சனி, 21 ஜூலை, 2018

சி. இராஜகோபாலாச்சாரியாரின் ஜாதிப் பிரச்சாரம்

13.09.1931. - குடியரசிலிருந்து...


உயர்திரு சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செப் டம்பர் 10ஆம் தேதி இந்து பத்திரிகையில் ஜாதிக் கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதைச் சர்க்காரார் ஆட்சேபிப்பதற்குச் சமாதானம் எழுதும் முறையில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப்பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக்கிறார்.


உண்பது, பருகுவது, மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப்படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப்பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும் வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண் டிப்பது நியாய மென்றும் வற்புறுத்துகிறார். மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம்.


காங்கிரஸ் வருணாசிரமத்தை வளர்க்க ஏற்பட்டி ருக்கும் ஒரு ஸ்தாபனமென்று நாம் கூறி வருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச் சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப்பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசியமும், மது விலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்க மென்பதும் இப்பொழு தாவது பொது ஜனங்கள் கண்டு கொள்வார்களென்று நம்புகிறோம்.


வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் கூடாதென்றும் பறை யடிப்பவர்கள் ஜாதிப்பஞ்சாயத்துகள் மூலம் பல வந்தத்தை உபயோ கிக்க வேண்டுமென்று கூறுவதில் ஏதாவது நாணயமுண்டா? ஜாதிக் கட்டுப்பாட்டைவிட ஜாதிகளுக்கு ஆதிக்கம் தேட இதைவிட சிறந்த முறைகள் வேறு ஏதாவது உண்டா?


தீண்டாமை விலக்கிற்கும், விதவைகள் துயரத்திற்கும், பெண்ணடி மைக்கும், பொருளாதாரக் கஷ்டத்திற்கும் எந்த (அதாவது ஜாதி வகுப்பு) முறையை நாம் காரணமாகச் சொல்லி அதை அழிக்க வேண்டுமென்று கருதுகின் றோமோ அதைக் காப்பாற்ற வேண்டும், என்பதும், அதன்மூலம் செய்யப்படும் கொடு மையாலும், பலாத் காரத்தாலும் ஜாதிக்கு ஆதிக்கம் தேடவேண்டு மென்பதும் திரு ஆச்சாரியார் கொள்கை என்பது புலப்படுகின்றதா? அல்லது இல்லையா? என்பது கவனிக்கத்தக்கதாகும்.


- விடுதலை நாளேடு, 14.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக