சனி, 21 ஜூலை, 2018

நமது ஆசிரியரின் அய்ரோப்பா பிரயாணம்

13.12.1931 - குடிஅரசிலிருந்து...

13-12-31இல் நமது ஆசிரியர் திரு. ஈ.வெ. இராமசாமி அவர்கள் திரு. இராமனாதன் அவர்களுடன் (கினீதீஷீsவீமீ) அம்போய்சி என்னும் பிரஞ்சு கப்பலில் அய்ரோப்பா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வதற்கு புறப்பட்டு விட் டனர். திரு. இராமசாமி அவர்கள் உடல் நிலை தொடர்ந்த பிரயாணத்திற்கு இடங்கொடுக்க முடியாத நிலையிலி ருப்பினும், இயக்க வளர்ச்சியை முன்னிட்டு என்ன நேர்ந்த போதிலும் தமது சுற்றுப் பிரயாணத்தை  முடித்து வருவ தென்ற எண்ணத்துடனேயே புறப்பட்டு விட்டார். சுற்றுப் பிரயாணத்தை முடித்து விட்டு மீண்டும் நம் நாடு திரும்பு வதற்கு ஏறக்குறைய 3,4 மாதங்கள் செல்லுமெனத் தெரிய வருகின்றது. இவர்களது சுற்றுப்பிரயாண நிகழ்ச்சிகளும், அவ்வப்போது நமதியக்க சம்பந்தமான கட்டுரைகளும், நமது பத்திரிக்கையில் வெளிவரும் என்பதையும்

தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மேலும் மேலும், நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பற்றி நமது மக்கள் நன்கு தெரிந்து கொள்ளுமாறு இது வரையிலும் மேல் நாடு சென்ற எந்த இந்தியரும் நடு நிலைமையான தாராள மனப்பான்மையுடன் அபிப் பிராயம் கூறியதில்லை. இது மாத்திரமல்லாமல் மேல்நாடு சென்று திரும்பியுள்ள இந்தியர்களான நம்மவர்கள் பெரும்பாலும், அரசியல், கல்வி, மதவிருத்தி இவைகளை பற்றியே தான் இது வரையிலும் ஆராய்ந்திருக்கின்ற னரேயொழிய, அத் தேசத்து மக்கள் வழக்க பழக்கங்கள், மதபக்தி, கடவுள் பக்தி இவைகளை அவர்கள் எந்த அளவுக்குத் தங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்திக் கொள்ளுகின்றனர் என்பதைப் பற்றிச் சிறிதும் கவலை கொண்டதுமில்லை. அவைகளைப் பற்றி நமது மக்களுக்கு எடுத்துக் கூறியதுமில்லை. காரணம் எதுவாக விருக் கலாமென கருதுகின்றீர்கள். அந்நாடுகளின் உண்மையான நிலை நமது மக்கள் தெரிந்து கொண்டால் இந்து மதத்தின் கதி என்னவாகுமோ என்னும் பயமே தான் காரணமாகும்.

இத்தகையவர்கள் தான் இன்று நமது நாட்டில் மேல் நாடு சென்று திரும்பியவர்கள் என்ற புகழுக்குள் புகுந்து கொண்டு மக்களை மிருகங்களெனக்கருதி வேட்டையாடி வருகின்றனர். இப்படிப்பட்ட சமரசமற்ற மனப்பான்மை யுடையவர்கள் எண்ணத்தில் மண்ணையள்ளிப் போடு வதே நமது ஆசிரியரின் சுற்றுப்பிரயாண நோக்கமாகும்.

அய்ரோப்பா சுற்றுப்பிரயாணத்தின் பொழுது ஆங் காங்கு நமது நாட்டு சமுக நிலையையும், நமது இயக்கக் கொள்கைகளையும் பிரச்சாரம் செய்தும் வருவார்கள். இதனால் மேல் நாட்டு மக்களுடைய ஆதரவும் நமதியக் கத்திற்கு ஏற்படும் என்பது திண்ணம்.

உலக ஒற்றுமை வேண்டுமேயானால் சகல தேசமக்க ளுக்கும் பொருத்தமான சமுகச் சட்டங்கள் ஏற்படுதல் வேண்டும். இம்மாதிரியான காரியங்களைச் செய்வதற்கு நமது நாட்டில் முன்வருவோரைவிட தடைசெய்கின் றவர்கள் அல்லது குறை கூறுகின்றவர்கள் தான் மலிந்து காணப்படுகின்றனர். இத்தகையமக்களுக்கிடையே இம் மாதிரியான உணர்ச்சி தூண்டுவதென்பது இலகுவான காரியமல்ல. அதிலும் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதென்பதோ அதிக கஷ்டமான காரியமாகும். இப்படிப்பட்ட காரியங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதற்கான வழிகளை கண்டுபிடித்து மக் களையும் அவ்வழியையே பின்பற்றுமாறு செய்வதென்ற நோக்கத்துடன் தங்களது திரேக நிலையையும், பொருட் செலவையும் கவனியாது சுற்றுப்பிராயணத்திற்குத் துணிந்த நமது கிழச்சிங்கத்தையும், அவரது வலக்கையாம் இராமநாதனையும் எவ்வாறு நமதுமக்கள் போற்றாதிருக்க முடியும்? நம்மைப் பொருத்த வரையில் வெற்றியும், தோல்வியும் ஒன்றேயானாலும், வெற்றியும், தோல்வியும் சந்தர்ப்பத்தை பொருத்ததாகு மென்பது தான் நமதியக்க அபிப்பிராயமேயல்லாது திரு. காந்தியவர்களைப் போல் கடவுள் செயல் என்று ஒரு போதும் கருதுவதில்லை. மேலும் நமது ஆசிரியரும், திரு. ராமநாதன் அவர்களும் திரு. காந்தி அவர்களைப்போல் வெற்றி மாலை சூடி வருவதாகச் சென்று கடவுள் சித்தத்தால் தோல்வியடைந்து விட்டேன் என்ற முகாரி இராகப் பல்லவியைப் பாடிக் கொண்டு  இந்தியா திரும்பப் போவதில்லை. ஏன் எனிலோ? நமது விடுதலை நமது சமுக ஒற்றுமையால் தான் ஏற்பட முடியுமேயல்லாது பிறரை எதிர் பார்த்துத் தூரதேசம் சென்று கிடைத்து விடமாட்டாது என்ற மாற்றமுடியாத அபிப் பிராயமே தான் காரணம்,

ஆகவே, நமது ஆசிரியரவர்கள் வெற்றியையோ, தோல்வியையோ எதிர்பார்த்து அய்ரோப்பா செல்ல வில்லை. தனது உடல் நலன், நமதியக்க வளர்ச்சி, மேல் நாட்டு மக்கள் பழக்கவழக்கங்கள், பொருளாதாரச் சமரசம், தொழிலாளர்கள் நலன், இவைகளைப் பற்றி ஆராயவும் தங்களது ஆராய்ச்சியால்  கிடைக்கப்பெற்றவைகளை இந்திய மக்களுக்கு எடுத்துக் கூறவுமேயாம். இத்தகைய நல்லசந்தர்ப்பத்தை நாம் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக்கொண்டிருந்தோம், ஆனால் சந்தர்ப்பம் இப் பொழுது தான் இடங்கொடுத் திருக்கின்றது. இனி இச்சமயத்தில் நமது கடமை என்ன வென்பதையும் சற்று யோசித்துப் பார்த்தல் வேண்டும். வைதிக, தேசிய, வருணா சிரம, பிராமண, இந்து மகாசம்ரட்சணா, சபை களெல்லாம் தங்களது வேலைகளை வெகு தீவிரமாகச் செய்து கொண்டு வருகின்றன வென்பதுவெளிப்படை. அகில இந்திய காங்கிரஸ் சப் கமிட்டியோ, நாசிக் தீண்டாதார் சத்தி யாக்கிரகத்தை ஆதரிக்க மறுத்து விட்டது. குஜராத் சாதி இந்துக்களோ ஆதிதிராவிடக் குழந்தைகள் தங்களுடைய குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து படிப்பதற்காகத் தீண்டப்படாதார், பயிர், பச்சைகளையெல்லாம் நெருப்பிற்கிரையாக்கினார். வைதிகக் கோஷ்டியினரோ குருவாயூர் சத்தியாக் கிரகத்திற்கு எதிர் சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். திரு. காந்தியவர்களோ தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுப்பதை தனது உயிரைத் தியாகம் செய்வதன் மூலமாகவாகினும் தடை செய்வதாக கர்ஜிக் கின்றார். நம் நாட்டுப் பார்ப்பனர்களோ சாரதா சட்டத்தைக் கொளுத்தி விட வேண்டுமெனத் துள்ளுகின்றனர். மதக்கர்த்தாக்களோ தங்களது கொள்ளை யடிக்கும் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே போகின் றனர். பணக்காரர்களோ அவர்களுக்காதரவளிக் கின்றனர். போதாக்குறைக்கு நமதியக்கத்தைச் சேர்ந்த வர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த பல நண்பர்களும் இன்று பொருளாதார நிலையை உத்தேசித்து நம்மை எதிர்க்கவும் ஆரம்பித்து விட்டனர். இம்மாதிரியான பல திறப்பட்ட எதிர்ப்புகளுக்குள் இன்று நமது இயக்கம் பரவி வருகின்றதென்றால் இன்னும் கொஞ்சம் தியாக புத்தியுடன், பொறுப்புணர்ந்து ஒற்றுமையுடன், வேலை செய்ய முற்படுவோமானால் நமதியக்கத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமுடையதாக விருக்குமென்பதையும் சிந்தித்தல் வேண்டும். நமக்குள்ளிருக்கும்  சில சில்லரை விவகாரங் களை இயக்க சம்பந்தப்படுத்தி இயக்கத்திற்குக் கேடு விளைவிப்பதான வழியில் செல்லுவது நியாயமானதாகாது. ஆகையால் நமது ஆசிரியர், திரு. ராமசாமியும், திரு. இராமநாதனும் அய்ரோப்பா சுற்றுப் பிரயாணம் செய்யும்  பொழுது நாமும் நமது வேலையைத் தீவிரமாய் இங்கு நடத்த வேண்டும்.

பிறப்பதும், இறப்பதும் உலக இயற் கையையேயாயின் பிறப்பிற்கும், இறப்பிற்கும் மத்தியி லிருக்கும், நாட்களைச் சோம்பேறித்தனமாய்க் கழிப்பதென் பதன்று, ஆகையால் ஒன்று கூடுங்கள், இயக்கத்தைப் பற்றிய வேலைகளில் உங்கள் சிந்தையையும்; நேரத்தையும் செலவிடப் பிரயத்தனப் படுங்கள். இவைகள் தான் அய் ரோப்பா சென்று திரும்பும்  நமது ஆசிரியருக்கும், திரு. இராமநாதனுக்கும், நாம் அளிக்கும் பரிசாகும். ஆகவே நமது கடமைகளில் நாம் எப்பொழுதும் தவற மாட்டோ மென்று உறுதி கூறுவதுடன், அய்ரோப்பா சுற்றுப் பிரயாணம், வெற்றியுடனும், சௌகரியத் துடனும், மன சமாதானத்துடனும் இருக்க வேண்டு மென விரும்பு கின்றோம்.

- விடுதலை நாளேடு, 21.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக