புதன், 4 ஜூலை, 2018

அதே குடந்தையில்தான்... (ஆலய நுழைவு)

82 ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் நடந்த ஒரு செய்தியினை தினமணி' வெளியிட்டு இருந்தது.

அந்தச் செய்தி இதோ:

5.9.1936 சனிக்கிழமை குடந்தை ஆலயத்தில் பஜனைக் கோஷ்டி ஹரிஜனங்களா? உள்ளே பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

(நமது செய்தியாளர்)


கும்பகோணம் செப்.4 நேற்று இரவு இந்நகர் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி கோயிலில் சுமார் 15 பேர் பஜனை செய்துகொண்டு மேலண்டை கோபுர வாசல் வழியாய் உள்ளே வந்தார்கள். இவர்களைக் கண்டவுடன், அங்கிருந்த வைதீக இந்துக்கள் பயந்து, அவர்களை அணுகி, நீங்கள் யாரென்று கேட்கவே, தாங்கள் நீலகிரி வாசியென்றும், ஆலயப் பிரவேச உரிமை உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் சொல்ல, நிச்சயமாய் அவர்கள் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவரும் இந்நகரில் தெரிந்துகொள்ள முடியாததால், உள்ளே போக அவர்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டது. அதற்குமேல் அவர் கள் வெளியேறி விட்டார்கள். ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயத்திலும் இப்படியே தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.''

(தினமணி', 6.9.1995)

82 ஆண்டுகளுக்குமுன் இது நடந்திருக்கலாம். இன்று மட்டும் என்ன வாழ்கிறது? கும்பகோணத்தில் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர அர்ச் சர்களாக மற்றவர்களால் வர முடிகிறதா?

ஜாதி இழிவையும், தீண்டா மைக்கொடுமையையும்ஒழிக் கும் போரில் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டு வரலாற்றின் உச்சியில் நின்று ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.

பொது வீதிகளில் நடக் கும் உரிமை, உயர்ஜாதி பார்ப் பனர்கள் உணவு விடுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் உட் கார்ந்து உண்ணும் உரிமை என்று எழுத ஆரம்பித்தால், பட்டியல் அடங்காது.

குஷ்டரோகிகளும், நாய் களும், பறையர்களும் உள்ளே நுழையக்கூடாது என்று சென்னை மவுண்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் விளம்பரப் போர்டே வைக்கப்பட்ட ஒரு காலகட்டம் இருந்ததுண்டு. இரயில்வே உணவு விடுதியில் பிராமணாள்-சூத்திராள்என்ற பேதம்இருந்தது.அவைஎல் லாம் அய்யாவின் அருந்தொண் டால் அடித்து நொறுக்கப்பட்டது.

தனது இறுதிப் போராட்ட மாக - இன இழிவு ஒழிப்புப் போராட்டமாக அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டப் பதாகையைக் கையில் ஏந்தி வீதிக்கு வந்தார் வைக்கம் வீரர் தந்தை பெரியார்.

தந்தையே, உங்கள் தனயன் (கலைஞர்) ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, நீங்கள் போராடவேண்டுமா? ஆணையிடுங்கள் நிறைவேற்றி முடிக்கிறேன்' என்று கூறி, இரு முறை சட்டங்கள் இயற்றியும், ஆரிய - வைதீகக் கும்பல் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி தடை செய்தது என்றாலும், அதில் இப்பொழுது நாம் வெற்றி பெற்றும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை நிலை தான் இன்றுவரை!

இதற்கும் ஒரு முடிவு காண் போம். 1936 இல் குடந்தையில் நிகழ்ந்த இழிவுக்கு குடந்தை மாநாட்டில் முடிவு காண்போம் - வாரீர்! வாரீர்!!

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 4.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக