செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்க்கை சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 50

பேராசிரியர் தி. இராமதாஸ் எம். ஏ. பி.எல்.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரி யர் தி.இராமதாஸ் எம்.ஏ.பி.எல். ஆற்றிய உரை வருமாறு:

13.2.2020 அன்றைய தொடர்ச்சி...

எனவே, வடமொழியில் பார்ப்பனரால் எழுதப்பட்ட வேத, ஸ்மிருதிகள் தமிழ் நாட்டில் ஏறக்குறைய 2300 ஆண்டுகளாகச் செயல்படுத்தப் பட்டுள்ளதை அறியலாம். கல்வி கற்றால் சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும், வேதத்தைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறது மனுஸ்மிருதி; மீறிக்கற்றால் சிரச்சேதம் செய்ய வேண்டுமென விதி செய்யப்பட்டு இராமாயணத்தில் சம்பூகவதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வடமொழியால் தமிழ் எந்த அளவு பாழ்படுத்தப்பட்டது என்பதை தந்தை பெரியார் பிறந்து, தமிழ் மொழி (இயல், இசை) போராட்டம் துவங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில் தமிழில் எழுதப்பட்ட திருமண அழைப்பிதழ்களே சான்று பகரும்.

ஸ்ரீ லக்ஷிமி வேங்கடேச பிரசன்னஹ விவாஹ சுப முஹூர்த்தப் பத்திரிகா.

மகா-ள-ள-ஸ்ரீ...................... அவர்களுக்கு உபயகுசேலபரி. நாளது வருஷம்......................................................தேதி ஆதித்தவாரம் ஸ்வாதி நக்ஷத்திரங் கூடிய சுபயோக சுபதினத்தில் ............................. மணிக்குமேல் ............................ உள் சிம்ஹ லக்கினத்தில் எனது ஜேஷ்ட குமாரத்தி சௌ...........................யை கிராமத்திலிருக்கும் மிராஸ்தார் மகா-ள-ள-ஸ்ரீ..................... கனிஷ்ட குமாரர் சிரஞ்சீவி..........................கன்னிகாதானஞ் செய்து கொடுப்பதாக நிச்சயிக்கப்பட்டு  சுப முஹூர்த்தம் எனது கிரஹத்தில் நடக் கிறபடியால் தாங்கள் இஷ்டமித்திர பந்து ஜன குடும்பேதராய் விஜயஞ்செய்து வதூரர்களை ஆசீர்வதிக்கக் கோருகிறேன்.

தங்கள் விதேயன் -

சமற்கிருதம் 75, தமிழ் வார்த்தைகள் 20 கொண்டதுதான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதப்பட்ட இத் திருமண அழைப் பிதழ். இதற்கு மணிப் பிரவாளய நடை என்று பெயர். இன்றும் பார்ப்பன செய்தித்தாள்கள் இந்த நடையைத்தான் ஆங்கிலச் சொற்களும் சேர்த்துக் கையாளுகின்றன.

இன்றைக்கும் சங்கராச்சாரி தமிழை நீச பாஷை என்று தான் குறிப்பிடுகிறார். கோயில்களில் வடமொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்கிற விதிகளும் கர்ப்பகிரு ஹத்தில் பார்ப்பனன்தான் செல்லலாமென்கிற விதியும் உள்ளது.

இன்றும் சங்கராச்சாரியார் நடத்தும் மடங்களில், பள்ளிக ளில் சமற்கிருதம் தான் பயிற்றுவிக்கப்படுகிறது-பார்ப்பனப் பிள்ளைகளைத் தவிர சூத்திரப்பிள்ளைகளுக்கு அக்கல்விச் சாலையில் இடமில்லை என விதி ஏற்படுத்தியுள்ளனர். பார்ப்பான்தான் சங்கராச்சாரி ஆகலாம்.

பெரிய சீர்திருத்தக்காரர் எனப்படும் தமிழ்நாட்டு வைணவ சமயத் தலைவர் இராமானுசர் தாம் இயற்றிய நூலை வடமொழியிலேயே எழுதினார். 74 பார்ப்பனர் களையே குருமார்களாக்கிச் சென்றார். இன்றைய வரையிலும் பார்ப்பனர்கள்தாம் குருமார்களாகலாம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் விளைத்த குழப்பத்தாலும் பல்லவர்கள் படையெடுப்பாலும் தமிழகம் அல்லற்பட்டு நின்றது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் வேதக் கல்வியையும், சமற்கிருதக் கல்வியையும் இணைத்து சமயத்துக்கும் ஆட்சிக்கும் சமற் கிருதமொழி காஞ்சியில் பல்லவர்களால் பயன்படுத்தப்பட்டது.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே    (குறுந். 40)

என்று வாழ்ந்த தமிழனை, அவனது கொள்கையை, கோட்பாடுகளை, பழக்க வழக்கங்களை கைநழுவ விட்டு, கோவலன் கண்ணகி இவ்விருவரின் பெற்றோரும் மண நிகழ்ச்சி காண மகிழ்ந்து மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி டத் தீவலம் வந்த காட்சியைச் சிலம்பில் காண்கிறோம்.

பல்லவர் காலத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாதாபியைப் படையெடுத்து அங்கிருந்து கொணர்ந்த கணபதி இன்று எங்கும் நிறைநாதமாய், தெரு முனைகளில் எல்லாம் காட்சியளிக்கக் காண்கிறோம்.

மணவிழாவில் தாலி கட்டியதாகச் சங்க காலத்தில் சான்றுகள் கிடையா. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் தான் காணப்படுகிறது.

பார்ப்பனர் சிலப்பதிகார காலத்திலேயே ஏற்றம் பெற்றனர் என்பதற்கு கண்ணகி மதுரைமீது தீயை ஏவியபொழுது பார்ப்பனர்மீது செல்ல வேண்டாமெனக் கூறியதாகத்தானே உள்ளது. (சில. 21-53). சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள அய்ம்பெருங்குழுவில் புரோகிதர் இடம் பெறுகின்றார்.

மேலும், தமிழகத்துச் சிந்தனையாளர்களாகிய சித்தர் களும் வெறுத்தனர், மறுத்தனர். நால்வருணம் ஆச்சிரமம் முதலாம் நலின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை வினை விளையாட்டே ஜாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம், சந்தை வெளியினிலே கோல் நாட்டுவோம் என்றெல்லாம் கடிந்துள் ளனர். பார்ப்பனர்களுக்கு அரசு ஆதரவாக இருந்ததால் வெற்றிபெறவில்லை.

டாக்டர் கே.கே. பிள்ளை எழுதிய தமிழக வரலாறும் பண்பாடும் எனும் நூல் : பக்கம் 153இல் ஆரியரால் விளை விக்கப்பட்ட பண்பாட்டுப் புரட்சியாலும், களப்பிரர்களால் நேர்ந்த அரசியல் புரட்சியினாலும் தமிழர் வாழ்வு சீர்குலைந் தது. அவர்களுடைய மொழிக்கும், நூல்களுக்கும், கலை களுக்கும், பண்பாட்டுக்கும் தீரா இன்னல்களும், இடையூறு களும் நேர்ந்தன. தமிழை வளர்த்த சங்கமும், தமிழ்க் கலை யும் அழிவதற்கு நெருக்கடி ஒன்று தோன்றிற்று என்கிறார். உதயேந்திரம் செப்பேடு-நந்திவர்மன் 108 பார்ப்பனர்களுக்கும் உதயசந்திர மங்கலம் என்கிற ஊரை நந்திவர்மனுடைய படைத் தலைவன் வடநாட்டிலிருந்து பார்ப்பனரைக் கொணர்ந்து குடியேற்றினான் என்று கூறுகிறது. அவர்களின் பெயர்களெல்லாம் வடமொழியில் உள்ளன.

கி.பி. 4-9ஆம் நூற்றாண்டு

தமிழகத்தில் வடமொழியும் ஆரிய சமயங்கள், தத்து வங்கள் ஆகியவையும் புராணங்களும் பெருமளவில் நுழைந்து தமிழர்களின் சமுதாய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன என வரலாறு கூறுகிறது. தமிழர்தம் பண்டைய பண்பாடுகளையும், அய்ந்திணை வாழ்வையும், இசையையும் மறந்து சங்க நூல்களில் காட்டிய அறத்தையும், வாழ்க்கை முறைகளையும் கைநழுவி விட்டனர். சமூகத்தில் குலப்பிரிவுகளும், பார்ப்பனீய மேம்பாடும், வடமொழியின் ஏற்றமும், தமிழ்மொழிக் கலப்படமும் தமிழரின் சமுதாயத்தில் தொடர்ந்து 500 ஆண்டுகள் துறைதோறும் ஏற்பட்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

கடைக் கழகக் கால அளவிலேயே தமிழ் அரசர்கள் பலர் மானச்சூடு தணிந்தவர்களாய், பார்ப்பனர்க்கு அடிபணிந்து வணங்கி, மட முடவர்களாகவும் மத மடையர்களாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதை அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சோழ, பாண்டிய, பல்லவர் காலச் சமூக வாழ்க்கை காட்டுகிறது. ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பதிற்றுப்பத்தில் (63ஆம் பாடல்) பார்ப்பார்க்கு அல்லது பண்பு அறிந்திலையே என்று பாடி யுள்ள நிலையும், சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத் தான் என்னும் மன்னனை தாமரைபல் கண்ணனார் என்ற பார்ப்பனப் புலவன் நின் முன்னோரெல்லாம் பார்ப்பனர் நோவனசெய்யலர் (புறம் 43) என்று குறித்தமையும் காண்க.

பாண்டியர்கள் தம் பெயருக்கு முன்னர் மாறவர்மன், ஜடாவர்மன் என்றும், சோழர் தம் பெயருக்கு முன்னர் ராஜகேசரி, பரகேசரி என்றும் பெயர் சூட்டிக்கொண்டு ஆரிய அடிமையாக அரசோச்சினர். யாகங்கள் செய்து பார்ப்பனர் களுக்குத் தானம் வழங்கினர். ஆரியர்களை தம் அரசவையில் ஆலோசகர்களாக, ராஜகுருவாக, புரோகிதர்களாக, மந்திரி களாக அமர்த்திக் கொண்டனர். வேத நெறி தவறாமல், மனு நீதி தவறாமல் அரசோச்சினார்கள் என்று பார்ப்பனர்களால் புகழப்பட்டார்கள். மனுநீதி என்றால் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பொருள்.

எனவே, ஆரியர்கள் நுழைவால் தமிழ்ச் சமுதாயம் சமற்கிருத மயமாக்கப்பட்டதோடல்லாமல் தன்னுடைய நாகரிகப் பண்பாட்டுகளையும் இழந்தது என்பதுதான் வரலாறு. இந்தியப் பாரம்பரியம் - மிஸீபீவீணீஸீ மிஸீலீமீக்ஷீவீtணீஸீநீமீ க்ஷிஷீறீ.மிமி-றிணீரீமீ 29இல் உள்ளதை ஆதாரமாக எடுத்துக் கூறுகிறேன்.

“Kautilya, the stern realist made no distinction between a dancer and a prostitute. The same rule apply to an actor, dancer ..................... that those who teach prostitutes, female slaves .................... and the art of attracting and captireating the minds of others shall be endowed with maintanence from the state.”

ஆண்டவன் பெயரால் ஆலயங்களை அமைத்து அங்கு கலையின் பெயரால் ஆடலழகிகள், பாடலழகிகளை கவர்ச்சிப் பொருளாக வைத்து மக்களின் மனதை கொள்ளை கொள்ளவும் கவர்ந்து ஈர்க்கவும் தேவதாசி முறையை கௌடில்யர் அரசு முறையாகக் கையாண்டார் எனக் கூறப்படுகிறது.

அதே வெளியீடு அதே புத்தகத்தில் முதல் பாகம் பக்கம் 3-இல் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் சமற்கிருதத்தையும், அதனுடைய பழமை, பழக்க வழக்கங்களும் காப்பாற்றப்பட வேண்டும்; இல்லை யேல் இந்தியாவின் ஒருமைப்பாடு சரிந்து வீழும் என்கிறது.

அதனால்தான் இன்றைய வரையில் பார்ப்பனீயம் தேசீயம் என்ற பெயராலும், தேசத்தின் ஒற்றுமை என்ற பெயராலும் வர்ணாஸ்ரம தர்மத்தையும் வடமொழி சமற்கிருதத்தையும் அரசியல் சட்டத்தில் சங்கராச்சாரியின் ஆசியுடன் பிரிவு 25இல் புகுத்தி தமிழன் என்றென்றைக்கும் ஆரிய அடிமையாக வாழவேண்டும் என்று விதிகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த அடிமைத்தளையிலிருந்து விடுபடாமல் தமிழன்-தமிழினம்-தமிழ் மொழி வாழமுடியாது என்பது உறுதி. 3000 ஆண்டு அடிமைத்தனத்தை ஓர் அறுபது ஆண்டுக்காலத்தில் ஆட்டங் காணச் செய்த தந்தை பெரியாரின் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கை-கோட்பாடுகளை நிறைவேற்றி னால்தான் தமிழினம் மீளும்; இன்றேல் என்றைக்கும் அடி மைக்குழியில் நிலையாக வாழும்.

அரசியற் சிந்தனை மூன்றுடன் தொடர்புடையது. (1) மனிதனின் பண்புகள், செயல்கள், (2) புற உலகுடன் அவனது உறவு-வாழ்வின் பொருளாகவும் குறிக்கோளாகவும் அவன் கொள்வது, (3) இவ்விரண்டின் விளைவாகத் தோன்றுவதாகிய, மனிதன் பிற மனிதருடன் கொள்ளும் கூட்டுறவு. இவற்றுள் மூன்றாவது அரசின் ன்மை, நோக்கம், செயற்பாடு ஆகியன குதுப் பேசுவதாகும். ஏனெனில் மனதின் அவனது குறிக் கோள், அவனுடைய சமூகத் தொடர்புகள், செயற்பாடுகள் ஆகியன ஒன்றோடொன்று உறவுடையவை.

இக்கட்டுரை நிறைவு

-  விடுதலை நாளேடு 28 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக