திங்கள், 28 நவம்பர், 2016

பெரியாரை (சு)வாசிப்போம் !

பெரியாரை (சு)வாசிப்போம் எனும் தலைப்பில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் இப்பகுதியில் எழுதப்படும் கருத்துச் செறிவும், தகவல்களும் மிகுந்த கட்டுரைகள் இளைஞர்களும், புதிய தலைமுறையினரும் அறிந்துகொள்ளவேண்டிய அரிய கருவூலமாகும்.

வாசியுங்கள் - சுவாசியுங்கள்!

அறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்களை வாசிக்க வாருங்கள் தோழர்களே, சான்றோர்களே!

தோழர்களே என்று சொல்லும்பொழுது தோழியர்களை விட்டுவிட்டீர்களா? என்று கேட்காதீர்கள்.

பெரியார்,‘தோழர்களே’என்று அழைத்தபோதே, அது இருவருக்கும் சம வாய்ப்பு - சமத்துவம் என்ற  அந்த தத்துவத்திலேதான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். எனவே, இதில் முப்பாலரும் இணைந்திருக் கின்றனர். முப்பாலர் மட்டுமல்ல, எப்பாலரும் இதிலே இணைவார்கள். எப்பாலர் யார் என்று சிலருக்கு சங்கடங்கள் அல்லது சந்தேகங்கள் வரலாம்.

எப்பாலர் என்பவர் இந்தக் கோளில் மட்டுமல்ல, எங்கேயி ருந்தாலும் - எதிர்காலத்தில் எத்தனையோ மாறுதல்கள் வரும். அதையெல்லாம் உணர்ந்தவர்கள் அவர்கள். இனிவரும் உலகம் எப்படியிருக்கும்? என்றெல்லாம் சொல்லக்கூடியவர்கள்.

ஒரு பேச்சுக்காக மட்டும் என்பதல்லாமல், தனி மனிதர்களிடமிருந்து மாறுபட்டு உயர்ந்த வர்கள். தன்னுடைய அறிவின் தரத்தால் தனி இடத்தைப் பெற்றவர்கள் - அறிவியல் மேதைகள், விஞ்ஞானிகள்.ஆகவே,அவர் களுக்கும்கூடபெரியார்அவர்களுடைய கருத்துகள் வாசிக்கப்படவேண்டியவை-அவர்களும் கூட அதனை சுவா சிக்கக்கூடிய அவசியம் உண்டு என்பதை மிகத் தெளிவாக உணரவேண்டிய காலகட்டம் இது.

தந்தை பெரியார் அவர்கள் மனித குலத்துக்கு சமத்துவம் என்ற தத்துவத்தை முன்வைத்துத்தான், தன்னுடைய இயக்கத்தைத் தொடங்கினார்.

அந்த இயக்கத்திற்கு, உலகில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத தனிப்பெருமை என்ன? மிகத் தெளிவாகவே அந்த கருத்துக்குரியது - சுயமரியாதை இயக்கம் என்று சொன்னார்கள். அப்படி சொல்லிவிட்டு, அதற்கு விளக்கமும் சொன்னார்கள்.

சுயமரியாதை இயக்கம் இருக்கிறதே, அந்தப் பெயரை திட்டமிட்டுத்தான் வைத்தோம். உலகில் உள்ள அத்தனை அகராதிகளையும் எடுத்துப் புரட்டிப் போட்டுப் பார்த்தாலும், சுயமரியாதை என்ற ஒரு சொல்லுக்கு இணையான சொல் மனிதகுலத்திற்கு வேறு இருக்கவே முடியாது.

அந்த வகையில்தான் மிகத் தெளிவாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சுயமரியாதை இயக்கம் என்று மனித உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் அந்த இயக்கத்தை இந்தி யாவில் முதன்முதலாக, வேறு எவரும் சிந்திக்காத நிலையில் தோற்றுவித்தார்கள் - புதிய பாதையையும் உருவாக்கினார்கள்.

சமத்துவம் என்னும்போது, அதற்கு அடிப்படை என்ன வென்றால், மனித குலத்திலே பேதமிருக்கக்கூடாது என்பதுதான் மிக முக்கியம். அந்த சமத்துவம் என்பது ஒவ்வொரு துறையிலும் மிகத் தெளிவாக இருக்கவேண்டும் என்றஅவர்களுடையகருத்து இன்றைக்கு உலகத்திலுள்ள எல்லோராலும் ஏற்றுக்கொள் ளப்படக் கூடிய - உலகத் தத் துவங்களிலே ஒன்றாக அது அமைந்திருக்கின்றது.

‘பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்‘ (‘குடிஅரசு’, 11.11.1941) என்று குறள் போல் கூறுகிறார் - சமத்துவ சமதர்ம சீலராம் தந்தை பெரியார்.

அதுமட்டுமல்ல தோழர்களே! இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், சமத்துவத்திற்கு அடிப்படை பகுத்தறிவு! பகுத்தறிவு என்றாலே, அறிவியல் என்று பொருள். சிந்தித்து, சிந்தித்து நேற்று நடந்தவை மாற்றப்படவேண்டும் என்றால், இன்றைக்கு அது தவறு என்று சொல்லி, துணிச்சலாகப் போகக்கூடிய ஒரு சூழல் அவசியம்!

இங்கேதான் மதத்திற்கும், அறிவியலுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய தனித்தன்மைகள், வேறுபாடுகள் பளிச்சென்று விளங்கும்.

எதையுமே சிந்திக்கக்கூடாது, எதையுமே கேள்வி கேட்கக் கூடாது என்பது மதத்தின் அடிப்படை!

பகுத்தறிவின் அடிப்படை என்பது, எதையும் கேள்வி கேள்! எதையும் முழுமையாக நம்பிவிடாதே என்று தெளிவாக சொல்வதுதான் இந்தப் பகுத்தறிவினுடைய அடிப்படை! அதனை மய்யப்படுத்தித்தான் தந்தை பெரியார் முன்வந்தார். அவர்கள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் தன்னுடைய இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை.

பதவிக்குப் போவதற்கோ, பதவிகள் பெற்று புகழ் பெறுவதற்கோ, அல்லது பதவிகளினால் லாபம் அடைவதற்கோ தந்தை பெரியார் அவர்கள் ஒருபோதும் எண்ணியதில்லை. மாறாக, அவர் வகித்து வந்த 29 பதவிகளையும் ஒரே கடிதத்தில் எழுதி, ராஜினாமா செய்துவிட்டு, நான் சமூக இயக்கத்திற்கு வருகிறேன்; அதுவும் குறிப்பாக காங்கிரசு பேரியக்கம் அரசியல் கட்சியாக இருந்தாலும்,  அது ஆட்சிக்கு வந்தால், சமூக நோக்கமான ஜாதி ஒழிப்பு, அந்த ஜாதி ஒழிப் பிற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகுப்புரிமை, சமூகநீதி கைகூடும் என்கிற உணர்வை அவர்கள் பெற்றார்கள், நம்பினார்கள்.

காந்தியாரின் நிர்மாணத் திட்டங்கள் அவரைக் கவர்ந்தன.

சமூகநீதிக்கு இடமில்லை என்று சொல்கிறபோது, வெளிப்படையாகவே, இனிமேல் பதவிக்கோ, அரசியல் கட்சிக்கோ போகவேண்டிய அவசியமில்லை. எனவே, சமூக பணிதான் மிக முக்கியம், மனித சமத்துவம்தான் மிக முக்கியம். மானம்தான் மிக முக்கியம் என்று எண்ணி,  அவர்கள் சுயமரியாதை இயக்கம் என்ற அந்த இயக்கத்திற்குக் கால்கோள் விழா நடத்தி, இன்றைக்கு 90 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வியக்கம் வளர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டத்திலேயே பற்பலவிடங்களிலும் அது உருவாகியிருக்கிறது.

ஆகவே, சுயமரியாதை என்கிற சொல்லும், அது பரப்பிய கதிரொளியும் சாதாரணமானதல்ல. மனிதர்கள் என்பவர்களுக்கு என்ன அடையாளம் என்று பெரியார் கேட்கிறார்.

‘‘மானமும், அறிவும்தான் மனிதர்களுக்கு அழகு’’ என்ற ஒரு கருத்து  இருக்கிறதே, அது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். அறிவில்லாத மனிதன் என்று சொன்னால், இல்லாதவனுக்குக்கூட கோபம் வருகிறது. உனக்கு மானம் இல்லையா? என்று கேட்கும்பொழுது, சிந்திக்கத் தெரிந்தவன் கோபப்படுகிறான். உணருகிறான்.

அதுபோல, மனிதர்களுக்கு அடையாளமே,  மானமும், அறி வும்தான்.

இது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஒன்று. இதுவே பிராணிகளுக்கு, அய்ந்தறிவு உள்ள பிராணிகளுக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

எனவேதான், இந்த சமத்துவத்திற்கு மிகப்பெரிய ஆபத்து - மற்ற நாடுகளில் இருப்பதைவிட, இந்தியாவில் மிக அதிகமாக தேவைப்படுகிறது.

காரணம் என்னவென்றால், உலகில் எங்குமில்லாத மிகப் பெரிய பிறவிக் கொடுமையாக இருக்கக்கூடிய வருணாசிரம தருமம் என்ற ஜாதி இங்கே புகுந்து, மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தி, ஒருவர் உண்ணும்போதுகூட இன்னொருவர் பார்க்கக்கூடாது; ஒருவர் நடக்கின்ற தெருவில் இன்னொருவர் நடக்கக்கூடாது. ஒருவர்படிக்கும்பொழுது,இன்னொருவர் படிக்கின்ற வாய்ப்பையே பெறக்கூடாது என்ற நிலையைப் பலமாக உருவாக்கிக் கட்டமைப்பும் செய்துவிட்டனர்.

மனித குலத்திற்கு எவையெல்லாம் அத்தியாவசியமோ, அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்திய பெருங்கொடுமை - சனாதன மதம், வேத மதம் என்ற பார்ப்பன மதமான ‘இந்து மதம்‘ இங்கு பெரும்பான்மையானதாக விளங்குகிறது.

இந்த நாட்டைப் பொறுத்த வரையில்,மற்றமதங்கள் வளர்ந்ததற்குக்கூட ஒரு பெரிய அடிப்படையான காரணம், மற்றவர்களை இழிவுபடுத்தும், ‘பிறர் உரிமை களைப் பறிக்கும்‘ இந்து மதத்தின் இந்த வருணாசிரம தரும முறை தான் என்பதை யாராலும் மறுக் கப்படவே முடியாத ஒன்றாகும்.

சுவாசிப்போம் நாளை...

-விடுதலை,28.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக