புதன், 14 மார்ச், 2018

பெரியார் பொருள் சேர்த்தாரா!

பெரியார் நாத்திகம் பேசி பொருள் சேர்த்தார் என்று சொல்லும் இறை தூதர் பீஜே அவர்களே.
நீங்கள் யோக்கியமானவர் தான் என்றால் இதற்கு பதில் சொல்லுங்கோ...

இதோ பெரியார் பேசுகிறார்.
நமது சூத்திர மக்களில் செல்வான், கல்விமான், அரசியல் விளம்பரம், பதவி பெற்ற உலக விளம்பர #சீமான்கள் முதல் எச்சிக்கலை செல்வான்கள் வரையில்-100-க்கு ஒருவர் கூட கவலையோ, மான உணர்ச்சியோ இல்லையே என்ற நாம் காணும்போது-75 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் சாகப் போகிற நான் 35 ஆண்டுகளாக வீடு, வாசல், செல்வம்,தொழில், மனைவி, மக்களை துறந்து சந்நியாசியாக நம் திராவிட மக்களுக்கு இந்தச் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டுமென்றே பாடுபட்டு வந்த-வருகிற நான், ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம், 40ஆயிரம், ஏன்-50 ஆயிரம் ரூபாய் கூட வரும்படி உள்ளதான எனது எஸ்டேட்டைப்
பாழடைய விட்டுவிட்டு, பரதேசியாய்ப் #பிர்யாணங்களுக்கும், #பிரச்சாரத்துக்கும் பொதுமக்களிடம் செலவு பெற்று வாழ்ந்து வரும் நான் இதற்கு, இந்த வர்ணாசிரம தர்ம முறை ஒழிப்புக்கு ஏதாவதொரு காரியம் செய்யாமல் என் உயிர் போக, எப்படி என்னால் விட்டுக் கொண்டிருக்க முடியும்?

#தந்தை பெரியார்.
விடுதலை-தலையங்கம்.
7.5.1953.

-குறிப்பு:தயவுசெய்து தோழர்கள் பகிரவும்.
பட்டுக்கோட்டை கவிமணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக