வெள்ளி, 6 ஜூலை, 2018

வடமாநிலம் - பஞ்சாபில் தாழ்த்தப்பட்டோர் ‘திராவிடர்’ அடையாளத்தை விரும்பி ஏற்கின்றனர் திராவிடர் இயக்கத்திற்கு மாபெரும் வெற்றி! படம் பிடிக்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏடு



தந்தை பெரியாரால் 1925ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை வெற்றி 90 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வடமாநிலத்தில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. பஞ்சாபில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தாங்கள் 'திராவிடர்' எனும் அடையாளத்துடன் இருப்பதை விரும்பி ஏற்று வருகின்றனர்.

அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினர் மீதான வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தில் உள்ள நடவடிக்கைப் பிரிவுகள் நீர்த்துப்போன நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு அதனைக் களைந்திட உறுதியளித்து அறிவித்த அவசரச் சட்டம் எதையும் கொண்டு வராத நிலையில், அதிருப்திக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட மக்கள் 'திராவிடர்' அடையாளத்தை கொள்கைப் பூர்வமாக ஏற்று தமது பெயருக்குப் பின்னர் 'திராவிடர்' அடையாளத்தை சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.

இராவணன் பரம்பரை

ஆரியத்தை எதிர்த்து நின்ற இரா வணனின் பெயரில் இயக்கங்கள் நடத்தி தங்களது பெயருக்குப் பின்னால் தைத்ய, தானவ், அச்சூட் என்னும் திராவிடர் பெயர்களை சேர்த்துக் கொள்கின்றனர். 'ராட்சதன்' எனும் துணைப் பெயரையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 90 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் ஆரிய ஆதிக்கத்திற்கு - அடக்கு முறைக்கு எதிராக தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம், அதன் ஆக்கரீதியான - திராவிடர் அடை யாளப் போற்றுதல் என அவர் விரும் பியது இன்று வட மாநிலமான பஞ்சாபில் மலர்ந்து, உரிமை வேட்கையுடன் வலம் வரத் தொடங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டு வரும் இந்த மாபெரும் மாற்றம் குறித்து இன்று (ஜூலை 6, 2018) வெளிவந்துள்ள 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில ஏட்டில் விரிவாக செய்தி வந்துள்ளது. ஆங்கிலத்தில் வந்த செய்தியின் தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு:

'பெரியார்' என பரவலாக அறியப் படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தமிழ் நாட்டில் 1925இல் சுயமரியாதை இயக் கத்தை, திராவிடர் இயக்கத்தை தொடங்கி  ஜாதி ஒழிப்பினை மூடநம்பிக்கை தகர்ப்பினை, கொள்கை முழக்கமாகக் கொண்டு  சுயமரியாதை உணர்வு ஊட்டப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அந்த இயக்கம் வட மாநிலங்களுக்கு எதிரானது எனவும் இந்தி மொழிக்கு எதிரானது எனவும் தவறாக கருதிடும் போக்கும் இருந்து வருகிறது.

இந்த தவறாகக் கருதும் போக்கு தகர்ந்திடும் வகையில் தற்பொழுது மாற் றங்கள்  நடைபெற்று வருகின்றன. தந்தை பெரியார் நிறுவிய 'திராவிடர்' இயக்கம் இன்று வட மாநிலங்களிலும் பரவி வருவது அவர்தம் கொள்கை கனவானது நனவாகி நடைமுறையாகி வருகிறது.

தாழ்த்தப்பட்டவர் 32 விழுக்காடு

சுயமரியாதை இயக்கம் தொடங் கப்பட்டு 90 ஆண்டுகள் கடந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் 'திராவிடர்' அடையா ளத்தை விரும்பி ஏற்றிடும் நிலை உரு வாகி உள்ளது. அந்த மாநிலத்தில் தாழ்த் தப்பட்ட சமுதாய மக்கள் 1930 ஆண்டு களில் தந்தை பெரியாரைப் பற்றி அறிந் திராத நிலையில், இப்பொழுது உள்ள தலைமுறையினர் தங்களை 'திராவிடர் எனும் அடையாளத்துடன், வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். நமது நாட்டில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர் மிக அதிகமாக -32 விழுக்காடு அளவில் வாழ்ந்து வரும் மாநிலம் பஞ்சாப் ஆகும்.

'திராவிடர்' அடையாளத்தை விரும்பி ஏற்றிடும் போக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு பிரிவினரான வால்மீகி (துப்புரவு தொழிலை ஆண்டாண்டு காலமாக செய்து வந்து, ஜாதிப் படி நிலையின் அடிமட்டத்தில் உள்ளவர்கள்) சமுதாய மக்களிடம் பரவலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 'திராவிடர்' அடையாளத்தை விரும்பி ஏற்றி டும் போக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே நிலவியது. எனினும் அத்தகைய நிலை இயக்கம் சார்ந்த செயற்பாட்டாளர்கள் அள வில் மட்டுமே இருந்தது. இப் பொழுது உள்ளது போன்று பரவ லான மனப்போக்கு உருவாகிட வில்லை. தாழ்த்தப்பட்ட, பழங் குடி மரபினர் மீதான வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை விதிகளை கட்டுப் படுத்திடும் வகையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதற்குப் பின்னர், பஞ்சாப் மாநில தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிடம் 'திராவிடர்' அடையாளத்தை விரும்பி ஏற்றிடும் போக்கு மிகப் பரவ லாகி உள்ளது. தாங்கள் அணியும் உடை யின் மீது தங்களது அடையாளத்தை காட்டிடும் விதமாக 'திராவிடர்' அல்லது 'அனாரியன்' (ஆரியர் அல்லாதார்) என முத்திரை பதித்து ஆடை அணிந்திடும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ராட்சசன் என்பதில் பெருமை

அவர்களில் மிகப் பலர் தங்களது பெயருக்குப் பின்னர் 'திராவிடர்' எனும் அடையாளத்தைக் காட்டிடும் வகையில், 'தைத்யா, தானவ், அச்சூட், லங்கேஷ்' எனும் துணைப் பெயரைச் சேர்த்துக் கொண்டு வருகின்றனர். இதற்கும் மேலாக 'ராட்சசன்' எனும் துணைப் பெயரையும் வைத்துக் கொள்கின்றனர். 'திராவிடர்' எனும் துணைப் பெயர் சூட்டிக் கொள்வதும் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இத்தகைய பெயர் மாற்றங்கள், பதிவு செய்யப்படுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பினும், வழக்கத்தில், தாங்கள் அழைக்கப்படு வதில், அடையாளப்படுத்தப்படுவதில் - 'திராவிடர்' அடையாளத்தை வெளிப் படுத்தும் துணை பெயர்களுடன் இருப் பதை பெரிதும் விரும்புகின்றனர்.

ஆடி தரம் சமாஜ் அமைப்பின் நிறு வனர் தாவுத் ரதன் ராவண் கூறியதாவது:

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் ஏப்ரல் 13 அன்று பக்வாரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும், வலது சாரி எண்ணம் கொண்ட இந்துத்துவா பிரிவினருக்கும் நடந்த மோதலில், 'வால்மீகி' சமுதா யத்தைச் சார்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்விற்குப் பின்னர், 'திராவிடர்' அடை யாளத்தை முன்னெடுக்கும் போக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எங்களது அமைப்பு இத்தகைய 'திராவிடர்' அடை யாளம் சார்ந்த இயக்க செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் முனைப்பாக உள்ளது” என ராவண் கூறுகிறார்.

இராவண சேனை

இராவண் சேனா அமைப்பின் தலைவர் லங்கேஷ் கூறுவதாவது:

நகர்ப்புறப் பகுதிகளிலும், பெரு நகரங் களிலும் 'இராவண சேனை' அமைப்பில் சேர்ந்திட  எங்களது சமுதாய இளைஞர்கள்  ஆர்வம் காட்டி வருகின் றனர். எங்களது அமைப்பில் சேர்ந்திடு வோருக்கு அவர்களுக்கு துணைப் பெயர்களாக லங்கேஷ், தானவ், மற்றும் இதர 'திராவிடர்' அடையாளம் கொண்ட மகாத்மா இராவணன் வகுப்புப் பிரிவுப் பெயர்களை வழங்கி வருகிறோம்“

மேற்கண்டவாறு 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளது.

அன்றே பாடினார் புரட்சிக் கவிஞர்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய (தந்தை பெரியாரின்) 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பெரியார் மறைந்து 44 ஆண்டுகள் கடந்தும் அவருடைய சுயமரியாதைக் கொள்கையின் தாக்கம் வட மாநிலங்களிலும் பரவிடத் தொடங்கி சூடு பிடித்து வருகிறது. "பெரியாரின் தத்துவம் மனிதநேய தத்துவம், மக்கள் சமத்துவ தத்துவம், எந்த ஒரு நிலப்பகுதிக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. மனிதர்கள் வாழக்கூடிய அனைத் துப் பகுதிகளுக்கும் பொருத்தமானது; ஏற்புடையது” என சுயமரியாதை இயக் கம் தோற்றுவிக்கப்பட்டது குறித்து வெளியான பிரகடனச் செய்தி இன்று நடைமுறையில் பரவலாகி வருகிறது. பெரியார்தம் கொள்கை உலகமயமாகி மேலும் வலுப்பட்டு வருகிறது.

 -  விடுதலை நாளேடு, 6.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக