புதன், 30 நவம்பர், 2016

பெரியாரை (சு)வாசிக்க வாருங்கள்! - கி.வீரமணி-3

1922 ஆம் ஆண்டில் திருப் பூரில் நடைபெற்ற 28ஆம் தமிழ் மாநில காங்கிரசு மாநாட்டில் தந்தைபெரியார்எதைப்பேசி னார்களோ,அதையேசுய மரியாதை இயக்கம் தொடங்கி -அதுவெற்றிபெற்று,பல போராட்டங்களை நடத்திய பொழுதுகூட-தொடர்ந்துசெய் தார்கள். அவரைப் போல அடிப்படைக் கொள்கைகளில், ஒரு ‘கன்சிஸ்டன்சி’ என்று சொல் லக்கூடிய  - மாறாமல் தொடர்ந்து அதற்காகவே போராடிக் கொண் டிருந்த ஒரு தலைவர், ஒரு இயக்கம் வேறு இருக்கவே முடியாது.

அந்த வகையில் நண்பர் களே, தோழர்களே!

நீங்கள் நினைத்துப் பாருங் கள் சட்ட எரிப்பு என்ற ஒரு அறிவிப்பினைக் கொடுத்தவுடன், இந்திய அரசாங்கம் ஆடிப் போயிற்று. இங்கே காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். மத்தியில் பிரதமராக நேரு அவர்கள் இருந்தார்.

மிரட்டிப் பார்த்தார்கள். மூன்றாண்டுகள் சிறைச்சாலை; ஆயிரம் ரூபாய் அபராதம் என்று பெரியாருக்காகவே அந் தச் சட்டம் வந்தது.

திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்பிற்காகநடத்தியபோராட் டங்களுக்காகவே - அதனைத் தடுப்பதற்காகவேஅந்தச்சட்டத் தைக் கொண்டு வந்தார்கள். மூன்றாண்டுகள் சிறைத் தண் டனை என்று சொன்ன நேரத்தில், தந்தை பெரியார் அவர்களும், அவருடைய தொண்டர்களும் நடந்தவிதம் இருக்கிறதே, யாரையும் மயிர்க்கூச்செறிய வைக்கக்கூடிய ஒன்று என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியார் எழுதினார்:

மூன்றாண்டுகள் என்ன? முப்பதுஆண்டுகள்தண்டனை கொடுத்தாலும்,எங்கள் உயிரை அதற்காகத் தியாகம் செய்வோமே தவிர, நாங்கள் எங்கள் கொள்கையில், லட்சி யத்தை அடையும் வரையில் பின்வாங்கமாட்டோம்; ஓயமாட் டோம் என்று அறிவித்து, பெயர்ப் பட்டியலைக் கொடுங்கள் என் றார்.

எங்களுக்கும்பெயர்ப்பட் டியலைஅனுப்புங்கள்,உங்கள் ஊரிலுள்ள காவல் நிலையத்திற் கும் அனுப்புங்கள் என்று சொன்னார் தந்தை பெரியார்.

இப்படி ஒழுங்கான முறை யில், சட்டத்திற்கு உட்பட்டு போராட்டம் நடத்துகின்ற இயக்கம் - பொதுச் சொத்துக்கு நாசமில்லாமல் போராட்டம் நடத்துகின்ற இயக்கம் - பொது ஒழுங்குக்குப் பங்கம் இல்லாமல் போராட்டம் நடத்துகின்ற இயக்கம் - பொதுமக்களுக்கு சங்கடத்தைத் தராத இயக்கம் - தங்களை அந்தக் கொள்கைக்காக வருத்திக் கொள்கின்ற ஒரு இயக்கம் என்று சொன்னால், அது முழுக்க முழுக்க அன்றைய சுயமரியாதை இயக்கம் - பிறகு திராவிடர் இயக்கமாக மாற்றப்பட்ட - திராவிடர் கழக மான இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக அதனைச் செய்தார்கள்.

தோழர்கள்பயந்துபோனார் களா? காலையில் போய், மாலை யில் வருவோம் என்கிற அந்த உணர்வோடு இப்பொழுது பல போராட்டங்கள் நடக்கின்றனவே,  அது போலவா?  அப்பொழுது அப்படியில்லை.

பெரியார் சொன்னார்,

யாருக்குவாய்ப்புஇருக் குமோ, அவர்கள் சிறைச்சாலை யில் நீண்ட காலமாக இருக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்புஉள்ளவர்கள்மட்டுமே வாருங்கள் என்று தொடக்கத்தி லேயே கூறி விட்டார்.

அப்படி வருகின்ற நேரத் தில், 10 ஆயிரம் பேர் இந்திய அரசியல் சட்ட நகலைக் கொளுத்தினார்கள். மூன்றாண்டு சிறைத் தண்டனை என்று சட்டம் வந்த பிறகும்கூட கொளுத்தினார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பெரியார் சொன்னதை, ராணு வக் கட்டுப்பாடு போன்று, அவருடைய தொண்டர்கள் ஏற்றார்கள்  - சிறைப்பட்டார்கள்.

அன்றைய காவல்துறை 3 ஆயிரம் பேரை மட்டும் தான் கைது செய்தது. அதில் 6 மாதம் முதற்கொண்டு 3 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்தவர்கள் அந்த 3 ஆயிரம் பேரும் சிறையில் அவர்கள் நடத்தப்பட்டவிதம் - மிகக் கொடுமை, கேவலம்!

மலம் அள்ளுவதிலிருந்து, உலக்கைக்கொண்டுநெல் குத்துவது வரையில், அவர் கள் ஏதோ மிகப்பெரிய குற்ற வாளிகள் போன்ற அளவில்; ஜாதி ஒழிப்பிற்காகப் பாடுபட்ட அந்த மாபெரும் வீரர்கள் - தியாக மறவர்கள் அந்தத் தண்டனையை மகிழ்ச்சியோடு தான் ஏற்றுக்கொண்டார்கள்.

அப்படி அவர்கள் சிறைச் சாலையில் இருந்தபொழுது, உள்ளேயும், வெளியேயும் 18 உயிர்கள் ஆண்களும்- பெண் களுமாக இருபாலரும் இறந்து வரலாறு படைத்தார்கள்.

சிறைச்சாலையில் இறந்த வர்களின் உடலைப் பெற்று, அந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தக்கூடிய வாய்ப்பை, அன்னை மணியம் மையார் அவர்களும், நானும், தோழர்களும் பெற்றது  - எங்கள் வாழ்க்கையில், இந்தத் தியாக மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய மிகப்பெரிய வாய்ப் பாகும்.

இறந்தவர்களின் குடும்பத்தி னருக்கு ஆறுதல் சொல்வதற்காக  சென்றபோது - லால்குடியைச் சேர்ந்த நாகமுத்து அவர்கள் இறந்தபோது, அவருடைய தாய் சொன்னார்,

எனக்கு இன்னொரு மகன் இருக்கிறான்; அய்யா அவர்கள் மீண்டும்போராட்டத்தைஅறி வித்தால், அவனை நான் அனுப்புவேன் என்றார்.

இப்படி ஒரு இயக்கத்தை - ஜாதி ஒழிப்பிற்காக தோழர் களைப்பார்த்ததுண்டா? கொண்ட லட்சியத்திற்காக இப் படி பாடுபட்டவர்களைத்தான் கண்டதுண்டா?

அதைவிட இன்னொரு மிக முக்கியமான செய்தி:

18 வயதுக்குட்பட்ட சிறுவர் கள் கூட சட்டத் தாளைக் கொளுத்தித் தண்டனைத் தழும்பை ஏற்றனர்.

வேலூர் சிறைச்சாலையில்  திருச்சி வாளாடியைச் சேர்ந்த சிறுவன் பெரியசாமி ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றி ருந்தான்.

அன்றைய தினம் வேலூர் சிறைச்சாலைக்குச் சென்ற  ஆளுநர் விஷ்ணுராவ் மேதி - அங்கே இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து,

இவன் என்ன குற்றம் செய்துவிட்டுவந்தான்?என்று அருகிலிருந்த சிறை மேலதிகாரி யைக் கேட்டார்.

அந்த சிறை மேலதிகாரி சொன்னார், இந்தப் பையன் அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி, ஆறு மாத சிறைத் தண்டனை பெற்று இருக்கிறான் என்றார்.

ஏன் இப்படியெல்லாம் செய்தாய்? சரி, நீ தெரியாமல் செய்திருப்பாய். நான் உனக்காகப் பரிந்துரை செய்து, விடுதலை செய்யச் சொல்லுகிறேன். நீ வெளியில் சென்று ஒழுங்காக இருப்பாயா? என்று ஆளுநர் மனிதநேயத்தோடு கேட்டபோது,

அந்த சிறுவன் சொன்ன பதில், ஆளுநரையும், அதிகாரி களையும், மற்றவர்களையும் மெய்சிலிர்க்கச் செய்தது.

காரணம் என்னவென்று சொன்னால்,

அந்த சிறுவன் சொன்னான்,

‘‘அய்யா நான் வேறு எந்தத் தவறும் செய்துவிட்டு சிறைச்சாலைக்குள் வரவில்லை. சமூகத்திற்காக, ஜாதி ஒழிப்பிற்காக எங்களுடைய தலைவர் தந்தை பெரியார் அழைப்பு விடுத்தார். அதனுடைய கருத்துப்படி நான் கொளுத்திவிட்டுவந்திருக்கி றேன். மீண்டும் பெரியார் போராட்டம்நடத்தினால்,அதில் கலந்துகொள்வேன்; சிறைத் தண்டனைக் கொடுத்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற் பேன்’’ என்று சொன்னான்.

இதைக் கேட்டு, அசாமிலி ருந்து வந்த ஆளுநர் விஷ்ணு ராவ் மேதி அவர்கள் வியந்து போனார்.

இப்படி ஒரு இயக்கம், எத்த னையோ போராட்டங்களை நடத்தி, கடைசியாகத்தான் தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு காலத்தில், மிகத்தெளிவாக ஒரு பெரிய வாய்ப்பாக, ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை  வேண்டும்‘’ என்று கரு வறைக்குள் நுழைந்து கொண்ட, ஜாதி தீண்டாமைப் பாம்பை அடிக்கவேண்டும் என்று முயற்சி செய்தார்கள்.

அதைப்பற்றி நாளைப் பார்ப்போம்...

-விடுதலை,30.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக