வெள்ளி, 13 மார்ச், 2020

கழகத் தலைவர் அன்னை மணியம்மையார்

கழகத் தலைவர் அன்னை மணியம்மையார்

அருமைத் தோழர்களே!

தாய்மார்களே!!

தந்தை பெரியார் அவர்களால் ஏற் படுத்தப்பட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவு இயக்கம் என்று எந்தப் பெயரால் அழைத் தாலும் அதுதான் இன்று ஓரளவு நாம் மனி தத் தன்மை அடைந்ததற்கு அடிகோலிட்ட தாகும் என்று சொன்னால் மிகையாகாது.

சுயமரியாதை உணர்ச்சி நாட்டு மக்களி டத்தில் சற்று வலுப்பெற்ற பிறகுதான் நம்மை நாம் யார் என்று உணரவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தி வருகின்ற வருணா சிரமக் கொள்கைகளைத் தகர்த்தெறியவும், ஜாதியற்ற சமுதாயமாக ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளும் துணிச்சலையும், ஆரியக் கடவுள்களையும், அதன் ஆபாச சின்னங் களையும் அடியோடு உருத்தெரியாமல் சுக்கு சுக்காக உடைத்து நொறுக்கும்படியான ஒரு துணிவையும் உண்டாக்கி இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அதுதான் சுத்த ரத்த ஓட்டமுள்ள தமிழரின் தலைசிறந்த கடமை யாகும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவர்களாய் - இருக்கின் றோம்.

எப்பக்கம் நோக்கினும், எத்துறையினை எடுத்துக்கொண்டாலும், தென்னாட்டவரை மட்டம் தட்டுவது, இழிவுபடுத்துவது, அவர் கள் தலை எடுக்காமல் செய்ய என்னென்ன வழி வகைகள் உண்டோ அவைகளைச் செயலாக்குவது, இதுதான் இன்றைய நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்களின் நோக்கமும், வடநாட்டாரின் கருத்தும், முயற்சியும் ஆகும். நம் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் சிறிதேனும் இடம் கொடுக் காமல் இருப்பதற்கெல்லாம் முக்கிய கார ணம், ஆதிக்கம், தலைமை அதிகாரங்கள் அனைத்தும் வடவர் கைப்பிடியில் வைத் துக் கொண்டு இருப்பதும், பெரும்பாலான தமிழகப் பார்ப்பனர்கள் (இங்கு, அவர்க ளின் ஆதிக்கம் உத்தியோகத் துறையில் ஒழிக்கப்பட்டபின்) வடக்கில் சென்று பெரிய பெரிய உயர் பதவிகளில் அமர்ந்து அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து தங்களுக்கே உரித்தான சூழ்ச்சித் திறனா லும், தந்திரத் தன்மையாலும் வடவர்களைத் தம் கைவசப்படுத்தி, தங்கள் நல்வாழ்விற் கும், தம் இனத்தின் முன்னேற்ற உயர்வுக்கும் என்னென்ன அவசியமானதும், தேவையா னதுமான காரியங்களோ அவைகளை எல் லாம் எவ்விதத் தங்கு தடையின்றி ஒற்று மையாக இருந்து நிறைவேற்றிக் கொள்வ துடன், சமய சந்தர்ப்பங்கள் நேரிடும் போதெல்லாம் நம்மினத்தவர்களை அழுத்தி ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டு முழு மனதுடன் ஒன்று போல் எல்லோரும் அதே வேலையாய், கவனமாய் இருந்து வருகிறார்கள்,

தமிழ் மக்களாகிய நமக்கோ அத்தகைய மனப்பான்மை சிறிதேனும் இல்லாமல் இருப்பது எவ்வளவு இழிவு என்பதை நாம் சற்றும் நினைத்துப் பார்த்ததில்லை. அந்த ஒற்றுமை, ஒத்த கருத்து அந்த இனத்திற்கு இருக்கின்ற அளவில் நமக்குக் கடுகு அளவுகூட கிடையாது; வருவதே இல்லை; சிந்திப்பதும் இல்லை; கவலைப்படுவதும் இல்லை என்று அடிக்கடி நம் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லிச் சொல்லி நமக்கு உணர்ச்சியை ஊட்டி வருவார். அவரின் அயராத அத்தகைய முயற்சியின், பாடுபட்டதன் பலன் முழு வதும் நாம் அடையவில்லை என்றாலும், நினைத்துப் பார்த்துச் சரி என்று உணரும் அளவிற்கு இன்று வந்துள்ளோம் என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக் கிறேன்.

இனிமேல் நம் இனத்தின் மீதும், சமுதாய வளர்ச்சியின்மீதும் முழுக்கவனம் செலுத் துதல் மிக மிக அவசியம் என்பதை நாம் உணரவேண்டும். தம் வரையிலும் பெரு மையும், மதிப்பும் இருந்தால் போதும் என்று எண்ணுவதாலும், ஒருவரையொருவர் கவிழ்ப்பதாலும், தகாத வார்த்தைகளால் தூற்றுவதாலும், பொறாமையும், அழுக் காறும் கொண்ட ஒற்றுமையற்றவர்களாய் இருப்பதாலும்தான் எதிரிகளின் சூழ்ச்சிக் குப் பெரும்பாலும் நாம் பலியாகிவிட நேர்ந்து விடுகின்றது.

உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோ மானால், இன்றைய தி.மு.க. ஆட்சி கட்டிக் காக்க வேண்டிய ஆட்சி என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இந்த ஆட்சி செய்த நன்மைகள் நம் நினைவில் நிலைத்து நிற்ப தில்லை ; எண்ணிப் பார்ப்பதில்லை. அசல் தமிழர் ஆட்சி, அதோடு பகுத்தறிவுக் கொள்கை கொண்டவர்களால், தந்தைபால் பற்றுக் கொண்டவர்களால் ஆளப்படுகின்ற ஆட்சி,  ஏழை மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெருவாரி யான நன்மைகள் செய்கிறவர்கள், செய்ய வேண்டும் என்று இன்னமும் எண்ணுகி றவர்கள், அதே வேலையாய் அலைகிற வர்கள், தங்களுக்கு இருந்துவரும் அதிகா ரத்திற்கு உட்பட்ட அளவிற்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டுமோ அவை களை செய்து வருகிறார்கள் என்றால், மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த தமிழர் ஆட்சியைப்பற்றி இன்று பார்ப்பனர் களைவிட குறையும், குற்றமும், சொல்கிற வர்கள், தூற்றுகிறவர்கள், வாய்க்கு வந்தபடி, மனதிற்கு தோன்றியபடி பொய்யும், இல்லா தவற்றைக் கற்பனையாகவும், தனிப்பட்ட முறையிலும் பேசுகிறவர்கள் யார் என்று பார்க்கிறபோது, எல்லாவிதமான நன்மை களும் பெற்று, அனுபவித்து வருகின்ற நம் மக்கள்தான் பெரும்பாலானவர்கள். இதுவே பார்ப்பன ஆட்சியாய், அவர்கள் அடிமைகளாய் ஆளப்படுகிற ஆட்சியாய் இருந்தால் இதே தமிழர்கள் என்று சொல் லப்படுகிறவர்கள்கூட அவர்களுக்கு வெண் சாமரம் வீசிப் போற்றிப் புகழுவார்கள். அத்தகைய குணம் இன்னும் நம்மிடமிருந்து மாறவில்லை. என்றைக்கு அந்த இழிகுணம் நம்மைவிட்டுப் போகிறதோ, என்றைக்கு நாமெல்லாம் ஒன்று என்கிற உணர்வும், எது வந்தாலும் அதை லட்சியம் செய்யாமல் தமிழன் என்றால் ஒரே இனம் என்கிற எண்ணமும் வருகிறதோ அன்றுதான் நாம் உண்மையான மனிதத்தன்மை பெற்ற வர்கள் ஆவதுடன், எதிரிகளும் நம்மைக் கண்டு அஞ்சும்படியான ஒரு நிலைக்கு ஆளாகியவர்களாவோம்.

தலைவர் பெரியார் அவர்கள் நமக்கு அடிக்கடி சொல்லுகின்ற தத்துவமே அது தான். அதை நம் வாழ்வில் உயிர்போல் கருதி, வளர்த்துவர வேண்டியதுதான் நமது எண்ணமாய்ஆசையாய் இருத்தல் வேண் டும். நமது கொள்கையை நாட்டில்-மக்க ளிடத்தில் பரப்பும் முயற்சிக்கு இந்த அரசைப்போல் எந்த அரசு வந்தாலும் வழிவகுக்காது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. அய்யாவின் மறைவிற்குப் பின் நமது தமிழக அமைச்சரவை எந்த அளவு அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்திருக்கிறது என்பதை நினைக்கும் போது, உண்மையிலேயே நாம் அவர்க ளுக்கு என்றென்றும் நன்றிக் கடனாற்ற வேண்டியவர்களாய் இருக்க வேண்டும் அல்லவா? பேச்சும் - மூச்சும் - செயலும் இன்று அய்யாவைப்பற்றியே, போகும் இடங்களிலெல்லாம் அவர்கள் பரப்புகின்ற முறை, பேசுகின்ற முறை நம்மை மகிழ்விக் கிறது அல்லவா? இப்படிப்பட்ட ஒரு நிலை எந்த ஓர் ஆட்சி இருந்தாலும் உறுதியாக நமக்கு கிடைக்கவே கிடைக்காது. காரணம், இவர்கள் உண்மையிலேயே தந்தையிடம் பழகிய காரணத்தால் அவர்களால் அதை நீக்க முடியவில்லை என்பது மட்டும் அல் லாமல், உள்ளத்திலேயும் நம் கொள்கைகள் ஆணித்தரமாகப் பதிந்து இருப்பதும் ஒரு காரணமாகும். தாங்கள் இருக்கின்றவரை இனி எந்தவித அதிருப்திக்கு ஆளானாலும் கவலை இல்லை என்று கருதித்தான் துணிந்து பற்பல காரியங்கள் செவ்வனே செய்துவருகிறார்கள். இதன்மூலம் எவ் வளவு பெரிய தொல்லைகளுக்கும், வெறுப் புக்கும் ஆளாக நேரிடுகிறது என்பதைத் தினம் தினம் பத்திரிகையின் வாயிலாக நாகரிகமற்ற முறையில் வருவதைப் பார்க் கிறோமே! அதனால்தான் நாம் இந்த அரசைக் கட்டிக்காக்க நம்மால் முடிந்த அளவு முழு மனதோடு இறங்கிச் செயல்பட வேண்டும் என்று நமது தமிழ் மக்களையும்- கழகத் தோழர்களையும் அன்போடு வேண்டி வருகிறோம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதா வது, நம் அருமைத் தந்தையின் 92ஆவது பிறந்தநாள் மலருக்கு எழுதிய எனது நிலை என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அறிஞர் அண்ணா மறைந்தவுடன் தி.மு.க. ஆட்சி என்ன ஆகுமோ என்று பயந்து கோபுரம் தாங்கும் பொம்மைபோல் எல்லாப் பொறுப்பும் என் மேலேயே இருப்பதுபோல் நானே நினைத்துக் கொண்டு, எப்படியோ என்று நாம் போய்விடக் கூடாதே, இந்த ஆட்சி நிலைக்க வேண்டுமே என்று கவ லைப் பட்டுக்கொண்டு துறவற ஆசையை மறந்து பெரிய குடும்பஸ்தனைப்போல் கவலை கொண்டு வாழ ஆசைப்பட்டு விட்டேன்; ஆசைப் பட்டாலும் முடிவு சமீபித்துக் கொண்டு வருகிறது; அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற பேராசையோடு சற்று தீவிரமான சொற் களை, கருத்து களைத் துணிவாகப் பேசவும், எழுதவும் துவங்கினேன் என்று கூறி யுள்ளார்.

அவரது எண்ணம் என்ன என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது. எப்படி யும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவலையும் அக்கறையும் கொண்டுள்ளார். தனக்கு முடிவு சமீபித்துக் கொண்டே வருகிறது என்பதிலும் கவலை கொண்டு வந்திருக்கிறார். அவர் கவலை கொண்டபடியே அவர் முடிவு முடிந்து விட்டது; ஓர் ஆண்டும் முடியப்போகிறது. இந்நிலையில் அவரது உள்ளுணர்வை உணர்ந்த நாம் நமது கடமை என்னவென்று நினைத்து அதன்படி நடந்து கொள்ள வேண்டியது தான் அவருக்கு உண்மையான பின்பற்றுபவர்களாக, அன்பு செலுத்துப வர்களாக நாம் ஆவோம்.

ஆகவே, அருமைத் தோழர்களே! தாய்மார்களே!! இன்றுள்ள நிலையில் எதிரிகள் ஒரே மூச்சாய் ஒன்று திரண்டு, ஒரே பல்லவியை அதிலும் மக்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படும் வகையில், உணவுப் பிரச்சினையைக் காட்டி கண்டபடி உண்மைக்கு மாறாகப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். நாடு பூராவும் உள்ள நெருக்கடியைவிட நாம் எவ்வளவோ மேலாக இருந்தும் அதுவும் இந்த அரசின் விடாமுயற்சியின் பயனாய் சமாளிக்கப்பட் டிருந்த போதிலும் அதைப் பற்றி எல்லாம் ஒரு சிறிதும் சொல்லாமல், மிகைப்படுத்திப் பேசுவதன் நோக்கமே எப்படியும் இவர் களை ஒழித்துக் கட்டுவதற்கு இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையிலே மக்கள்பால் உள்ள பற்றின், அன்பின் காரணமல்ல; பதவி ஆசை அந்த அளவிற்கு அவர்களுடைய அறிவை மழுங்க வைத்துவிட்டது!

நாம் தந்தையின் பகுத்தறிவு வழியில் வந்தவர்கள்; நமக்குப் பகுத்துணரும் பண்பு உள்ளது. அதனால் நாம் நம் கடமையில் துணிந்து இறங்கிவிட வேண்டும்; உண்மை களை மக்களிடத்தில் சொல்லித் தெளிவாக்க வேண்டும்; பொய்யர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்த வேண்டும். தீவிரப் பிரச் சாரத்தில் நம் தோழர்கள் இறங்கி, ஒவ் வொருவரிடத்திலும் உள்ளதை தெரிவித்து, தெளிவாக்கித் தந்தையின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டியது தான் நமது முதல் கடமை; அவரது முதலாண்டு நினைவு நாளில் நாம் நம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது - இன்னும் 20 ஆண்டு காலமாவது அய்யாவின் சொற்படி, இந்த ஆட்சி இம் மண்ணை ஆண்டு நம் மக்களை உண்மையான பகுத்தறிவுப் பெட்டகங்களாகவும், ஜாதியற்ற சமுதாய மாகவும், மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிந்த உயர்ந்த லட்சியங்கள் கொண்ட உயர் சமுதாய மக்களாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முடிக்கிறேன். நம் தோழர் களும் இதையேதான் விரும்புவார்கள் என்பதில் துளியும் அய்ய மில்லை. அரு மைத் தந்தையின் முதலாம் நினைவுநாளை இம்முயற்சிக்கு வெற்றி காணும் நாளாக ஆக்கிக்கொள்வோம்.

- விடுதலை 28.12.1974

- விடுதலை ஞாயிறு மலர், 7.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக