திங்கள், 2 மார்ச், 2020

நில உரிமைகளில் சமற்கிருத வழக்கு - 53

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation)  பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் திருமதி.  மீனாட்சி முருகரத்தினம்ஆற்றிய உரை வருமாறு:

நம்நாடு சுதந்திரமடைந்த பிறகு நில உடைமைச் சீர்திருத்தம் நமது கவனத்தைக் கவர்ந்துள்ளது. 1950ஆம் ஆண்டு முதல் பல நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப் பட்டன. ஜமீன்தாரி முறை நீக்கப்பட்டது. நிலக் குத்தகை, வாரம் போன்ற முறைகள் கட்டுப்படுத்தப்பட்டன. பண் ணையாள் முதலிய நில ஊழியர்களுக்கு நியாயக்கூலி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. நில உடைமைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, உபரி நிலங்கள் நில மில்லாத விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இவ்வித சீர்திருத்தங்களால் விவசாயிகளின் ஏழ்மை யைப் போக்கலாம் என்ற எண்ணம் இந்திய அரசாங்கத் திடையேயும், பொதுமக்களிடையேயும் மிகவும் பரவி யுள்ளது.

ஆனால், கடந்த 35 ஆண்டுகளாக ஏற்பட்ட இந்தச் சீர்திருத்த முறையினால் நாம் கண்டது என்ன? உழவர்களின் ஏழ்மை அகன்றதா? உற்பத்தி பன்மடங்கு பெருகியதா? இந்தக் கேள்விகளுக்கு நமக்குக் கிடைக் கும் பதில் இல்லை என்பதுதான்.

ஆகையால் நாம் ஒரு திடமான முடிவுக்கு வர வேண்டும். இந்த நிலச் சீர்திருத்த முறை சரியான பாதையில் செல்லவில்லை. அடிப்படையிலேயே சில கோளாறுகள் ஊடுருவி இருப்பதால் இந்தச் சீர்திருத்தம் நமக்கு நன்மையை விளைவிக்கவில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்திய நிலச் சீர்திருத்த முறைகள் பயன் அளிக் காததற்கு மூலக்காரணமாக இருப்பது, தனி உடைமை யாகும்(Right of private property) இந்தத் தனி உடைமை முறை ஆரியர்கள் வருகையிலிருந்து ஏற்பட்டதாகும். மனுதர்மத்தில் நிலம் தனி ஒருவனுக்குச் சொந்தமாகும். அவன் அதனைச் சீர்திருத்திச் சமப் படுத்திப் பயிர் செய்வதற்கு உகந்ததாகச் செய்தால் அது அவனுக்கு ஏகபோக உரிமை என்று சொல்லப்பட்டது. எப்படி காட்டில் வேட்டையாடும்போது ஒருவன் தன் அம்பினால் ஒரு விலங்கைக் கொன்றால் அது அவ னுக்கு உரிமையாகுமோ, அதேபோல் யார் முதன்முதல் ஒரு நிலப்பகுதியைக் காடுவெட்டிச் சீர்திருத்திப் பயிர் செய்வதற்குத் தயார் செய்கிறாரோ, அந்த நிலம் அவருக்குச் சொந்தமாகும் என்று விளக்கப்பட்டிருக்கிறது.

இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அர்த்த சாத்திரத்தில் நில வரிவிதிப்பு முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. (Durgajanapadasatya Bhritya Karma samudaya padena sthapayet) நிலச் சொந்தக்காரர், பண்ணையாள் என விவசாயத்தில் ஈடுபடும் மக்களைப் பிரித்துக் காட்டு கிறது. இது நில உடைமையாளர்களையும் நிலமற்ற தொழிலாளர்களையும் சேர்த்துச் சொல்லும் பதமாகும். இவர்கள் அரசனுக்கு அர்தசித்தா (Ardha Sitah) என்ற கொள்கைக்கு ஏற்ப நூலில் ஒரு பங்கோ அய்ந்தில் ஒரு பங்கோ நில வரியாகக் கொடுத்து வந்தார்கள்.

இந்த அர்த்தசாத்திர கோட்பாட்டிற்கு ஏற்றவாறு மவுரிய அரசில் நில வரி விதிப்பு முறைகள் வழக்கில் இருந்துவந்தன. நிலத்தில் இரண்டுவித வரிவிதிப்புகள் உண்டு. ஒன்று பாகா (Bhaga); மற்றொன்று உதகபாகா (Udahabhaga) என்பதாகும், சட்பாக (Shadbhaga) என்ற தண்ணீர் வரி, சுங்க வரி, சரக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது கொடுக்கும் வரி (octroi) முதலியன விதிக்கப்பட்டன. நில உரிமையாளர்களுக்குத் தமது நிலத்தை விற்கவும், மற்றவருக்குக் கொடுக்கவும் அதனை அடமானம் வைக் கவும் அர்த்த சாத்திரத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அரசன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரைக் காப்பது முக்கியக் கடமையாகும். விவசாயத்தில் ஈடு பட்டிருப்போரை மற்றவர்கள் தாக்காமலும், அடிமையாக் காமலும், அதிகமான வரிச்சுமையால் அவதிப்படாமலும் பாதுகாப்பது அவன் கடமையாகும். அரசன் மீன் பிடித்தல், கடல்-ஆற்றுப் போக்குவரத்து, வெளிநாட்டு வியாபாரம், ஆறுகள், நீர்த்தேக்கங்கள் ஆகிய பொது வருமானப் பகுதிகளைத் தனக்கென்று வைத்துக்கொள்ள அர்த்த சாத்திரம் அனுமதி அளிக்கிறது.

இந்த அர்த்தசாத்திரத் தனி உடைமைக் கொள்கையி லிருந்துதான் பிற்காலத்தில் ஏற்பட்ட விஜயநகர நில வரிமுறைகளும், முகலாய நில வரி முறைகளும், ஆங்கி லேய நில வரி முறைகளும்  ஏற்பட்டன. இவைகளுக் கெல்லாம், அடிப்படை நிலம் தனி ஒருவனுக்குச் சொந்த மென்பதும், அந்த உரிமையை அரசன் பாதுகாக்க வேண்டும் என்பதும் கோட்பாடுகளாகும்.

இந்தத் தனி உடைமை முறை சமற்கிருதப் பண் பாட்டிலிருந்து ஏற்பட்டவுடன் பல சீர்கேடுகள் விளைந்தன.

(1)          அரசின் ஆதிக்கம் நிலத்தின் மேல் அதி கரித்தது.

(2)          வரிச்சுமை அதிகரித்தது.

(3)          விவசாயத் தொழிலாளர்கள் பிற்போக்கு நிலையை அடைந்தார்கள்.

(4)          அதிக அளவு குத்தகை வசூலிப்பதால் குத்தகை யாளர்கள் நட்டம் அடைய வாய்ப்புகள் அதிகரித்தன.

(5)          கிராமங்கள் சீர்கேடு அடைந்தன.

(6)          கிராமப் பஞ்சாயத்துமுறை நாளடைவில் மறைந்து எதற்கும் அரசாங்கத்தை அணுகும் முறை வளர்ந்தது.

ஆனால், ஆரியம் புகுமுன்பு இந்தியாவில் திராவிட சமுதாயம் இருந்துவந்தது. இதனை இராதா கமால்முகர்ஜி என்ற பொருளாதார நிபுணர் விளக்கியுள்ளார். அந்த முறையில் ஒவ்வொரு இனத்தாரும் அல்லது பழங்குடி மக்களும் (Tribes) தங்களுக்குப் பொது உடைமையாக நிலத்தை வைத்திருந்தார்கள். இதனை அந்தப் பகுதி கிராமச் சபை பரிபாலித்து வந்தது. தனித் தனிக் குடும் பத்திற்கு நிலப்பகுதி அவர்களின் தேவைக்குத் தகுந்த வாறு ஒதுக்கப்பட்டது. மேய்ச்சல் நிலம், வாய்க்கால், குளம் இவைகள் பொதுச் சொத்துக்களாகக் கிராமச் சபையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அரசன் இந்தக் கிராமச் சமுதாயத்தில் தலையிடுவதில்லை. இந்த முறையே இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த பண் டைய முறை ஆகும்..

ஆரியம் புகுந்ததால் திராவிடப் பண்பாட்டிற்கு ஏற்ற பழங்குடி மக்களின் நில உடைமைமுறை (Tribal settlement) அடியோடு நீக்கப்பட்டுத் தனி உடைமை நிலப் பகுதிகளாக மாற்றப்பட்டது. இந்தக் காரணத்தினாலேயே சிலர் நிலச் சொந்தக்காரர்களாகவும் (Land Owners) பலர் நிலமற்றவர்களாகவும், மேலும் பலர் பொருளாதார சமூகத் துறையில் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருக்க வழிகள் உண்டாயின.

தற்காலத்தில் கூட இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் வகுப்புவாரி நில உடைமை முறைகள் இருக்கின்றன. அதனை நாம் பிற்போக்குச் சமுதாயம் என்ற கண்கொண்டு பார்க்கிறோம். ஆரிய அளவு கோல் கொண்டு அந்த முறையையும் மாற்ற வேண்டு மென்று நினைக்கிறோம்.

எப்படியோ ஆரியத் தனி உடைமை முறை மேவி விட்டது. அதனை மாற்றுவது மிகக் கடினமாககும். ஆரிய முறை பரவலாக இருக்கும் இந்தக் காலத்தில் முன்பு இந்திய நாட்டில் வழக்கிலிருந்த வகுப்புவாரி நில உடைமை முறை(Communal Settlement) மக்களுக்கு ஏற்றதான நிலமுறையாக நமக்குக் காட்சி அளிக்கிறது.

- டாக்டர் அ. இராமசாமி

 - விடுதலை நாளேடு, 27.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக