வெள்ளி, 6 மார்ச், 2020

கமுதி ஆலய நுழைவுப் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறு நகர மான கமுதியில்1855 ஆம் ஆண்டு அங்குள்ள அதே ஊரில் அமைந்திருந்த நாடார்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வழிபட உரிமை கோரினார்கள்.

அவர்களது கோரிக்கை மறுக்கப்பட்டது. 1897-ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் அங்குள்ள கோயில் ஊழியர்களின் எதிர்ப்பை மீறி மேற்கு வாசல் வழியாக நுழைந்து வழி பட்டனர் .இதற்காக ஒரு குற்ற வியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப் படவில்லை. அதைத் தொடர்ந்து கோயில் பரம்பரை அறங்காவலர் ஆன பாஸ்கர சேதுபதி மதுரை உரிமை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். நாடார்கள் ஆலயத்தி னுள் நுழைந்து விட்டதற்காக கோயில் தீட்டுப் பட்டு விட்டதாகவும் அதற்கு பார்ப்பன புரோ கிதர்களை வைத்து தீட்டுக் கழிக்கும் சடங்கின் செலவிற்காக ரூபாய் 2500 வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டி ருந்தார்.

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 20.7.1899 அன்று தீர்ப்பளித்தது.  அந்தத் தீர்ப்பில் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆல யத்தில் எந்த பகுதியிலும் நுழைய நாடார்க ளுக்கு உரிமை கிடையாது என்றும், ஆல யத்தை தூய்மைபடுத்தி, தீட்டு கழிக்க ரூபாய் 500 வழங்கும்படிதீர்ப்பளித்தது. மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றத்தின் பாஸ்கர சேதுபதி எதிர் இருளப்ப நாடார் வழக்கு தமிழக வரலாற் றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

உயர்நீதிமன்ற மேல் முறையீடு நாடார்க ளுக்கு எதிராக முடிந்ததுமே நாடார்களின் கோயில் நுழைவுக்கு எதிராகவே தீர்ப்பளித்து நாடார்களின் கோயில் நுழைவு முயற்சி கனவா கவே, நாடார் நுழைந்த மேற்கு வாசல் முற்றிலும் அழிக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட் டது அந்த சுவடுகளை இன்றும் காணலாம்.

- விடுதலை ஞாயிறு மலர் 22 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக