சனி, 29 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்க்கை சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 49

- பேராசிரியர் தி. இராமதாஸ் எம். ஏ. பி.எல் -

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation)  பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் தி.இராமதாஸ் எம்.ஏ.பி.எல். ஆற்றிய உரை வருமாறு:

11.2.2020 அன்றைய தொடர்ச்சி

தமிழ்நாட்டில் ஈராயிரத்து அய்நூறு (2500) ஆண்டு களுக்கு முன்புகுந்த ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மொழியை உயர்தனிச் செம்மொழி என்றும், ஆண்டவனால் அநாதி காலத்தில் சிருஷ்டிக்கப்பட்டதென்றும், தேவபாஷை என்றும், ஆண்டவனை வழிபட அரசை நடத்த சமற்கிரு தந்தான் உகந்தது என்ற கருத்தைச் சிறுக சிறுக மக்களிடையே அரசர்களின் ஆதரவின் பேரில் புகுத்தினார்கள்.

சர் ஹென்றிமெயின் தன்னுடைய பழமை சட்டம் Ancient Law, என்ற நூலில் (பக்.14) குறிப்பிடுகிறார்,  The Hindu code called laws of Manu which is certainly a Brahmin compilation.“We can see that Brahminical India has not passed beyond a stage which occurs in the history of the families of mankind, the stage at which a rule of  law is not yet discriminated from a rule of religion.” பார்ப்பன இந்தியாவில் மதத்துக்கு அப்பாற்பட்ட எந்தவித சட்டங்களும் வகுக்கப்படவில்லை. உலகில் மற்ற பகுதிகளில் வாழும் மனித இன வரலாற்றில் படிப்படியாக மதத்திற்கு அப்பாற்பட்ட சமஉரிமை அளிக்கும் சட்டங்கள் வகுப்பதில் முன்னேறியது என்பது வரலாற்று உண்மையாகும்.

தமிழ்நாட்டு மன்னர்களை மனுஸ்மிருதியை செயல் படுத்துமாறு பார்ப்பனர்கள் தூண்டி தங்களின் சமூக மேலா திக்கத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைநாட்டிக் கொண்டனர். பல்லவர்கள், களப்பிரர்கள், பிற்காலச்சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசுகள், நாயக்கர் ஆட்சி, மராட்டிய அரசுகள் பார்ப்பனர்களுக்கு முழுமையாக துணை நின்று தமிழ்நாடு முழுதும் பார்ப்பனப் பண்ணையங்களாக மாற்றப்பட்டுவிட்டன என்பதும் வரலாற்று உண்மைகள்.

வேதத்தில் சொல்லப்பட்டவை அநாதிகாலமானது, அழியாதது, மாற்றமுடியாதது என்ற எண்ண அலைகளை மக்கள் மனதில் வேர் ஊன்றச் செய்து அனைத்து மக்களையும் இந்து என்ற ஓர் அமைப்பின்கீழ் தந்திரமாகவும், அச்சுறுத்தி யும் கொணர்ந்தனர்.

திராவிடர்கள்-தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள். பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் - தாசிபுத்ரர் அடிமை கள், தொண்டூழியம் செய்யவென்றே ஆண்டவனால் படைக் கப்பட்டவர்கள் - பிரம்மனுடைய காலில் பிறந்தவர்கள் என்ற எண்ணங்களை வடமொழி இதிகாச - புராண கலாச்சாரத்தின் மூலமாகப் புகுத்திவிட்டனர். தமிழர்கள் தங்களது அடிமை வாழ்வைப்பற்றி சிந்திக்கமுடியாமல் செயலற்று இனஉணர் வற்ற மொழிப்பற்று அற்றவர்களாக வாழத்தலைப்பட்டனர். தமிழர்களை வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிட்டனர். தமிழன் மொழியை மறந்ததால் தன்னிலை யில் தாழ்ந்தான். நிலை தாழ்ந்ததால் நினைப்பும் தாழ்ந்து தமிழினம் அழிந்து உருமாற்றம் பெற்றது.

வர்ணாஸ்ரம தர்மம் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு சூத்திரர்களுக்கு கல்வி தரலாகாது, அவர்கள்தான் உழைக்க வேண்டும், பார்ப்பனர்கள்தான் இராஜகுருவாகவும், மந்திரி களாகவுமிருக்க தகுதி பெற்றவர்கள், அரசியலை வழிநடத்திச் செல்ல உரிமை படைத்தவர்கள் என்று அரசு சட்டத்தை வகுத்தான். அதை செயலும்படுத்தினான். பார்ப்பனர்கள் நிலம் வைத்துக்கொள்ளலாம், ஆனால் ஏர்பிடிப்பது பாபம் என்று எழுதி வைத்துள்ளான். நான்கு ஜாதி முறைகள் வகுக் கப்பட்டு அந்த விதிமுறைகளை மீறுபவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென எழுதியுள்ளான். இந்தமுறைதான் இன்றைய வரையில் இந்நாட்டின் அரசியல் சட்டமாக உள் ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்நிலை மாறாமல் பார்ப்ப னர்கள் பார்த்துக்கொண்டார்கள். முகலாய ஆட்சியிலும் இந்து சட்டத்தை செயல்படுத்தினார்கள்.

இன்று நம் நாட்டில் செயலில் உள்ள இந்து சட்டம் மனு ஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்தவை என்று இந்து சட்டத்தை எழுதிய முல்லா கூறுகிறார். பக்கம் 36இல் “The Arthasastra was written when India was politically and administratively unified and there was consolidation of power in the hands of emperors whose writ ran in the whole country.”

அரசர்கள் அல்லது இருபிறப்பாளர் (பார்ப்பனர்)கள்தான் நீதிபதிகளாக இருக்கவேண்டும். அவர்கள் புனிதமான வேதத்தில் சொல்லப்பட்டவைகளை செயல்படுத்த வேண் டும். (பக்கம் 38 - Hindu Law By Mulla.) “Let the king  or  a member of twice Born caste affiliating as Chief Judge try causes acting on principles of equality or laey the doctrine of sacred cause.”

மனுவில் சொல்லப்படாதவை அல்லது அதற்கு மாறு பாடானவை எனப்படுபவை அரசரால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

புத்தமதக் கோட்பாடுகளின் தாக்கத்தின் காரணமாக மனுஸ்மிருதியில் சிறிது மாற்றியும், திருத்தியும் ஏற்பட்டதுதான் யாக்ஞவல்கியின் சட்டத்தொகுப்பு(Yajnavalkya) முதலாம் நூற்றாண்டு காலத்தில் சூத்திரர்களின் அந்தஸ்து குறித்தும், பெண்களின் சொத்துரிமை குறித்தும் விளக்கமாக வும், முறையாகவும் தொகுக்கப்பட்டது.

11 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் விக்னேஸ்வரா என்ற பார்ப்பனன் இந்து சட்டத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து இந்தியாவின் பல பாகங்களிலும் சட்டமாக மதிக்கப் பட்டு பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

(அ) பெனாரஸ் (ஆ) மிதிலா (இ) மகாராஷ்டிரா (ஈ) திராவிடா எனப்படும் இதற்கு மித்தாக்ஸ்காரா எனப்பெயர். வங்காளப் பகுதியில் தயாபாகா எனப்பெயர். இதன் அடிப் படையில் திராவிடம்-தமிழகம் உள்பட இந்தியா முழுமை யிலும் இந்து சட்டம்-மனுஸ்மிருதியின் மறுபதிப்பு நடை முறையில் செயல்படுத்தப்பட்டது என்பது வரலாற்று உண் மைகள்.

17-ஆவது நூற்றாண்டில் யாக்ஞவல்கியாரின் சட்டத்துக்கு ஒரு விரிவுரையாக விராமித்ரோதயா எழுதியுள்ளார். முகலாயர்களின் வீழ்ச்சிக்குப்பின் மராட்டியப் பேரரசில் பார்ப்பனர்கள் தங்களுடைய வர்ணாஸ்ரமதர்ம-மனுஸ்மிரு தியை முற்றிலும் செயல்படுத்தினார்கள். “The Brahmin following the Maratha Chiefs into the newly Conquered Country naturally took their law a books with them” (Hindu Law-Mulla-Page-58). 12ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த தேவன்னாபட்டாவின் ஸ்மிருதிசந்திரிகா தென்னிந்தியா முழுவதிலும் செயல்பட்டது. விஜயநகரப் பேரரசின் ஆதரவில் இந்த சட்டப்பிரிவு செயலாக்கப்பட்டு அதனுடைய ஆட்சியில் முழுமையாக அமலாக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசில் தமிழ்நாடுமிருந்தது வரலாற்று உண்மை. பிறகு நாயக்கர், மராட்டியர்களின் ஆட்சியாலும் வடமொழியும், இந்து சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது அரசர்களால் நாயக்கர், மராட்டிய அரசர்கள் தமிழையே அழித்தனர் என்றால் மிகையாகாது.

இந்து சட்டம் என்பது பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்துக்கு எது உகுந்தது என நினைத்தார்களோ அதைச் சட்டமாக வகுத்தனர் பார்ப்பனர்களின் கற்பனையில் உருவானதே இந்து சட்டம், சமற்கிருத பார்ப்பனர்கள் எந்தவித சட்ட ஞானமுமில்லாமல் மனம் போன போக்கில் தங்கள் நன்மைக்கு எழுதியதே இந்து சட்டம் (பழமை சட்டம் பக்-64) என்று சர். ஹென்றி மெயின் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்டவுடன் இந்து சட்டம் பார்ப்பனர்களின் உதவியுடன் 1868 வரை செயல்படுத்தப் பட்டது. 1868இல் அந்த முறை ஒழிக்கப்பட்டதே ஒழிய மனுஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்த சட்டத்தைத் தான் வெள்ளைக்காரர்களும் செயல்படுத்தினர். “The Hindu law was first administered by the English Judges with the assistance of Hindu Pandits. The Institution of pandits as official referees of the Carts  was abolished in 1868” (Hindu Law by Mulla Page 77).

இன்றைய நடைமுறையில் உள்ள இந்து சட்டத்திற்கு ஆதாரம்: மனு அத்.11-12 வடமொழி வேதங்கள், ஸ்மிருதிகள் ஒப்புக்கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள் என்று இந்து சட்டம் கூறுகிறது. (பக்கம் 76, Hindu Law)

அதன் அடிப்படையில் இந்துக்கள் நான்கு ஜாதிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். பிராமணர்-க்ஷத்திரியர்-வைசியர்-சூத்திரர், முதல் மூன்று வருணத்தாரும் இரு பிறப்பாளர்கள். இரண்டாவது பிறப்பு என்பது வேதம் படித்தல்-கல்வி கற்றல்-பூணூல் அணிதல் முதலியன. வேதக்கல்வி சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டது. திருமணம் தவிர வேறு எந்த சடங்குகளும் சூத்திரர்களுக்குக் கிடையாது. தமிழர்கள் அனைவரும் சூத்தி ரர்கள். இன்றைய வரையில் சூத்திரன் சந்நியாசி ஆகக்கூடாது என உச்ச நீதிமன்றம் 1980இல் தீர்ப்புக் கூறியுள்ளது.

- தொடரும்

- விடுதலை நாளேடு 13 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக