வியாழன், 3 நவம்பர், 2016

சேலம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு


நிறைவேற்றிய சில முக்கிய தீர்மானங்கள்
சேலம், ஜன. 20- சேலத்தில் சென்ற 17.1.1943 அன்று நடைபெற்ற சேலம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நினைவேறின. 5ஆவது தீர்மானத்தை பிரரேபித்த பெரியார் சுமார் 1.30 மணி நேரம் மிக விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்.
இன்று புத்தகங்களை கொளுத்த வேண்டிய தில்லை என்று பிரதிநிதிகளை வேண்டிக் கொண்டார். பிரதிநிதிகளுக்கு இது சிறிதும் இஷ்டமில்லை என்றாலும் பெரியாரின் தாட்சண்ணியத்திற்கு ஒப்புக்கொண்டு கொஞ் சம் பேர்களே ஓட் செய்தார்கள். பெரும்பான் மையோர் நடுநிலைமை வகித்தார்கள்.
1. இப்போது நடந்துவரும் உலகயுத்தம் பிரிட்டி ஷாருக்கு வெற்றிகரமாய் முடிந்ததும் இந்திய அரசாங் கத்தில் இருந்து திராவிட நாட்டை தனியாகப் பிரித்து திராவிட மக்களுக்கு பொருளாதாரத்திலும் சமுதாயத் திலும் சரிசம உரிமை உண்டாகும்படியான சீர்திருத் தங்களை வழங்க வேண்டும் என்று இம்மாநடு பிரிட் டிஷ் பார்லிமெண்டுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறது.
2. நம் நாட்டு மக்களுக்குள் பிறவியில் உயர்வு தாழ்வு காட்டும் குறிப்புகள் கொண்டதும் ஒரு குலத் துக்கு ஒரு நீதி கொண்டதுமான மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், நீதி நூல் முதலாகிய எவையும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றை ஒழிக்க ஒவ் வொரு தமிழ் மகனும் பாடுபடவேண்டும் என்றும் இதுவே எதிர்கால முக்கிய வேலைத் திட்டமாய் இருக்க வேண்டுமென்றும் இம் மாநாடு  தீர்மானிக்கிறது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர் பெரியார் ஈ.வெ.ரா.
3. இந்து மதத்தையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் அடிப்படையாய் கொண்ட இந்து லா மாற்றப்பட வேண்டுமென்றும் அதற்கு ஆக கிளர்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என்றும் இம்மாநாடு தீர் மானிக்கிறது
4. இந்திய ரயில்வே நிலையம் சாலைகளில் உணவருந்த பிராமணர்கள் - பிராமணரல் லாதார்கள் என்று இடம் பிரித்து வைத்திருந்த பேதங்களை ஒழிப்பதற்கு சுயமரியாதை இயக்கம் எடுத்துக் கொண்ட கிளர்ச்சியை மதித்து அப்பேதத்தை ஒழிக்க சென்னை சர்க்கார் தலைவர் மேன்மை தங்கிய கவர்னர் எடுத்துக்கொண்ட முயற்சியை பாராட்டி அவருக்கு இம்மாநாடு நன்றி செலுத்துகிறது.
5. சர்க்கார் லைசென்சு பெற்ற பார்ப்பனர்கள் ஓட்டல்களில் உண்ணவும் சிற்றுண்டி அருந்த வும் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்று இடம் பிரித்து திராவிடர்களை இழிவுபடுத்தும் கொடுமை முறையை ஒழிக்க வேண்டியது யோக்கியமான அரசாங்கத்தின் கடமை என்றும், ஓட்டல் சிற்றுண்டி சாலைக்கு லைசென்சு கொடுக்கும் சட்டத்தை சர்க்கார் உடனே திருத்த வேண்டும் என்றும் இம்மாநாடு சர்க்காரை கேட்டுக் கொள்ளுகிறது.
6. ஓட்டல்களில் உள்ள இடவித்தியாசங்கள் ஒழிக்கப்பட ஏதாவது கிளர்ச்சிசெய்ய வேண் டியது மிகவும் அவசியமான காரியம் என்று இம்மாநாடு கருதுவதுடன் உடனே துவக்கும்படி தலைவர் பெரியாரை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.
7. திராவிட மக்கள் ஒன்றுபட ஜாதிப்பட்டம் சமயக் குறி முதலிய பேதங்கள் ஒழிக்கப்பட வேண் டியது அவ சியம் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்ளுகிறது.
8. புராண சம்பந்தமான கதைகள் கொண்ட சினிமாப் படங்களை திராவிட மக்கள் பகிஷ் கரிக்க வேண்டு மென்று தமிழ் மக்களை கேட்டுக் கொள்ளுகிறது.
9. (புராண ஒழிப்பு நாள்) தமிழர்களுக்கு இழிவு தரும் ஆரியப் புராணங்கள் இதிகாசங்கள் முதலிய வைகளை ஒழிக்க புராண ஒழிப்பு நாள் என்று ஒரு நாள் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் ஏற் படுத்தி மக்களைப் பின்பற்றும்படி செய்ய வேண்டு மென்று இயக்கத் தலைவர் களை கேட்டுக் கொள்கிறது.
10. மூடநம்பிக்கைகள் மதப்பிடிவாத உணர்ச்சிகள் உள்ள புத்தகங்களை பாடபுத்தக மாக பள்ளிக் கூடங்களில் வைக்கக் கூடாது என்றும் பண்டிதர்கள் பிரசங் கிக்கக் கூடாது என்றும் முறையே பள்ளி தலைமை ஆசிரியர் களையும் பண்டிதர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.
11. திராவிடர்கள் தங்கள் வீட்டு நன்மை, தீமை முதலிய காரியங்களுக்கும் கோயில் பூசை அர்ச்சனை முதலிய காரியங்களுக்கும் பார்ப் பனர்களைக் கொண்டு செய்விப்பது என்பதை அடியோடு நிறுத்தி விட்டு அவசி யமானால் தங்கள் இனத்தவரில் ஒருவரைக் கொண்டு நடத்திக் கொள்ள வேண்டுமென்று 12 வருடத் துக்கு முன் தீர்மானித்ததை மக்கள் ஓர் அள வுக்கு அமு லுக்குக் கொண்டு வந்திருப்பதைப் பாராட்டுகிறதுடன் இனியும் அப்படியே அவை களை அடியோடு ஒழிக்க வேண்டு மென்று இம்மாநாடு கேட்:டுக் கொள்ளுகிறது.
--விடுதலை,4.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக