வியாழன், 3 நவம்பர், 2016

பெரியார் பட்டம் கொடுத்தது யார்?

கேள்வி: பெரியார் என்று பட்டம் கொடுத்தது தர்மமாம்பாள் என்று நாங்கள் படிக்கிறோம். ஆனால், சில புத்தகங்களில் சிவராஜ் மீனாம்பாள் என்று இருக்கிறதே?

தமிழர் தலைவர்: மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மேயர் சிவராஜ் அவர்களுடைய வாழ்விணையர். அந்த அம்மையார் தந்தை பெரியாரை, அப்பா என்றுதான் அழைப்பார்கள். பெண்கள் மாநாடு 1938 ஆம் ஆண்டு நடைபெற்றது. நீலாம்பிகை என்பவர் (மறைமலை அடிகளாரின் மகள்) அந்த மாநாட்டில் இருந்தார். எல்லோரும் சேர்ந்துதான் பட்டம் கொடுத்தார்கள்.

அவர் கொடுத்தாரா? இவர் கொடுத்தாரா? என்று சர்ச்சை வேண்டாம். ஆகமொத்தம் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆண்களைவிட பெண்கள்தான் தொலைநோக்கு உள்ளவர்கள் என்பதற்கு அடையாளம், பெரியாரை, பெரியார் என்று முதலில் அடையாளம் கண்டுகொண்ட பெருமை பெண்ணுலகத்திற்கே உண்டு.

ஆகவே, தருமாம்பாளாக இருந்தாலும், மீனாம்பாள் சிவராஜாக இருந்தாலும், அவர்கள் அக்கா - தங்கை போன்று ஒன்றுபட்ட இயக்கத்து சுயமரியாதை வீராங்கனைகள். அவர்கள் எல்லாம் இணைந்துதான் பெரியார் என்ற அந்தப் பட்டத்தைக் கொடுத்தார்கள். அதிலொன்றும் கோடு போட்டு பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எல்லாம் பிரிக்கப்படக் கூடியவர்கள் அல்ல. ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.
   -கி.வீரமணி அவர்களின் பதில்
-விடுதலை,2.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக