புதன், 30 நவம்பர், 2016

திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்!

எத்தனை அம்புகள் நம்மை நோக்கி வந்தாலும்

திராவிட இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்

சென்னை, நவ.30- திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்; இதனை எவராலும் வீழ்த்த முடியாது என்றார் தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் நேற்று மாலை (29.11.2016) நடைபெற்ற நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் தி.மு.க  பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திராவிடப் பேரியக்கத்திற்கு

நாம் எந்நாளும் காட்ட வேண்டிய நேசம்!

நம் தந்தையை எப்படி கொண்டாடு கிறோமோ, நமது தாயை எவ்வாறு போற் றுகிறோமோ, நம் நாட்டை எப்படி நேசிக் கிறோமோ, நம்முடைய மாநில மக்களை எப்படி மதிக்கிறோமோ, அந்த வகையில் நம்மை வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கக்கூடிய திராவிடப் பேரியக்கத்திற்கு நம்முடையநேசத்தைதொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்த உணர் வோடுதான்திராவிடஇயக்கத்தின்நூற் றாண்டு விழாவை கொண்டாடிக் கொண் டிருக்கிறோம்.

திராவிட இயக்கம் என்ன சாதித்தது என்பதற்கு இந்த மேடையும், அரங்க மும்தான் அடையாளம். இந்த மேடையில் இருப்பவர்கள் நேரம் பார்க்காமல் எந்த குலத்தில் பிறந்திருக்கிறார்கள் என்ற பேதம் பார்க்காமல், மனித குலத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத்தான் நாம் பார்க்கிறோம். அதுதான் இந்த நூற் றாண்டு விழாவின் சிறப்பு, தமிழகம் இன்று கண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி என்பதை நான் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த விழாவில் நீங்கள் பக்கத்தில் இருப்பவர்கள்என்னகுலத்தில்பிறந்தி ருக்கிறார்கள் என்ற பேதம் பார்க்காமல் அம்ர்ந்திருக்கிறீர்கள். இந்த அரங்கம் மட்டுமல்ல, அரங்கத்துக்கு வெளியே சென்றுபேருந்திலோ,ரயிலிலோ,சேர் ஆட்டோவிலோ பயணிக்க இருக்கிறீர் கள். அப்படிப் பயணிக்கின்ற நேரத் தில் யார் என்ன குலம் என்று பார்க் காமல் பயணிக்கிறீர்கள். இதுதான் நூற்றாண்டுக் கால திராவிடர் இயக்கத்தின் வெற்றி. இந்த தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா முழு வதும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. திரா விட இயக்கத்தின் சாதனை இதுதான். நூறாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் நிலை என்ன?

அய்யாவுக்கு “தந்தை பெரியார்’’ எனப் பெண்கள் பெயர் சூட்டி மகிழ்ந்த நிகழ்வு!

உதாரணத்துக்கு ஒன்றை நான் குறிப்பிட விரும்புவது,  வடசென்னை பகுதியில் அமைந்திருக்கக்கூடிய வால் டாக்ஸ் சாலையில் உள்ள ஒற்றை வாடை அரங்கத்தில் 1890- ஆம் ஆண்டு இந்து வினோத சபை சார்பாக ஒரு நாடகம் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட நாடகத்துக்கு ஒரு விளம்பரப்பலகை வைத்திருக்கிறார்கள். அந்த விளம்பரப் பலகையில்இருக்கக்கூடியஒருவாச கம் “பஞ்சமர்களுக்கு இந்த அரங்கில் இடமில்லை” என்று அதில் எழுதப்பட்டி ருந்தது. அதாவது கட்டணம் செலுத்தினா லும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் இடம்பெற முடியாத நிலை அன்றைக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஜாதிக் கொடுமை, தீண்டா மையை மாற்றிட பாடுபட்டு வெற்றி பெற்ற இயக்கம்தான் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. “பஞ்சமர்களுக்கு இந்த அரங்கில் இடமில்லை’’  என்று சொன்ன அதே ஒற்றை வாடை அரங்கத்தில் பஞ்சமர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்க ளும் பங்கேற்கக்கூடிய வகையில் பல நிகழ்ச்சிகள், பல நாடகங்களை நடத்திய இயக்கம்தான்நம்முடையதிராவிட இயக் கம். இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால்1938- ஆம் ஆண்டு. அதே அரங்கத்தில் பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில்தான் தந்தை பெரியார் அவர்களுக்கு ‘பெரியார்’ என்ற பட்டத் தையே வழங்கிச் சிறப்பித்தார்கள். திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் இயக்கம்தான் நீதிக்கட்சி. அது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னரே 1912-ஆம் ஆண்டு டாக்டர் நடேசன் அவர்கள் ‘திராவிடர் சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கினார். அப்போது உயர்சாதி சார்ந்த மாணவர்களுக்கு கிடைத்த கல்வி வசதி மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. சென்னையில் அவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் கிடையாது.

இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த கம்யூனல் ஜி.ஓ.

அதைவிடக் கொடுமை என்னவென்று கேட்டால், அங்கிருக்கக் கூடிய உணவ கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. அப்படி ஒரு கொடுமை. இப்படிப்பட்ட நிலையில் டாக்டர். நடேசனார் அவர்கள், திராவிடர் மாணவர் விடுதியை தொடங்கி, மாணவர்கள் உணவும், உறைவிடமும் கிடைக்க வழிவகை செய்தார்கள். 1920 ஆம் ஆண்டிலே, பிரிட்டிஷ் காலத்தில், இரட்டை ஆட்சி முறையில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. 1937 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்த நீதிக்கட்சி காலத்திலேதான் சமூகநீதிக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய வகுப்புவாரி உரிமைக்கான கம்யூனல்ஜி.ஓ.ஏற்படுத்தப்பட்டு,அதன் மூலமாகவேலைவாய்ப்பில்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தாழ்த்தப் பட்டவர்களை  இழிவான சொற்களால் அழைக்கக் கூடாதென அதற்கு மாற்றாக ஆதி திராவிடர் என்ற பெயரை பதிவேட்டில் ஏற்றியது நீதிக்கட்சிதான் என்பதை  நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடவுளின் பெயரால், வர்ணாஸ்ர மத்தின் பெயரால், தேவதாசி தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் குல வழக் கத்தை ஒழித்ததும் நீதிக்கட்சிதான். இங்கு எல்லோரும் பெருமையோடு சொல்வதுபோல,பெண்களுக்குவாக்குரி மையைஅளித்ததுமட்டுமல்லஅவர் களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கி யதும் நீதிக்கட்சிதான்.

‘மதிய உணவுத் திட்டம்’

முதன் முதலில் கண்டவர் வெள்ளுடை வேந்தர்!

மூத்த தலைவரான வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அவர்கள் சென்னை மாநகராட்சியின் சார்பிலே, அந்த மாநகராட்சியினுடைய பள்ளிகளிலே இலவச மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.  கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், அனைத்து சமூகத்தினரின் உரிமையை நிலைநாட்டவும் இந்து அறநிலைய சட்டத்தை பனகல் அரசர்தான் நிறை வேற்றினார். அப்போதெல்லாம், மருத் துவம் படிக்க வேண்டுமென்றால், சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு நிபந்தனை இருந்தது. அந்த நிலையை தகர்த்து அனைவரும் மருத்துவம்பயிலும் நிலையை ஏற் படுத்தியவர் பனகல் அரசர். 1937 ஆம் ஆண்டு வரை நீடித்த நீதிக்கட்சி ஆட்சியில் சமூகநீதி சார்ந்த சட்டங்கள் மூலமாகவும், திட்டங்கள் மூலவமாகவும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் நம்முடைய உரிமைகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

1967 ஆ-ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலே ஆட்சிக்கு வருகிறோம். முதன்முறையாக தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.

1969 இல் ஆட்சி அமைத்து - உரிமை மீட்புப் போர் நடத்தியவர் பேரறிஞர் அண்ணா

பொறுப்பேற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா? முப்பது ஆண்டுகளுக்குமுன் இருந்த ஆட்சியை மீட்டிருக்கிறோம் என்றுதான் அறிஞர் அண்ணா சொன்னார். ஆக, சொன்னது மட்டுமல்ல, தமிழகத்தின் உரிமை மீட்புப் போரையே அண்ணா அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். உதா ரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால்,இந்தமாநிலத்திற்குதமிழ் நாடு என்று பெயர் சூட்டி, இந்த மாநி லத்தின் பெருமையை மீட்டிருக்கிறார்.

இந்தி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டும் வகையில் இருமொழிக் கொள்கையை நிலைநிறுத்தி மொழி உரிமையை மீட்டெடுத்திருக்கிறார். சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்து, ‘‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை’’ என்று சொன்னவர் நம்மு டைய அறிஞர் அண்ணா அவர்கள்.

அப்படி அண்ணா வழியில், இன் றைக்கும் நம்மை வழி நடத்திக் கொண் டிருக்க கூடிய தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் மெட்ராஸ் என்று இருந்த பெயரை “சென்னை” என்று மாற்றினார்.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தவர் கலைஞர்!

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதிகிடைக்கவேண்டுமென்றுதான்பிற் படுத்தப்பட்டமக்களுக்கு,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தனியாக அமைச்சகத்தை உருவாக்கினார். அதுமட்டுமல்ல, பிற் படுத்தப்பட்டோருக்கு30சதவீதம்,மிக வும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சத வீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள் சில ஏற்பாடுகளைச் செய்து வழிவகுத்து தந்தவர்தான் நம்முடைய தி.மு.க. தலை வர் கலைஞர் அவர்கள்.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்ன வென்றால், சிறுபான்மை பிரிவினரான இஸ்லாமியருக்கு 3.5 சதவீத தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினராக இருக்க கூடிய அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்து பெரியாரின் கனவை நிறைவேற்றினார் கலைஞர்!

இந்தியப் பிரதமராக இருந்த மதிப் பிற்குரியதிரு.வி.பி.சிங்அவர்கள் மண்டல் கமிஷனின்அறிக்கையைநடை முறைப்படுத்தி ’சமூகநீதிக் காவலர்’ என்ற பட்டத்தையும் பெற்றார். அப்போது அவருக்கு துணையாக இருந்த ஒரே ஒரு மாநில முதலமைச்சர் யாரென்று கேட்டால், அது நம்முடைய தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்தான். நீதிக்கட்சியின் ஆட்சியிலே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது என்று சொன்னால், அதை மனதிலே வைத்துக் கொண்டு தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும் என்று, சொத்திலே சம உரிமை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்ல, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம், விதவைப் பெண்கள் மறுமண உதவித் திட்டம், மகளிர் பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக் குழுஎன்றஅற்புதமானதிட்டம்,பெண் கள் அரசியலில் அதிகாரத்தை பெற வேண்டும் என்பதற்காக உள்ளாட்சிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத் தில்தான் கொண்டுவரப்பட்டது.

நீதித்துறையிலும் அதிகார வர்க்கத்தி லும் இன்றைக்கு திராவிட இனத்தவர்கள் இருக்கிறார்கள் எனச் சொன்னால் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது நம்முடைய திராவிட இயக்கம்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அண்ணன்துரைமுருகன்அவர் கள்சொன்னதுபோலஇங்கேபல டாக்டர்களை பார்க்கிறோம், வழக்குரை ஞர்களை பார்க்கிறோம். ஆக இன்றைக்கு அவர்கள் திராவிட சமுதாயத்தில் இருக்கின்றவர்கள் டாக்டர்களாக, வழக் குரைஞர்களாக வரக்கூடிய வாய்ப்பு அமைந்திருக்கின்றது எனச் சொன்னால் காரணம் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுதான். அதை ரத்து செய்த தலைவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியவர்

தலைவர் கலைஞர்

அறநிலைய சட்டத்தை நீதிக்கட்சி கொண்டுவந்தது எனச் சொன்னால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை கொண்டுவந்து தந்தை பெரியார் நெஞ்சிலே தைத்த முள்ளை எடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

போக்குவரத்துக்கழகங்களைஅரசு டமையாக்கியது, தமிழை செம்மொழி யாக மாற்றி தந்தது, சேது சமுத்திர திட் டத்தை கொண்டு வந்தது, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழரின் உரிமைக்கும் என்றைக்கும் துணை நிற்பது திமுக தான். மனிதனை மனிதனே இழுக்கக்கூடிய கை ரிக்ஷாக்களை ஒழித்த தலைவர் நம்முடைய தலைவர் அவர்கள்.

தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லங்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘‘திருநங்கை’’ எனப் பெயர் சூட்டி அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது, உடல் உறுப்பு பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மாற் றுத் திறனாளிகள் எனப் பெயர்சூட்டி அவர்களுக்கென தனி துறையை உரு வாக்கியவர் நம் தலைவர் கலைஞர்.

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் குடிசை மாற்று வாரி யத்தில் “ஒன்றே குலம்’’ என்ற உணர் வோடு வாழ்ந்திட, நாடெங்கும் சமத் துவபுரங்களை அமைத்து தந்தை பெரியார் பெயரிலே அமைத்துத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான். எல்லாவற்றிலும் சிறப்பாக சொல்ல வேண்டுமென சொன்னால், நம்முடையஇந்தியதிருநாட்டில் பலகுடியரசுத்தலைவர்களையும்,பல பிரதமர்களையும்உருவாக்கிய இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். அப்படிப்பட்ட இந்த திராவிட இயக்கத்தைத் தான் சிலர் நசுக்கிவிட வேண்டுமென பல செயல்களில் ஈடு பட்டுக் கொண்டிருக்கலாம். இதுவரை அது பலித்தது இல்லை. இனிமேலும் அது பலிக்கப் போவதும் இல்லை.

எத்தனை அம்புகள் நம்மை நம்மை நோக்கி பாய்ந்தாலும் திராவிட இயக்கத்தை எதனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், திராவிட இயக்கம் இயக்கம் என்பது அதனின் அடையாளமாக விளங்குவது திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்ற கழக மும். இது ஆயிரங்காலத்துப் பயிர். யாரும் எளிதிலே அறுவடை செய்துவிட முடியாது. இந்த இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழாவில் அதனின் முக்கால் நூற்றாண்டில் பின்னிப் பிணைந்து இருக்ககூடியவர் 93 வயது நிரம்பிய நம் முடைய தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

அதேபோல் 94 வயது நிரம்பிய நம்முடைய பொதுச்செயலாளர் பேரா சிரியர் அவர்கள். அவர்கள் இந்த இயக் கத்தை வழிநடத்துகிறார்கள். நம்மை வழிநடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வரலாற்றைப்பெற்றிருக்கும்தலைவர் களை எந்த இயக்கமாவது பெற்றிருக் கிறதா? பார்க்க முடியுமா? வேறெந்த இயக்கத்திற்கும் இந்த பெருமை வந்து சேர கிடையாது. இன்றைக்கு திராவிட இயக்கத்தின் நூற்றாண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ், தமிழகத்தின் நலனுக்கு கழகம் முழு மூச்சோடு பாடுபடும்!

அந்த திராவிட இயக்கத்தின் பாதையில் ஒருவழித்தோன்றலாக இருக் கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகமும் நிச்சயம்,  உறுதியோடு சொல்கிறேன்  நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். பெண்ணுரிமைக்கு இலக்கணமாக, சமூக நீதிக்கு அடையாளமாக இருக்கும் தி.மு.கழகம் என்றைக்கும் தமிழ் மொழிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் முழு மூச்சோடு தொடர்ந்து செயல்படுவோம் என்ற உறுதிமொழியை எடுக்கும் விழா தான் இந்த விழா. அப்படிப்பட்ட விழாவில் அந்த உறுதியை உங்களோடு இணைந்து ஏற்று, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
-விடுதலை,30.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக