செவ்வாய், 24 செப்டம்பர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? -10

12.9.2019 அன்றைய தொடர்ச்சி...


திருச்சியில் பெரியார் பேருரை


புராணங்களை ஒழிக்கும் வகையாகப் புராணங்களையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் எரிப்பதற்கு 15-20 ஆண்டு களுக்கு முன்பே திட்டம் கூறினோம் என்பதாகவும், இன்று ஒருபடி முன்னேறி விக்கிரகங்களை உடைக்கத் தீர்மானித் தோம் என்பதாகவும், தந்தை பெரியார் அவர்கள் திருச்சி தேவர் ஹாலில் 29.3.1953ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் கூறியதோடு, ஏன் திராவிடர் கழகம் இம்முடிவுக்கு வந்ததென்பதையும் தெளிவுபடுத்தியதன் சுருக்கம்:

பேரன்புமிக்க தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர் களே! இக்கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இதற்கு முன் பேசிய சைதாப்பேட்டை தோழர் கு.மாணிக்கம், சாதாரணமாக ஓரளவுக்கு எளிய தன்மையில் புராணங்களைப் பற்றியும் அவைகளில் பொதிந்துள்ள ஆபாசங்களைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொன்னார்.

இன்றைய இந்தக் கூட்டத்துக்குப் பெண்கள் வரக் கூடாது என்று விளம்பர அறிக்கையில் போட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஏன் எனில், நமது கடவுள்கள் விஷயமாக அவ்வளவு ஆபாசங்களைப் புராணங்கள் கொண்டுள்ளன. அக்காலத்தில் ஆபாசங்களைப் புகுத்தாமல் புராணம் எழுதவே முடியாதோ என்னவோ! சிலருக்குக் கொக்கோகம் முதலிய காமதூர விஷயங்கள்தான் பிடிக்குமென்பார்கள். அதைப்போல, நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் காலத்தில் புராணங்களை எழுதியவர்கள் ஆபாசங்களைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாமல் (கம்பனைப்போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) தங்கள் மனதில் நினைத்தையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். காலதேச வர்த்தமானத்தையொட்டி அந்தக் காலத்திற்கு ஏற்றவாறு அவர்கள் எழுதியிருக்கலாம் என்று கருதினாலும், அந்தப் பரம்பரையர்களுக்கு இன் றுள்ள மதவெறி காரணமாக அவைகளில் உள்ள ஆபாசங்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு வெளியிடாமலிருக்க முடியவில்லை.

மேலும், இந்தப் புராணங்கள் முதலியவைகளை நினைத்தவர்கள், தங்கள் தங்கள் விருப்பத்திற்கும், இஷ்டத்திற்கும் ஆபாசங்களுக்கும் ஏற்ற மாதிரியில் எழுதி எழுதி முன்னுக்குப் பின் முரணாகப் போகும் என்றுகூடக் கவலைப்படாமல் சேர்த்துக்கொண்டே வந்துவிட்டார்கள். இப்போது இங்கு வேத சாஸ்திர புராணக் கடவுள் என்பதாக ஒரு பொருள் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் நமக்குத் தெரிந்த சங்கதிகளை, நம்முடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டிய வரையில் நமக்குத் தோன்றிய கருத்துக்களை, இன் றைய தினம் மக்கள் எதையெதை தங்கள் வேதமாகவும் தெய்வமாகவும் கருதிக்கொண்டு இருக்கிறார்களோ அவை கள் எல்லாம் பித்தலாட்டங்கள், மக்களை ஏமாற்றுவதற்கும், அடக்கியாளுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சூழ்ச்சியான முறைகள் என்பதைப் பல ஆராய்ச்சிக் கருத்துக்கள் முதலி யவைகளை எடுத்துக்காட்டிச் சொல்லலாம் என்பதற்காகத் தான் இந்தக் கூட்டம் கூட்ட நானும் சம்மதித்தேன். எங்களுடைய கருத்தை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறவர்களல்ல நாங்கள். சொல்லுகிற கருத்துக்களைப்பற்றி மக்கள் சிந்தித்துப் பார்த்து, சரி எனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக நான் பல முறை கூறி வந்திருக்கிறேன். மறுத்துக் கூறுபவர்கள் முன் வருவதை நான் வரவேற்கின்றேன்.

திராவிடர் கழகம்


ஆனால், திராவிடர் கழகம் ஒன்றுதான் இத்துறையில் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு வருகிறது. அதற்கு முன்பு ஜஸ்டிஸ் கட்சி என்ற பேரால் இருந்து வந்த இந்தக் கழகம் சமூகத்துறையில் புகாமல் அரசியலில் மாத்திரம் வேலை செய்து வந்தது என்றாலும் அதனால் மக்களுக்கு அது சமயம் ஓரளவுக்கு அரசியல் உணர்ச்சி வந்தது. ஜஸ்டிஸ் கட்சியும் 18 வருட காலத்தில் ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன சாதிக்கக்கூடுமோ அதையெல்லாம் செய்தது; அதன் மூர்த்தண்யமான சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியும் புது துறையில் புகுந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு முன்பே காங்கிரஸ் கட்சி இருந்துவந்தது; எனினும் அது அப்போ தெல்லாம் பார்ப்பனர்களுக்குச் செல்வாக்கும் ஆதிக்கமும், உத்தியோகமும் கிடைக்கப் பாடுபடும் ஒரு கட்சியாகவே இருந்து வந்தது; அதன் மூலம் வெள்ளைக்காரனிடமிருந்து உத்தியோகமும், பதவியும், அதிகாரமும், கொழுத்த சம்பள மும் பார்ப்பனர்களுக்குக் கிடைப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி இருந்து வந்தது. போட்டியாக ஜஸ்டிஸ் கட்சி தோன்றி யவுடன்தான் அவர்கள் தமது போக்கை மாற்றிக்கொண் டார்கள். நானும் அந்த மாறுதல் காங்கிரசுடனிருந்தே தான் போராடினேன். அந்த அனுபவம் காரணமாகவே சில காரியங்களையேனும் சாதிக்க விரும்பியே சில நாளிலேயே காங்கிரசிலிருந்து வெளியேறினேன். அரசியலில் உழைப்பது மட்டும் பயன் அளிக்காது; உத்தியோகத்தால் மட்டும் மக்க ளுக்குப் பயனில்லை; அதுவும் உத்தியோகம் எத்தன் மையான மக்களையும் மதிமயக்கமடையச் செய்யத்தான் செய்யும். அதனால் அஸ்திவாரத்தைத் திருத்தி அமைக்க நாம் சமுதாயத் துறையில் பணியாற்றுவதென முடிவு செய்துகொண்டே இறங்கினேன். சமுதாயம் என்றால் இந்து மதச் சமுதாயம்; இந்து மதச் சமுதாயம் என்றால் அதாவது புராண சமுதாயம்தான்.

ஆகவே, இங்கு நான் சமுதாயம் என்னும்போது இந்து சமுதாயத்தையே குறிப்பிடுகின்றேன்.

தொடரும்

- விடுதலை நாளேடு, 19. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக