வியாழன், 22 மார்ச், 2018

ஜீ நியூஸ் தமிழ் இணையத்தில்... பெரியார்!



தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்பு: தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராம சாமி அவர்களின் சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்!!

பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879ஆம் ஆண்டு ஈரோட் டில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற் காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிட மிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக் காகவும், ஜாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். 1. தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னு தாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டது.

2. தந்தை பெரியார் தனது படிப்பை அய்ந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண் டார். 19ஆவது வயதில் திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.

3. 1902ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார். 4. ஆரம்ப காலத்தில் காந்தி கொள் கைகளில் ஈடுபாடு கொண்டு 1919ஆம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலை மையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார்.

5. அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.

6. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டத் திற்கு பிறகு பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.

7. 1925ஆம் ஆண்டு சமுகத்தில் இருக்கும் மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என சுயமரியாதை இயக்கம்  தொடங்கினார். அதே ஆண்டு குடிஅரசு நாளிதழை தொடங் கினார் தந்தை பெரியார். இந்த நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்கு மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள் நடத்தி மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தினர்.

8. 1937ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜ கோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதல மைச்சரானார். அவரின் ஆட்சிக் காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. 1938இல் நீதிக் கட்சியின் சார்பாக பெரியார் இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

9. 1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் நீதிக்கட்சி என்ற பெயரை 1944ஆம் ஆண்டு திராவிட கழகம் என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. 10. 1949ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர் களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்பட்டனர். திராவிடர் கழகம் தலித்துக் களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

11. 1949ஆம் ஆண்டு தனது வழிகாட்டியான தந்தை பெரியாரிடமிருந்து அண்ணாதுரை விலகி, திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

12. இந்து மத கடவுள்கள் மூடநம்பிக்கை களை மக்களிடையே வளர்ப்பதாக கூறி, 1952ஆம் ஆண்டு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார். 13. 1962ஆம் ஆண்டு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் அவருக்கு பொறுப்பை தந்தார். 14. அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் திரிகுனா சென் அவர்களால், தந்தை பெரியாருக்கு யுனஸ்கோ விருது  1973ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வழங்கப்பட்டது.

15. 1973ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில், சாதிமுறையையும், இழிவுநிலை யையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார். இது தான் அவரின் கடைசிக் கூட்டம் ஆகும்.

16. உலகின் மாபெரும் சுயசிந்தனை யாளரும், அழியாத வரலாற்றின் அறிஞரு மான தந்தை பெரியார், டிசம்பர் 24ஆம் தேதி 1973ஆம் ஆண்டு, தனது 95ஆவது வயதில் காலமானார்.

17. தமிழ்நாடு அரசு தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. 18. ஈ.வெ.இராமசாமி பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

19. வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், ஜாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப் பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ் வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். 20. இன்றும் திராவிடர்கள் தலைநிமிர்ந்து சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ் கிறார்கள் என்றால், அதில் தந்தை பெரியாரின் பணி மிகப்பெரியது. மாபெரும் சிந்தனை யாளர் பெரியார் என்றால் அது மிகையாகாது.

-ஜீ நியூஸ் தமிழ் இணையம், 7.3.2018

பெரியார் குறித்து

காங்கிரசு கட்சி டிவிட்டரில் பதிவு



பெரியார் போன்ற மாபெரும் சமூக சீர்திருத்தவாதிகளின் பெருமைகளை, பாஜக தலைவர்கள் மோசமாக பதிவுகளை இடுவது மற்றும் அவர்களின் தொண்டர்கள்  சேதப் படுத்தப்படுவதன்மூலம் ஒன்றும் செய்து விடமுடியாது என்பதை பாஜக நினைவு கொள்ளவேண்டும். நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டர் பதிவு

லெனின் சிலை, பெரியார் சிலைகள்  சேதப்படுத்தப்படுகின்றன. உங்களின் செயல்திட்டம்தான் என்ன? நம்முடைய குழந்தைகளுக்கு நீங்கள் எதை கற்பிக் கிறீர்கள்? இந்த சிலை அரசியலை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.    வன்முறை இனங்கள்மீதான வன்முறையாகி வருகிறது. நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன? வளர்ச்சியா அல்லது சீர்குலைவும், வன்முறை களும்தானா?



நடிகர் விஷால் நடிகர் விஷால் தனது சமூக வலைத் தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித் துள்ளார். அவர் கூறியதாவது:

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவது குறித்த ராஜாவின் கருத்து கண்டிக்கத்தக்கது. நீங்கள் எந்தவொரு தலைப்பிலும் கருத்துத் தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும் பிரச்சி னையை உருவாகுகிறீர்கள். உங்களது கருத்து இதுவரை சரியாக இல்லை. இனி மேலாவது நீங்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என நம்புகிறேன். அதற்கு உங்களுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் இவ்வாறு நடிகர் விஷால் கூறியுள்ளார்

- விடுதலை ஞாயிறு மலர், 17.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக