வெள்ளி, 6 ஜூலை, 2018

அதே குடந்தையில்தான்... (சட்ட எரிப்பு)


இந்திய அரசமைப்புச் சட் டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார் (தஞ்சை மாநாடு, 3.11.1957).

சட்டத்தைத் திருத்துவதற்குப் பதிலாக சட்டத்தைக் கொளுத்தி னால் 3 ஆண்டு தண்டனை என்று ஓர் சட்டம் (Prevention of Insult to National Honour-1952) அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது.

ஆனால், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் கொளுத்தி 3 மாதம் முதல் 3 ஆண்டுவரை தண்டனை ஏற்றனர். பலர் சிறையிலும் மாண்டனர் - நோய்வாய்ப்பட்ட நிலையில் வெளிவந்த பலரும் மரணத்தைத் தழுவினர். சிறை யில் பிறந்த குழந்தைக்கு சிறைப் பறவை' என்றும்கூடப் பெயர் சூட்டப்பட்டதுண்டு.

அந்தப் போராட்டத்தில் ஈடு பட்டுச் சிறை சென்ற 90 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குடந்தை அரு.ரெங்கநாதன் நம்மோடு கருப்புடை அணிந்து உலாவந்து கொண்டுள்ளார்.

குடந்தை சோழபுரத்தில் நடந்த ஒரு நிகழ்வைக் கேளுங் கள்! கேளுங்கள்!!

சென்னை மாநில கனம் உள்நாட்டமைச்சர் அவர்களுக்கு சோழபுரம் திருப்பனந்தாள் வட்டகிராமத்தினர் எழுதிக் கொள்வது:- இதனடியில் கையொப்பமிட்டுள்ள நாங் கள் திராவிட நாட்டின்ஒப்பற்ற தலைவர்பெரியார்அவர்களின் கட்டளைப்படி26.11.1957இந்திய அரசியல் சட்டத்தின் அச்சுப்பிரதி களை ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முன்னிலை யிலும், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலும் கொளுத்தி னோம். அப்படிக் கொளுத்திய 139 பேர்களை போலீஸ் ஸ்டே ஷனுக்கு (திருப்பனந்தாள்) அழைத்துச் சென்றனர்.

பிறகு இரவு 9.30 மணிக்கு கும்பகோணம்தாலுக்கா திருப் பனந்தாள் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் எங்களில் 40 பேர்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி யுள்ள 99 பேர்களையும் கைது செய்ய முடியாது; வீட்டுக்குப் போங்கள் என்று கூறிவிட்டார். ஏன்' என்று கேட்டதற்கு நீங் கள் கொளுத்தியதை நான் பார்க்கவில்லை. அதனால் உங் களைக் கைது செய்ய முடியாது' என்று பச்சையாகப் பொய் சொல்லிவிட்டார்.உடனே நாங்கள் அப்படியானால் இப் போது உங்கள் எதிரிலேயே கொளுத்துகிறோம். இப்போது கைது செய்யுங்கள் என்று கூறியதற்கும் இரவாகிவிட்டது. இனி கொளுத்தினாலும் கைது செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதன் பேரில் எங்கள் தலைவரின் கட்டளைப்படியே இந்திய அரசியல் சட்டத்தின் அச்சுப் பிரதிகளைக் கொளுத்தி அதன் சாம்பலை தேசிய கௌரவ சட்டம் கொண்டு வந்த அமைச்சராகிய தங்களுக்கு அனுப்பியுள்ளோம். மேற்படி நிகழ்ச்சிகள் நடந்ததை மேற் படி தொகுதி சென்னை சட்ட சபை உறுப்பினர் உயர்திரு. இராமாமிர்தத் தொண்டமான் அவர்களும் நேரிலேயே கண் டார்கள்  என முகவரியுடன் 99 பேர் கையொப்பமிட்டு அனுப்பி யுள்ளனர்.''

(விடுதலை' - 30.11.1957)

இத்தகு தொண்டர்களை உலகில் கேள்விப்பட்டதுண்டா?

அந்தத் தியாக சீலமாம் குடந்தை மாநாட்டுக்கு வாருங் கள் தோழர்களே!

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 6.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக