புதன், 14 மார்ச், 2018

கவிஞர் கண்ணதாசனின் இரங்கற்பா




சரித்திரம் இறந்த செய்தி

தலைவனின் மரணச் செய்தி;

விரித்ததோர் புத்த கத்தின்

வீழ்ச்சியைக் கூறும் செய்தி,

நரித்தனம் கலங்கச் செய்த

நாயகன் மரணச் செய்தி;

மரித்தது பெரியா ரல்ல;

மாபெரும் தமிழர் வாழ்வு!

இறக்கவே மாட்டார் என்று
இயற்கையே நம்பும் வண்ணம்

சிறக்கவே வாழ்ந்த வீரன்

சென்றதை நம்பு வேனா?

மறக்கவா முடியும் அந்த

மன்னனை; அவன் எண்ணத்தைத்

துறக்கவா முடியும்; அய்யோ!

துயரமே  உனக்கே வெற்றி!

- பெரியார் அவர்களின் மறைவை முன்னிட்டு எழுதிய இரங்கற்பா 1974 ஜனவரி 
‘கண்ணதாசன்’ மாத இதழ்

- உண்மை இதழ், 16-31.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக