திங்கள், 24 ஜனவரி, 2022

ஆலயப் பிரவேச சட்டத்தை கொண்டு வரவைத்த சுயமரியாதை இயக்கம்



சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926இல் கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் போராட்டம் துவக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் அத்தோடு நிற்கவில்லை. கோயிலுக்குள்ளும் நுழைய 50,222 பேரிடம் கையெழுத்து / கைநாட்டு வாங்கி, அதை திவான் சி.பி.ராமசாமி அய்யரிடம் கொடுத்தார் எம்.ஈ.நாயுடு. தொடர்ச்சியான எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத திருவிதாங்கூர் அரசு பணிந்தது. அதன் விளைவுதான் ஆலயப் பிரவேச சட்டம் (1936).

1933இல் கோயில் நுழைவை எதிர்த்த அதே திவான் சி.பி.ராமசாமி அய்யர்தான், 1936இல் ஆலயப் பிரவேச உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் அனைத்து கோயில்களிலும் அனைவரும் நுழையலாம் என்ற உத்தரவை பிறப்பிக்க முக்கியக் காரணமாக இருந்தது சுயமரியாதை இயக்கம்.
- விடுதலை ஞாயிறு மலர், 21.8.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக