செவ்வாய், 29 நவம்பர், 2016

பெரியாரை (சு)வாசிக்க வாருங்கள்! - கி.வீரமணி-2


வெளிநாட்டிலிருந்து கிறிஸ்தவ மதமோ, இஸ்லாமிய மதமோ வந்தது என்று சொன் னாலும், அவை இங்கே இறக் குமதி செய்யப்பட்டு,  மத முத் திரையோடு மக்கள் இங்கே கொண்டுவரப்படவில்லை.  அதனைப் பரப்புகின்றவர்கள், ஒருவர், இருவர் வந்திருக்கலாம். ஆனால், இங்கே இருக்கின்ற பழைய இந்துக்கள்தான், அவர்கள் மதம் மாறி இஸ்லாம் மதத்திற்குச் சென்றார்கள்; கிறிஸ் தவ மதத்திற்குப் போனார்கள். காரணம், பிறவிக் கொடுமையாக இருக்கக்கூடிய ஜாதி, அதைவிட மிக மோசமாக நடத்தப்படக்கூடிய, அதனுடைய அடிப்படையைக் கொண்டிருக்கக்கூடிய தீண் டாமையே!

ஜாதியை அடிப்படையாக வைத்துதான் தீண்டாமை உரு வாகியிருக்கிறது.

உலகத்திலேயே தொடக் கூடாத மனிதன், பார்க்கக்கூடாத மனிதன், நெருங்கக்கூடாத மனிதன்,

Untouchable, unapproa- chable, unseeable

என்றெல்லாம்  இங்கு இருக் கின்றன என்று சொன்னால், இதைவிட மிகப்பெரிய கொடுமை எங்கே இருக்க முடியும்? எங்கே தான் பார்க்கவும் முடியும்?

நாம் சொல்வதெல்லாம் ஏதோ பழைய காலத்துச் சங்கதி என்று யாரும் ஒதுக்கிவிட முடியாது.

பிரபலமான பிரச்சினைக் குரியதாக இருந்து பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்றைக்கும் கோடானகோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ் வளித்துக் கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பான மண்டல் கமிசன் அறிக்கையில் (இது, மத்திய அரசாங்கத்திற்குத் தெளிவாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது).  இது சுட்டிக்காட்டப்பட்டும் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, அந்த மண்டல் கமிசனைப்பற்றி ஒரு தீர்ப்பு - அதற்கு விவகாரம் ஏற்பட்டு - அதனுடைய பரிந் துரைகளை அரசு ஏற்றபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள், வேலை வாய்ப்புகளில் மட்டும் முதற்கட்டமாக ஏற்ற போது, அங்கே என்ன பிரச்சினை என்று சொன்னால், நண்பர்களே!

அதற்கு எதிராக, உச்சநீதி மன்றத்திற்குச் சென்றார்கள். அங்கே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது - 1991-1992 ஆம் ஆண்டுகளில்.

அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்தில், அந்தத் தீர்ப்பு  (இந்திரா - சகானி வழக்கு) முற்போக்கு ஜாதி என்று கருதப் படக்கூடிய ஒருவரால்தான் எழுதப்பட்டது.

அந்த நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதியும் இருந்தார். அந்தப் பெரும்பான்மையான தீர்ப்பில்கூட, தெளிவாக - இந்தியாவில் ஏறத்தாழ 4 ஆயிரம் ஜாதிகள் இருக்கின்றன. இந்து மதம் என்பது இருக்கிறதே, அது வருண தருமத்தையும், அதேபோல, கருமா தத்துவத்தையும் அடிப் படையாகக் கொண்டிருக்கக் கூடியது.

அதன் காரணமாகத்தான், காலங்காலமாக படிக்காத மக்கள், படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்பது பதிவாகியிருக்கிறது.

உலகத்தில் சுதந்திரமடைந்து இன்றைக்கு 70 ஆண்டுகள்  ஓடியிருக்கின்ற ஒரு நாட்டில், மனிதனுக்கு மற்ற சுதந்திரங்கள் எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும்; தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்கள், சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? பஞ்சமன் இருக்கலாமா? பார்ப்பான் இருக்கலாமா?  என்று கேட்டார்.

அவருக்கொன்றும் தனிப் பட்ட முறையில் எவர்மீதும் கோபம் கிடையாது. தனிப்பட்ட முறையில் எவர்மீதும் வெறுப்பை உண்டாக்கவேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. ஒரு மனிதனுக்குள்ள வாய்ப்பு, இன் னொரு மனிதனுக்கு மறுக்கப் படலாமா?

ஒரு மனிதன் பிறவியின் காரணமாக ஜாதியில் உயர்ந்தவன் என்று சொல்லி, அவனுக்கு எல்லா வாய்ப்புகளையும் கொடுப்பது, காலங்காலமாக உழைக்கின்ற மக்களுக்கு, இந்த மண்ணுக்குரிய மக்களுக்குப் பிறப்பின் காரண மாக அந்த வாய்ப்புகளை மறுத்திருக்கிறார்கள் என்று சொன் னால், அது எப்படி நியாயம்? எனவேதான், சமத்துவம் என் பதை அடிப்படையாகக் கொண்டு, அந்த சமத்துவத்தையே மய்யப் படுத்தித்தான் ஜாதி ஒழிப்பு என் றாக்கினார்கள்.

அப்படி வரும்பொழுது, பிறவி பேத ஒழிப்பு என்ற மிகப்பெரிய தத்துவத்தைக் கையில் எடுத் தார்கள். அதில் மனிதர்கள் என்று சொல்லும்பொழுது, ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் என்று தனியே பிரித்துப் பார்க்கவில்லை.  ஏனென்றால், ஜாதி என்ற தத்து வம் இருபாலருக்கும் பொருந் தக்கூடியதாகத்தான் அன்றைக் கும் இருந்தது; இன்றைக்கும் இருக்கிறது.

எனவே, அது வெறும் ஆண்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதல்ல. எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் தன் னுடைய அறிவியல் போக்கை, சிந்தனையை இன்னும் தாராள மாக செலவிட்டு, பிறவி பேதம் என்பது இருக்கிறதே - அது உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்பதாக மட்டும் மய்யப்படுத்தப்படவில்லை. மாறாக, 'ஆண் பிறவியிலேயே உயர்ந்தவன்; பெண் பிறவி யிலேயே தாழ்ந்தவள்' என்று ஆக்கப்பட்டுள்ளது.

ஜாதி அடுக்கு முறைகள் மனுதர்மத்திலும்சரி, பகவத் கீதையிலும் சரி, இரா மாயணத்திலும், மகாபாரதத்திலும் சரி மிகத் தெளிவாக பல்வேறு கொடுமைகளான நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவை நடந்தனவா? இல்லையா?  என்பது பிறகு; ஆனால், மனுதர்மம் நாட்டில் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கக்கூடிய அதே அடிப்படையில்தான், இன்றைக்கும் 'தீண்டாமை' ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சட்டத்தில் செய்தார்களே தவிர, இந்திய அரசியல் சட்டத்தின் மூலம், சுதந்திரம் வந்து 70 ஆண்டுகாலத்தில், இன்னமும் ஜாதி ஒழிக்கப்படவில்லையே!

ஜாதிதான் தீண்டாமையி னுடைய விஷ விருட்சம். ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டால், தீண்டாமை இருக்க முடியாது. ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள், அரசமைப்புச் சட்டத் தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்ற இடத்தில், ஜாதி என்ற சொல்லைப் போடுங்கள் என்று சொன்னார்.

தெருவில் நடக்கின்ற உரி மைக்காகப் போராடினோம், படிக்க உரிமை - அதற்காகப் போராடினோம், வெற்றி பெற் றோம். அதுபோல, உண்ணு வதற் குரிய இடத்துக்கான உரிமை, அதற்காகப் போராடி னோம், அதிலே வெற்றியும் பெற்றோம்.

(நாய்களும், பறையர்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று சென்னை மவுண்ட் ரோடு, ஜார்ஜ் டவுன் போன்ற இடங்களில் உணவு விடுதிகளில் போர்டுகள் மாட்டப்பட்டிருந்தன. இரயில் நிலையங்களில் உணவகங்களில் பிராமணாள், சூத்திராள் சாப்பிடும் இடம் என்று விளம்பரப் பலகைகள் மாட்டப்பட்டு இருந்த காலம் உண்டு. அவற்றை எல்லாம் மாற்றியமைத்தோம்).

இவை எல்லாவற்றையும்விட ஜாதிப் பாம்பை நாங்கள் இடையறாமல் அடித்து, அடித்து அதனை ஒழிக்கவேண்டும் என்கிற நேரத்தில், அந்தப் பாம்பு  பாதுகாப்பான ஓர் இடத்தில் நுழைந்து கொண்டது. அதுதான் கோவில் கருவறை!  தன்னுடைய 95 ஆம் வயதில் தந்தை பெரியார் அவர்கள், ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும்'' என்கிற மிகப்பெரிய போராட்டத்தினை பல கட்டங்களில் அறிவித்தார், அதனை நடைமுறைப்படுத் துவதற்காக நானே களத்தில் நிற்பேன் என்றார். அதற்காக மாநாடுகளை நடத்தி, அதன் முடிவுகளையெல்லாம் மக்களுக்கு அறிவித்தார். அதற்கிடையில், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பாக, அரசியல் சட்டத்தினுடைய நகலை - ஜாதி ஒழிப்பிற்காக எரித் துக்கூட காட்டினார் (26.11.1957).

சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? பறையன் இருக் கலாமா? பள்ளன் இருக்கலாமா? சக்கிலியன் இருக்கலாமா? தொடக் கூடாதவன் இருக்கலாமா? என் றெல்லாம்  தந்தை பெரியார் கேள்வி எழுப்பி, மிகப்பெரிய போராட்டங்களை அடுக்கடுக்காக நடத்தியபொழுது, அதைப்பற்றி கவலைப்படாத ஆட்சி இருந்த நேரத்தில், தங்களுடைய உணர் வுகளைக் காட்டுவதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் நகலை எரித்து, நாங்கள் எங்களுடைய உணர்வுகளைக் காட்டுவோம் என்றார்.

இதுவரையில் இந்திய வரலாற் றில், ஏன் உலக வரலாற்றிலே கூட, நாம் தேடிப் பார்க்கும்பொழுது, அரசியல் சட்டத்தை - திட்டமிட்டு எரித்த ஒரு இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு ஏது மில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற சகோதரத்துவம், சமத்துவம் அதே போல, சுதந்திரம் என்பதைப்பற்றிநாம் வரவேற்றாலும், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள் இவை எல்லாம் பாராட்டப்பட வேண்டியவை களாக இருந்தாலும் கூட, ஜாதியைப் பாதுகாக்கின்ற நிலையிலிருந்து அது மாறுபட வில்லையே! எனவே, அந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வாருங்கள் என்பதை வலியுறுத் துவதற்காகவும், அந்த ஜாதியைப் போக்கவேண்டும் என்ப தற்காகவும் மக்கள் மத்தி யில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று, எண்ணினார் பெரியார் - எண்ணியபடியும் தன் இறுதி மூச்சு அடங்கும் வரை செய்தும் கொண்டும் இருந்தார்.

சுவாசிப்போம் நாளை...
-விடுதலை,29.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக