செவ்வாய், 19 மார்ச், 2019

என் திருமணம்!

நான் எந்தக் காரியத்தையும் இரகசியமாகச் செய்வதில்லை. ஒரு ஆண்டாகச் சொல்லிக் கொண்டு வந்து காரியத்தைத் தான் திருமணம் என்பதாகச் சட்டப்படி
செய்திருக்கிறேன். அப்படி செய்ய நேர்ந்த அவசியத்தைப் பலமுறை விளக்கியிருக்கிறேன். மனைவி வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்யவில்லை. மனைவி வேண்டும் என்றால் சுமார் 15 வருடங்களுக்கு முன்பே எனது மனைவி இறந்த தருவாயில் என் பெற்றோரும், சுற்றத்தாரும் என்னை மறுமணம் புரிந்து கொள்ளும்படி வற்புறுத்திய போதே செய்திருப்பேன். ஆனால் தற்போது பதிவு செய்து கொண்டதால் எனது தொண்டிற்கு வசதியும்,  நம்பிக்கையான பாதுகாப்பும், வாழ்க்கைக்கு ஆதரவு மற்றும் பல வசதிகளையும் எனது வயது முதிர்ந்த நிலையையும் உத்தேசித்து இந்தப்படி செய்து கொள்ள வேண்டியிருந்தது.

(பெரியார், விடுதலை - 10.10.1949)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக