சனி, 16 மார்ச், 2019

பெரியார் - மணியம்மை திருமணம் குறித்த அவதூறு.! - 2

இதற்கான விளக்கங்கள் எல்லாம் எப்பொழுதோகொடுக்கப்பட்டு முடிந்துபோன சங்கதி; யார் குற்றம்சொன்னார்களோ அவர்களே பின்னாட்களில்உண்மையை உணர்ந்து விட்ட நிலைதான்.

தொடக்கத்தில் அதனை அதிர்ச்சியாகப் பார்த்தவர்கள்,விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட ஒருசெவிலியராக அன்னை மணியம்மையார் இருந்துதந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழவைத்த தகைமையைக் கண்டு வாயார, நெஞ்சாரப்பாராட்டத்தான் செய்தார்களே தவிர யாரும் குற்றப்பத்திரிகை படிக்கவில்லை.

உலகியலில் கூறப்படும் சாதாரண காரணங்களைதந்தை பெரியார் மீது யாரும் திணிக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் துணைவியார்நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார்அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார்நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூடஇடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின்வீட்டார்கூட எவ்வளவோ வலியுறுத் தியும் கூட திருமணஎண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.

நாகம்மையார் மறைவு கூட ஒருவகையில் நல்லதுஎன்றுதான் கருதினார்.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும்அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாகஇருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்துபார்க்க நேரிட்டால் அம்மாளுக்கு அவை மிகுந்ததுக்கமாகவும், துயரமாகவும் காணக் கூடியதாய்இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது.அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும்சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள்மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன்குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது. (குடிஅரசு 14-_5-_1933) என்று எழுதினார் என்றால் இதனுள்அடங்கியிருக்கும் தத்துவத்தைத் தன்னலம் துறந்தபொது மனத்தினரால்தான் உணர முடியும்.

ஒரு கட்டத்தில் துணைவியர் மறைந்தது நல்லது என்றநிலை; இன்னொரு கட்டத்தில் தனக்கு ஒரு துணைவிதேவை என்ற நிலை அந்தத் துணையும் தனிப்பட்ட- தன்சுக வாழ்வுக்காக அல்ல. தான் வரித்துக் கொண்டுஇருக்கிற புரட்சிகரப் பொது வாழ்வுக்கு, தனதுதள்ளாமை, உடல் நோய் இடையூறாக இருக்கும்நிலையில்,  அதிலிருந்து விடுபடவும், தொண்டறம் புரியசட்ட ரீதியாக அவர் மேற்கொண்ட முடிவும், துணிவும்,எதிர்ப்புகளை சட்டை செய்யாத ஆளுமையும்அய்யாவை ஒரு தனித்தன்மை மேலோங்கும் வைரம்பாய்ந்த மனிதராகத்தான் ஜொலிக்கச் செய்கிறது.

திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17ஆம் ஆண்டில் துணை தேடக்காரணம் என்ன? திருமணஏற்பாட்டுக்குப்பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார்அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும்தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர்வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார்என்பதிலும் அய்யமுண்டோ?

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

நேரம் ஜூலை 16, 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக