்னார்கள்அய்யா அவர்களும் ஆதாரத்தோடுதான் பேசுவார்.

அந்த அடிப்படையில்,

அசல் மனுதர்மம் என்ன சொல்கிறது?

அசல் மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள்அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப் பட்டதுஏனெனில்இரும்பை முகத்திலே உடைய கலப் பையையும்மண்வெட்டியையும்பூமியையும்பூமியில் உண்டான பல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?’’

 - (மனு அத்தியாயம் 10; சுலோகம் 84).

இதற்கு முந்தைய சுலோகம் கூறுவதென்ன?

‘‘பிராமணனும்க்ஷத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்த போதிலும்அதிக ஹிம்சையுள்ளதாயும்பராதீனமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது.’’ (‘‘அதைச் செய்யாவிட்டால்ஜீவனம் நடக்காத காலத்தில் அதையும் அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்‘’ என்பது முன் சுலோகத்தின் கருத்து)

 - (மனு அத்தியாயம் 10; சுலோகம் 83).

இதற்கு முன் சுலோகம் கூறுவதென்னஅதையும் பார்ப்போம்!

‘‘தன் ஜாதித் தொழில்க்ஷத்திரிய ஜாதித் தொழில் இரண்டினாலும் ஜீவிக்கக் கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல்பசுவைக் காப்பாற்றல்வியாபாரஞ் செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.’’

 - (மனு அத்தியாயம் 10; சுலோகம் 82).

இந்த சுலோகத்திற்குமுன் உள்ள சுலோகம் (அத்தியாயம் 10, சுலோகம் 81) கூறுவது என்ன?

‘‘பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன் தொழிலினால் ஜீவிக்கக் கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகாரந் முதலிய க்ஷத்திரியன் தொழிலினால் ஜீவிக்க வேண்டியதுஏனென்றால்அது அவனுக்கு அடுத்த ஜாதியின் தொழில் அல்லவா?"

(ஆதாரம்: ‘‘அசல் மனுதர்மம்‘’, பதிப்பு 1919, திருவைந்திரபுரம் - கோமாண்டூர் - இராமாநுஜாசாரியார் - வடமொழிசமஸ்கிருத பாஷையில் உள்ளது).

உழவர்களின் சிறப்பை சொல்லும் திருக்குறள்!

நண்பர்களேஇப்பொழுது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைப் பார்ப்போம்.

10 குறளை உழவரைப்பற்றி எழுதி வைத்திருக்கிறார்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.

இரண்டு வேறு கலாச்சாரங்கள் - இரண்டு பண்பாடுகள் - இதற்குப் பெயர் திராவிடம் - அதற்குப் பெயர் ஆரியம் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆரியத்திற்கும்விவசாயத்திற்கும் சம்மந்தமில்லைஆனால்அவனுக்குப் பச்சரிசியை  நம்மாள் கொடுப்பான்அவனுக்காகவே பச்சரிசிநம்மால் புழுங்கலரிசியை சாப்பிடுவான்.

இதைக் கண்டித்துஇதனை வெளிப்படுத்திய ஒரே தலைவர் அறிவு சிந்தனையாளர் தந்தை பெரியார் அல்லவா!

பெரியாருடைய சிந்தனை ஏன் தேவை?

விவசாயிகளை இன்றைக்கு அலட்சியமாக நினைக் கிறார்கள்எந்தக் காலகட்டத்திலும் விவசாயிகள் நன்றாக வாழவில்லைஆனால்இந்த நாட்டிற்குப் பெயர் என்னவிவசாயிகள் நாடு - பெரும்பாலும் விவசாயிகள் இருக்கின்ற நாடு - உழவர்கள் இருக்கின்ற நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

‘‘தமிழிலும் எழுதலாம்'' என்ற அறிவிப்பு!

நம்முடைய இளைஞர்கள் படித்துவிட்டுஇன்றைக்கு வேலையில்லாமல் இருக்கிறார்கள்அஞ்சத் துறையில்  பணி வாய்ப்புக்காக நடத்தப்படும் தேர்வு தமிழில் கிடையாதுதமிழ்நாட்டுக்காரனுக்கு கேள்வித்தாள் தமிழில் கிடையாதுஅதற்காக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடிப் பற்றி தலைவர்கள் அறிக்கை விட்டவுடன்ஊடகங்கள் அதனைப் பெரிதாக செய்தி வெளியிட்டவுடன், ‘‘தமிழிலும் எழுதலாம்'' என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.

இதற்கு என்ன அர்த்தம்நீங்கள் என்ன எங்களுக்குப் பிச்சை போடுகிறார்களா?

நண்பர்களேநீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வியில் கை வைத்தார்கள் -

சமூகநீதியை நம்முடைய தலைவர்கள் போராடிப் பெற்றதினால்தான்இன்றைக்கு நாம்நம்முடைய பிள்ளைகளும் படித்திருக்கின்றோம்.

ஒரு மூன்று தலைமுறைக்கு முன்பு பார்ப்போமே யானால்,  நம்முடைய தாத்தா படித்தவராஉங்களுடைய தாத்தா படித்தவராஎன்னுடைய குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரிஉங்களுடைய குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - எஸ்.எஸ்.எல்.சிபடித்திருப்போமாபெண்கள் படித்திருப்பார்களா?

பெரியார் என்ற மாமனிதர் இல்லையானால்,

திராவிடர் இயக்கம் இல்லையானால்,

கம்யூனல் ஜி.என்கிற வகுப்புரிமை இல்லையானால் நாமெல்லாம் படித்திருக்க முடியுமா?

"போராடிப் பெற்ற உரிமைகள் 

இன்றைக்குப் பறிபோகின்றன"

தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் எல்லாம் போராடிப் பெற்ற உரிமைகள்  இன்றைக்குப் பறிபோகின் றனவேஇதற்கெல்லாம் என்ன வழி என்பதை நினைத்துப் பாருங்கள்.

எனவேதான்இளைஞர்களேஇன்றைக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றனவெளிமாநிலத்துக் காரர்கள் இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள்வேலை வாய்ப்புகளில் நம்முடைய இளைஞர்களுக்கு இடமில்லைபக்கத்து மாநிலங்கள் என்ன சொல்லுகின்றன தெரியுமா? 80 சதவிகித வேலை வாய்ப்புகள் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் என்றுஅவனுக்கு வகுப்பு வாதம் கிடையாதாநாம் பயப்படவேண்டுமா?

இதற்கெல்லாம் ஒரே தீர்வு நண்பர்களேவருகின்ற தேர்தலில்தி.மு.கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

.தி.மு.ஆட்சிக்கு விடை கொடுப்பீர்!

.தி.மு.ஆட்சிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தப் பொங்கல் நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூளுரை என்னவென்றால்தி.மு.கூட் டணியை வெற்றி பெறச் செய்வதுதான்அது தி.மு..விற்காக அல்ல.

பெரியார் அவருடைய அனுபவத்தில் சொன்னார்கடைசியாக தியாகராயர் நகரில் உரையாற்றும்பொழுது சொன்னார்.  நான் சொல்கிறேன்நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - ‘‘பார்ப்பான் வெளிப்படையாகப் பேசுவ தற்குத் தயங்கிய விஷயங்களைஇனிமேல் வெளிப் படையாகதாராளமாகப் பேசுவான்'' என்று சொன்னார்.

அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்றைய காலகட்டம் உங்களுக்குத் தெளிவாக  தெரிவிக்கும்.

ஆகவேதான் நண்பர்களேஉங்களுடைய பெற்றோ ருக்குச் சொல்லுங்கள்உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்இளைஞர்களேஏமாந்து விடாதீர்கள்!

பெரியார் விருது பெற்றவர்கள் -

எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள்

இன்றைக்குப் பெரியார் விருது பெற்றவர்கள் - எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள்இவர்களை நாங்கள் பாராட்டுகிறோம்உற்சாகப்படுத்துகின்றோம்.  எங்களுக்கு இவர்கள்தான் துருப்புகள் - இவர்கள்தான் ஆயுதங்கள்இப்பொழுது நடப்பது என்பது இனப்போராட்டம் - அரசியல் அல்லஅதில் இவர் முக்கியமாஅவர் முக்கியமாஎன்பதல்ல.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தி.மு..வுக்காக அல்லஉங்களுடைய பிள்ளைகளுக்காக - உங்களுடைய பேரப் பிள்ளை களுக்காக - உங்களுடைய பெண்கள் படிக்கவேண்டும் என்பதற்காக -உங்களுடைய பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

விவசாயிகளின் கண்ணீரை எப்படித் துடைக்க முடியும் -

தாய்மார்களின் கண்ணீரை எப்படித் துடைக்க முடியும் -

உள்ளூர் இளைஞர்களுக்கு எப்படி வேலை வாய்ப் பைக் கொடுக்க முடியும்?

பா...வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதால்அவர்கள் பகிரங்கமாக என்ன சொல்கிறார்கள் என்றால்தி.மு.ஆட்சிக்கு வரக்கூடாதாம்.

அதற்காக விபீஷ்ண ஆழ்வார்களையெல்லாம் பிடிக்கிறார்கள்அந்தக் குதிரையை தயார் செய்கிறோம்இந்தக் குதிரையைத் தயார் செய்கிறோம் என்று சொன்னார்கள்அப்பொழுதே நாங்கள் சொன்னோம்,

தி.மு.என்கிற ரேஸ் குதிரை என்பது

மக்களால் தயாரிக்கப்பட்டது

‘‘மாயக் குதிரைநொண்டிக் குதிரைசண்டிக் குதிரைவண்டிக் குதிரைஜட்கா குதிரை இவையெல்லாம் ரேஸ் குதிரை என்ற தி.மு..வின் முன் நிற்காதுஎன்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்தி.மு.என்கிற ரேஸ் குதிரை என்பது மக்களால் தயாரிக்கப்பட்டது.

எனவேதான் நண்பர்களேநான் ஏதோ தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள்எங்களுக்கும்தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.

எங்களுடைய பிள்ளைகளுக்காக கேட்கிறோமாஅல்லது நாங்கள் பதவிக்குப் போகவேண்டும் என்பதற் காகக் கேட்கிறோமா?

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால மான வாழ்விற்காகத்தான்.

மானமும்அறிவும் மனிதருக்கு அழகுஇன்றைக்கு மானத்தை விட்டுக் கொண்டிருக்கிறோமே -

விவசாயம் என்பது ஒரு மாநிலத்தினுடைய உரிமை- 

மத்திய அரசுவேளாண் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்புமாநிலங்களைக் கலந்தாலோசித் தார்களா?

அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதேஇண்டர் ஸ்டேட் கவுன்சில் - அதனைக் கூட்டியிருக்கிறார்களா?

இதை அத்தனையும் கேட்கவேண்டுமானால்,  உண்மையான திராவிடர் இயக்கத்தால்தான் முடியும்அதைச் செய்யவேண்டும்.

ஆகவேதான் நண்பர்களேஇங்கே இருந்து நீங்கள் செல்லும்பொழுதுஒரு திட சித்தத்தோடு செல்லவேண்டும்.

ஒரே ஜாதி என்று சொல்வதற்குத்

தயாராக இருக்கிறீர்களா?

ஒரே நாடுஒரே மொழிஒரே மதம்ஒரே தேர்தல்ஒரே ரேசன் கார்டு என்கிறார்களேஒரே ஜாதி என்று சொல்வதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

ஒரே ஜாதி என்று சொல்லுங்களேன்.

செட்டியார்முதலியார் போன்ற நம்மாட்களில் பெரிய மணியைகொடுத்து ஆட்டச் சொல்கிறார்கள்.

கோவில் கருவறைக்குள் சின்ன மணியைத் தூக்கிக் கொண்டு வியர்க்காத அளவிற்கு ஆட்டுகின்றவன் ஒருவன்அவனை காலை தொட்டு நக்குகிறானேஅது மானங்கெட்ட பிழைப்பல்லவாதந்தை பெரியார் என்ற மாமனிதர் இல்லாவிட்டால்நமக்கு முதுகெலும்பு இருக்குமாஏன் நிமிர்ந்து நில்லுங்கள் என்று சொல்கிறோம்.

காலில் விழுகின்ற கலாச்சாரம் பெரியாரிடம் உண்டாஆனால்வடநாட்டில் பாருங்கள்யாரையாவது பார்த்தால்காலில் விழுந்து தொட்டுக் கும்பிடுவார்கள்; ‘ராம் ராம்என்பார்கள்.

ஆனால்இங்கே ராமன் கதையும் நடக்கவில்லைசென்ற தேர்தலில் கிருஷ்ணன் கதையும் நடக்கவில்லை.

எனவே இனிமேல் நமக்கு இவையெல்லாம்  பயன்படாது - திருக்குறள் ரொம்ப நல்ல குறள்திருவள்ளுவர் மகா பங்களித்து இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்இதைச் சொன்னால்எங்கள் ஆட்கள் வாக்களித்துவிடுவார்களா?

உத்தரகாண்டில்திருவள்ளுவர் சிலையை  நீங்கள் எங்கே போட்டீர்கள் என்பதை மறந்துவிட்டோமா?

அவர்களுடைய முகமூடியைக் கிழிப்பதற்கு நாங்கள் தேவையில்லை!

அடிக்கடி முகமூடியை மாற்றுவார்கள்அடிக்கடி அவதாரம் எடுக்கிறார்கள் - இப்பொழுது தமிழ் அவதாரம் எடுக்கிறார்கள்அவர்கள் தமிழ் அவதாரம் எடுத்தால்அவர்களுடைய முகமூடியைக் கிழிப்பதற்கு நாங்கள் தேவையில்லைகரு.பழனியப்பன்கள் போதும்போஸ் வெங்கட்டுகள் போதும் - இதோ எதிரில் அமர்ந்திருக்கின்ற அறிஞர் பெருமக்கள் போதும் -  இந்த அறிவாயுதங்கள் போதும்.

எனவேதான்புதியதோர் எழுச்சியை உருவாக்கவேண்டும்.

பொங்கல் நாளில்புதுப் பொங்கலில் நாம் சூளுரைப்போம்மிக முக்கியமாக தெளிவாக சூளுரைப்போம் என்று கூறி,

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறிஇந்த விழாவிற்கு வந்த உங்களுக்கும்விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இப்பொழுது ஏமாந்தால்எப்போதும் விடியல் இல்லை

ஒவ்வொருவரும்பத்து பேரிடம் பிரச்சாரம் செய்யுங்கள் - ஏமாந்துவிடாதீர்கள்!

இப்பொழுது ஏமாந்தால்எப்போதும் இல்லை.

"இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லைஎன்று சொன்னவர்எங்கே போய்விட்டார்!

இப்பொழுது ஏமாந்தால்எப்போதும் விடியல் இல்லை - எப்போதும் விடியல் இல்லை.

மறவாதீர் நண்பர்களேமறவாதீர்!! நன்றிவணக்கம்!

வாழ்க பெரியார்வளர்க பகுத்தறிவு!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

1 கருத்து: