வியாழன், 5 செப்டம்பர், 2019

பெரியார் சிலைகளின் பீடங்களில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு தள்ளுபடி: 4.9.2019 தீர்ப்பு!



பெரியார் சிலை பீடங்களில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றவேண்டும் என்று தெய்வநாயகம் என்பவரால் தொடுக்கப் பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (4.9.2019) தள்ளுபடி செய்யப்பட்டது.

தெய்வநாயகம் என்பவர் பெரியார் சிலை பீடங்களில் பொறிக் கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக் கொன்றைத் தொடுத்தார் (2017).

பெரியார் சிலைப் பீடங்களில் இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

மேலும் ‘‘பெரியார் சிலைப் பீடத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் சொன்னது கிடையாது. வீரமணியே தன் விருப்பப்படி அதனை இடம்பெறச் செய்துள்ளார்'' என்றும் உண்மைக்கு மாறாக அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வழக்கினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகிய நீதிபதிகளின் அமர்வு விசாரணை நடத்தியது.

குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, நீதிபதிகள் வழக்கினைத் தள்ளுபடி செய்தனர்.
- விடுதலை நாளேடு, 5.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக