1929:-
செங்கல்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.
இம் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
1. மக்கள் பிறவிகளால் உயர்வு தாழ்வு மறுப்பதோடு அதை ஆதரிக்கிற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை பின்பற்றக்கூடாது.
2. நால் வருணங்களை ஏற்கக் கூடாது.
3. பொது இடங்களை எல்லோரும் அனுபவிக்க உரிமை உண்டு.
4. சாதிப்பட்டங்களை விட்டுவிட வேண்டும்.
5. பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும்.
6. பெண்களும் எல்லாத் தொழிலும் செய்ய சம உரிமை வேண்டும்.
7. பள்ளி ஆசிரியர் வேலைக்கு பெண்களை அதிக அளவில் நியமிக்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக