செவ்வாய், 7 ஜனவரி, 2020

சித்த மருத்துவத்தில் வடமொழிக் கலப்பு- 37

டாக்டர். ப. சிற்சபை

4. இராஜவீதி காஞ்சிபுரம் - 2

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9.3.1985,  10.3.1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், டாக்டர் ப.சிற்சபை அவர்கள் உரை வருமாறு.

தமிழ் மக்கள், தமிழ் மொழியிலேயே பேச, எழுத வழக்கத்தில் இருந்தவர்கள், ஆரியர்கள் தமிழகத்திலே நுழைந்தபின்னர், அவர்கள் பேசுகின்ற வடமொழி என்னும் சமற்கிருத மொழியையும் கலந்துபேசுவதை ஒரு நவீன நாகரிகமாகவும், அழகாகவும் கருதிக் கொண்டுவிட்டனர். சமீப காலத்தில் ஆங்கிலேயன் தமிழகத்திலே புகுந்த பின்னர், வடமொழியைக் கலந்து பேசுவதிலே பெருமை கொண்டது போல் வெள்ளை யன் மொழியான ஆங்கிலத்தைப் பெருமளவு கலந்து பேசியே வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

தமிழர்கள் பிறமொழியைக் கலந்து பேசுவது தான் நாகரிகமெனத் தவறாக எண்ணிக்கொண்டுவிட்டனர். கடவுளை-ஈஸ்வரன் என்றும், தண்ணீரை-ஜலம் என்றும், சோற்றை-சாதம் என்றும், குழம்பை-சாம்பார் என்றும், மிளகுநீரை-ரசம் என்றும், தலை முழுக்கை-ஸ்நானம் என்றும், திருமணத்தை-விவாக முகூர்த்தம் என்றும், வீட்டை-கிரஹமென்றும் கூறுவதிலே மகிழ்ச் சியும் பெருமையும் கொண்டனர்.

அதுபோலவே சித்த மருத்துவத்தை-ஆயுர்வேத மெனவும், சித்த மருத்துவக் குடிநீரை-கிஷாயமென்றும், இளகலை-லேகியமென்றும், நீற்றை-பஸ்பம் என்றும், அமுக்கரா இளகலை-அஸ்வகந்தி லேகியம் என்றும், இலிங்கப் புளிப்பை-ஜாதி ஜம்பீரம் என்றும், தீநீரை-திராவகம் என்றும், மணப்பாகை-சர்பத்து என்றும், துணை மருந்து - அனுபானம் என்றும், காய்ச்சல்-சுரம் என்றும் கூறி வழக்கப்படுத்தி விட்டனர். மேலும் பல சொற்களை அடியில் குறிப்பிடுகின்றேன்.

சில மருத்துவக் கலைச்சொல் விளக்கம்:

- விடுதலை நாளேடு 31 12 19 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக