செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பெரியார் அவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம் - 6

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-


29.8.2019 அன்று தொடர்ச்சி...


வேத மொழிக்கு உதவி


வேத மொழியான சமஸ்கிருதம் வளம்பெற உதவியது திராவிட மொழிச் சொற்கள் என்றும், திராவிட உச்சரிப்புக ளும் வேதங்களில் அதிகமுள்ளன என்றும், ஹிந்து நாகரிகத் திற்குத் திராவிடர் ஏராளமாக உதவியுள்ளரென்றும் இந்நூல் விவரிக்கிறது. எனவே, திராவிடர் அநாகரிகர், காட்டுமிராண்டி கள், ராட்சதர்கள், வானரங்கள், கரடிகள் என்றும் இராமாயண இதிகாசங்களில் வர்ணித்திருப்பது துவேஷத்தால், அதாவது சாதாரணமான மக்கள் தமது எதிராளியைத் திட்டும்போது எவ்விதம் வர்ணிப்பார்களோ, அவ்விதமும், எவ்விதச் சொற்களைக் கையாள்வார்களோ, அதே சொற்களே வேதங் களிலும் புராணங்களிலும் ஆரியர்கள் தங்கள் எதிரிகளான திராவிடர்கள் விஷயத்தில் கையாண்டிருக்கின்றனர் என் றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆரியரைவிடத் திராவிடர் களே கலையறிவும், சிறந்த பண்புகளும் மிகுதியாகக் கொண் டிருந்தனர் என்றும் தீர்மானிக்கின்றனர் (பக்கம் 156-157).

மொகஞ்சதாரோ, ஹரப்பா வட்டாரங்களில் வாழ்ந்த ஆரியருக்கு முன்னைய மக்கள் அக்கால நாடோடி ஆரியர்களைவிடச் சிறந்த கலாச்சார அறிஞர்கள் என்று இந்நூல் தீர்ப்பளிக்கிறது. மற்றும், திராவிடர்கள் இயற்கைச் சக்தியைத்தான் தாயாக வணங்கினர் என்கிறார். திராவிடர் களுடைய கோட்பாடுகள் உலக வாழ்க்கையைப்பற்றி ஆழ்ந்த நுணுக்கக் கருத்துக் கொண்டிருந்தனவென்றும், ஆரியர்கள் வெறும் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்து ஆகாயத்தையே பிரார்த்தித்து அதாவது, ஆகாயத்தினிடம் உதவிகோரி முறையிட்டு வந்தனர் என்றும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் (பக்கம் 158).

இதிலிருந்து திராவிட மக்கள் உலக வாழ்க்கை இன்பத் தைத்தான் பெரிதும் விழைந்து, அதற்கான உலக வழிபாடு முறைகளையும் கொள்கைகளையும் கைக்கொண்டு வந்தன ரென்பதும், ஆரியரே வானுலகத்தையும் மோட்ச, நரகத்தை யும் கற்பனை செய்துகொண்டு அந்த வானுலக அருளை எதிர்பார்த்து ஏங்கித் தவித்தனரென்பதும் புலனாகிறது. தெளிவுறக் கூறுமிடத்து, திராவிட மக்கள் உலக நல்வாழ்வுக் கோட்பாட்டினராகிய தங்கள் சொந்த உடலுழைப்பில் அறிவுழைப்பில் நம்பிக்கை கொண்டு ஆக்கத்துறைகளில் ஈடுபட்டு, கலைவளம் பெற்றிருந்தனரென்பதும், ஆரியர் உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் விடுத்துக் கற்பனை யில் இன்பத்தையடைய எண்ணி, அதற்கான கோட்பாடு களைக் கற்பித்துக்கொண்டு, பிறர் உழைப்பில் தங்கள் உடல் வளர்ச்சிக்கு வழி செய்து கொண்டாரென்பதும், இவ்விதம் பிறருழைப்பைப் பெற வானுலக் கோட்பாடுகளைப் பரப்பி யும், அச்சுறுத்தும் சொற்கள் பொதிந்த வேத சமஸ்கிருத அடுக்குமொழிகளை ஒப்புவித்தும் வந்தனரென்பதும் தெளிவுபடுகிறது.

Termilai - Trmmili - Dramiza என்று மாற்றங்கள் பெற்ற சொல்லே பிற்காலத்தில் தமிழ் (Tamil) ஆயிற்றென வும் இவர்கள் விரிவுரை காண்கின்றனர் (பக்கம் 1: 8).

கிரேக்கர் படையெடுத்து வந்தபோது, தென்சிந்து வட்டா ரத்தில் அரபிதை (Arabitai) என்ற மக்கள் வசித்தனரென்றும், இவர்கள் கி.மு. 4ஆவது நூற்றாண்டில் வசித்த திராவிட மொழியாளரே என்றும், அரவலு என்று தமிழரைத் தெலுங் கர்கள் குறிப்பிடுவது இதற்கு ஆதாரமாக உள்ளதாகவும் இந்நூலில் விளக்கம் தரப்படுகிறது (பக்கம் 159).

பிற அறிஞர்களின் ஆதாரங்கள்


பிஷப் கால்டுவெல் எழுதியவற்றில் பழந்தமிழர்கள் நாடு நகரங்களில் வசித்துச் சிறந்த படிப்பறிவு மிக்கவர்களாகவும், எழுத்து வடிவம் கற்று, இறகு கொண்டு ஓலையில் எழுதி வந்ததாகவும், நீதிபதிகளும் நியாயவாதிகளுமில்லாமலேயே தங்களுக்குள் மக்களாட்சி நடத்தி வந்ததாகவும் எழுதி யிருக்கிறார்.

திரு.பி.டி.சீனிவாசய்யங்காரும் திராவிட மக்கள் - பழங்காலத் தமிழர்கள் ஆரியருக்கு முன்பே சிறந்த நாகரிகக் கலாச்சார அறிவாளர்களாகத் திகழ்ந்தனர் என்று ஆதாரங் கள் தந்திருக்கிறார்.

பார்ப்பன பூசாரியின் இரகசியம்


ஆரியர்களின் ஆகம, நிகம (வேதம்) கோட்பாடுகளெல் லாம் ஆகாய வணக்கத்துக்கானவையேயாகும். அதாவது, நெருப்புப் புகையின் மூலம் ஆகாயக் கடவுள்களின் அருள் வேண்டி நின்றனர். திராவிடர்கள் நடத்தியதோ பூசைகள்; இது இவ்வுலக வாழ்க்கையைத் தழுவிய வழிபாட்டு முறையே; பூ - அணிதல் - பூசுதல் என்ற அடிப்படையாக வந்ததே பூசை. இம்முறைகள் அறிவுக்கும் நடப்புக்கும் ஒத்தனவாகவிருந்தன. பிற்காலத்தில் ஆரிய திராவிட கோட்பாடுகள் கலப்பட முறையால் ஹிந்து மதம் தோற்று விக்கப்பட்டது. உண்மை ஆரியர்கள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களும் கற்றவர்களும் திராவிடர்கள் பூசை முறை களைக் கைப்பற்றித் தமக்கு முழு உரிமையாக்கிக் கொண் டனர். இதற்குமுன் ஆரியர்களிடையே இந்தப் பூசை முறை கிடையாது. பிற்காலத்தில் தான் திராவிட முறைகளைக் கற்றுக் கொண்டு பூசாரிகளாகிப் பிழைப்புக்கு வழி செய்து கொண்டனர். ஆரிய முறைகளான ஹோமம் முதலியன இந்தப் பார்ப்பன - க்ஷத்திரியர் என்பவர்களிடையே பெயர ளவில்தான் இருந்து வருகின்றன.

பூசை முறைகள்


மகாபாரதத்தில் வரும் பகவத் கீதை கிறிஸ்து வாழ்ந்த காலத்தில்தான் தொகுக்கப்பட்டிருக்க வேண்டுமென இந் நூல் ஆராய்ச்சியில் காணக் கிடக்கிறது கீதையில்தான் இந்த பூசையைப் பற்றி முதல் முதல் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக்கம் 161)

எனவே, பிச்சைக்கு வந்தவர்கள் பெண்ணுக்கு மாப் பிள்ளையான கதைபோல் ஆரியப் பார்ப்பனரும், திராவிடப் பூசை முறைகளை அறிந்து கொள்ள வந்தவர்கள் அந்தப் பூசாரித் தொழிலையே தமக்குப் பரம்பரைப் பாத்தியமாக்கிக் கொண்டு பூசை நடத்தத் தனியிடங்கள், கோவில்கள் அமைக்கச் செய்து அந்த இடத்தை அமைத்துக் கொடுத்த திராவிட மக்களும் அந்த இடத்துக்குள் அண்டாதபடி, கட வுளை அண்டத்தகாதவர்களாகவும், கடவுள் உருவத்தைத் அண்டத்தகாதவர்களாகவும் கடவுள் உருவத்தைத் தீண்டத் தகாதவர்களாகவும் ஆக்கி, சர்வ பாத்தியக் கடவுள் தரகர் களாகிவிட்டனர். ஆரியத் தீப்புகை விளக்க நூலான வேதப் பாடலும், இந்தப் பூசைக்கான பாடலொன்றைச் சமஸ்கிருத மொழியில் தொகுத்து நுழைத்துக் கொண்டு விட்டனர். திராவிடர் அமைத்துத் தந்த சிற்பங்களைக் கடவுளின் உருவங்களாக்கி அவற்றைக் காண அந்தத் திராவிடரிடமே கைக்காசு பெறலாயினர். இதேபோல் மக்கள் வணங்கிய இயற்கைச் சக்திகளுக்கு ஆரியர்கள் சமஸ்கிருத சொற்களில் புனைப் பெயர்கள் அளித்துத் தங்கள் கடவுள்களாக்கிக் கொண்டு பூசை நடத்திப் பிழைக்கலாயினர். முன்னர் அந்தச் சக்திகளை வணங்கி வந்த மக்களும் பார்ப்பனர் கற்பித்த அந்தச் சக்திகளின் உருவங்களை நேரிடையாக அணுகாத படிச் செய்துவிட்டனர். இவ்வகையில் ஆரியர்கள் வழிபாடு முறைகளை ஆக்ரமித்து, தங்களுடைய முழு உரிமைச் சொத்தாக்கிக் கொண்டனர் என்பது இந்நூலில் காணும் ஆராய்ச்சி மெய்மைகளால் அறியக் கிடக்கிறது.

இந்தியக் கலாச்சாரத்தில் முக்கால் பங்கு, ஆரியருக்கு முன்னைய மக்களின் கலாச்சாரப் பண்புகளாக இருக்கின்றன. மற்றும் இந்துக்களின் உணவு வகையும், ஆதி ஆரியர்கள் உண்ட உணவுக்கு மாறுபட்டுள்ளது. ஆரியர்கள் கம்பளி உடையணிந்தவர்கள்; இந்தியர்களோ பருத்தியுடையும் வேட்டியும் அணிகின்றனர்.

திராவிடர் முறைகளே


மற்றும், கொள்கை நடைமுறைகளும் பெரும் அளவுக் குத் திராவிட முறைகளைத் தழுவியிருக்கின்றன (பக்கம் 164) என்று இந்நூலில் சுட்டிக் காட்டியிருப்பதால், ஆரியர் திராவிடரை விடச் சிறந்த அறிவாளிகள் என்றோ நாகரிகக் கலாவல்லவர்களென்றோ கூறுவதே ஆதாரமற்றதாகிறது. திராவிடர்க் கலாச்சாரப் பழக்க வழக்க முறைகளைத்தான் ஆரியர் சுவீகரித்துக் கொண்டு தங்கள் கோட்பாடுகளுக் கேற்றபடி மேல் பூச்சு மாற்றங்கள் செய்து தங்களுடைய சொந்தம் ஆக்கிக்கொண்டனர் என்பதே ஆராய்ச்சித் தீர்ப்பாகிறது. பிற்கால சமஸ்கிருதம் பெரும் அளவுக்குத் திராவிட மொழிச் சார்பினதாகவும், வேத மொழிக்கு அதிகம் மாறுபட்டதாகவுமிருப்பதால், இப்போதைய சமஸ்கிருதம் திராவிட மொழியிலிருந்து ஆக்கிக் கொண்ட இருபிறப்பு மொழியேயாகும்; தனித்தாய்மொழி என்றோ ஜீவமொழியே யென்ற பார்ப்பனர் கூறுவதுபோல் தெய்வ மொழி என்றோ கூறுவதற்கில்லை. இந்த சுவீகாரத்தை மறைக்கத்தான் அந்த சமஸ்கிருதத்தைத் திராவிடர்கள் படிக்கக் கூடாதென்றும், படித்தால் தெய்வக் கோபமும் தோஷமும் பாவமும் ஏற்பட்டுவிடுமென்றும் பயமுறுத்தி, அதன் வண்டவாளத்தை மறைத்து வந்தனரெனவும் எண்ணச் செய்கிறது. சிந்துமொழி எழுத்துக்கள் இந்தியாவில் பிறந்து வளர்ந்த தனிமொழி எழுத்துக்களென்கிறார் திரு. இராமச்சந்திர தீட்சதர். சிந்து மொழியென்பது சிந்து சமவெளியில் ஆரியருக்கு முன் வாழ்ந்த மக்கள் மொழி; ஆரியருக்கு முன் தமிழரே அங்கு வாழ்ந்தாரென்பது மொகஞ்சதாரோ கல்வெட்டுகளால் அறியக்கிடக்கிறது.

எண்ணும் எழுத்தும்


எழுத்து மாத்திரமல்ல, எண்ணும் திராவிட அடிப் படையைக் கொண்டதுதானென இந்நூலாசிரியர் விளக்கு கிறார். எட்டு என்பதை அடிப்படையாகக் கொண்டதே எண். எண் - எண்ணுதல், திராவிட மொழி, இது வடமொழிகளிலும் மற்ற திராவிட மொழிகளிலும் பொதுப்படையாகவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

புராணங்கள் உற்பத்தி ரகசியங்கள்


ஆரியர்களுக்கு முன்னிருந்த ஆஸ்ட்ரிக்குகள், திராவி டர்கள் ஆகியவர்களிடையே வழங்கி வந்த வரலாற்றுக் கதைகளையே ஆரியர்கள் பிற்காலத்தில் கைக்கொண்டு, பல வேறு மாறுபாடுகளுடனும், ஆரியக் கடவுளின் பெயர் களையும், ஊர், நாடுகள் ஆகியவற்றின் பெயர்களையும் கொடுத்து ஆரிய மொழியில் எழுதிக் கொண்டு விட்டனர்.

இவ்விதமாக ஆரியக் கடவுள்கள் முனிவர்கள், அரசர் கள் ஆகியவர்கள் பெயரில் மாற்றியமைக்கப்பட்ட பழைய திராவிடக் கதைகளே புராணங்களில் காணப்படுவன என்று இந்நூலில் காணப்படுகின்றது (பக்கம் 165).

இராமாயணம்


இராமாயணம் வெவ்வேறு மூன்று கதைகளைக் கொண்டு புனையப்பட்ட கதம்பமெனப் புலனாகிறது. இதற்கு சரித்திர அடிப்படை இல்லை. மற்றும், இம்மூன்று கதைகளும் வெவ்வேறு காலங்களில் புனையப்பட்டுப் பின்னர் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அயோத்தியா காண்ட வரலாறு, சீதை கவரப்பட்டதும் மீட்சியும்; கிஷ்கிந்தா காண்ட வரலாறு ஆகியவைகள் தனித்தனி வரலாறுகளெனத் தெரிகிறது. கிழக்கிந்தியாவில், ஆஸ்ட்ரிக் மக்களின் கதை யடிப்படையில் இது புனையப்பட்டு, பின்னர் இந்த நாகரிக விவரங்களுடன் காவியமாக்கப்பட்டதென்கின்றனர்.

மகாபாரதம்


மகாபாரதம் மேற்கு அய்க்கிய மாகாணம், கிழக்குப் பஞ்சாப் வட்டாரத்தில் நடந்ததாகக் குறிப்பிடுகிறது. இதில் ஆரிய வரலாறுகளும் ஆரியர், ஆரியரல்லாதார், கலப்பட மக்கள் வரலாறுகளும் காணப்படுகின்றன. ரிஷிகளெனப்படும் வேதியரின் வழி காட்டுதல் மீதே இந்த ஆரியர் - ஆரியர் அல்லாதார் கலப்பட இனவரலாற்றுக் கதையான சமஸ்கிருத பாரதம் புனையப்பட்டுள்ளது. எனவே, இந்தப் புராண கதைகள் எல்லாம் ஆரியருக்கு முன்பு இந்நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களான திராவிடர் முதலியவர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டும், பழங்கதைகளிலுள்ள சாதா ரண கதாநாயகர்களைத் தெய்வீக புருஷர்களாக சித்தரித்துக் காட்டியும், ஆரிய புராணக் கதைகள் இட்டுக்கட்டப்பட்டன வென்பது தெளிவுபடுகிறது என்று இந்நூலே விளக்குகிறது.

இது பரதர்களின் போர் வரலாறு. இது ஒரே வித அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. இதில் பற்பல கதை கள் ஊடுருவியுள்ளன. இக்கதையை வியாசர் தொகுத்த தென்பர். வியாசர் என்றால் தொகுப்பாளர் என்றே பொருள். (கட்டுரைகள் தற்போது வியாசம் என்று பள்ளிக் கூடங்களில் குறிப்பிடப்படுவது அறிந்ததே).

குருகுலத்தார் - பாஞ்சாலர் என்ற இரு அண்டை நாட்டினருக்குள் நிகழ்ந்த போர் வரலாறுகளே இக்கதையாக இருக்கலாம் என்று கருதுகிறார் வாசென் என்பவர். இந்தோ - ஜெர்மானிய காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியாக (ஆரியர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்) இருக்கலாமென்கிறார் டாக்டர் எ.ஹால்ட்ஸ்மன் ஆனால், எது உண்மை என்று இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

வியாசர், இந்தப் பாரதக் கதையைப் பாடுவதற்கு முன் குறிப்பிட்ட முகவுரையில் நானும், எனது சீடர்களும் 8800 ஸ்லோகங்களை அறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விதம் அறிந்தபின்னர் அதைத் தொடர்ந்து பரதர்களைப் பற்றிய பாரதம் பாடினார் எனப்படுகிறது. ஆகவே பாரதம் தனிப் புராணம் என்றே எண்ணச் செய்கிறது. இவற்றில் கூறப்பட்டுள்ள வரலாறுகள் பலவும், ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றனவாகவும், தொடர்பற்றனவாகவும், கருத்து வேறுபாடுகள் கொண்டனவாகவுமுள்ளன. ஆகவே இதில் இடைச்செருகல் அதிகம் பிற்காலத்தில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்று புலனாகிறது.

அதாவது, பிராமணர்கள் தங்கள் தங்கள் இன - சாதி சுயநலக் கருத்தினால், பிற்காலத்தில் அவ்வப்போது பல கதைகளைத் தொகுத்து இந்தப் பாரதத்துடன் சேர்த்து விட்டனர்.

(என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா)


ஆரியன் என்பது ஓரினத்தைக் குறிப்பதல்ல; ஒரு மொழியின் பெயரே என்கிறார் மாக்ஸ்முல்லர். இதிலிருந்து ஆரியர் தாய்ப் (அடிப்படை) பெயரில்லாத குழுவினர் என்பதாகிறது. இந்தியா ஆரியரின் தாயகமல்லவென்றே எல்லாத்துறை ஆராய்ச்சிகளிலும் திட்டவட்டமாக அறியக் கிடக்கிறது. ஆரியருக்கு முன் இந்தியா வெங்கும் திராவிட மொழியே வழங்கி வந்ததென்பதற்கு, பலுசிஸ்தானத்தில் ஒரு பகுதியினர் தமிழ் மொழி பேசுவதும் மற்றொரு சான்றாகும்.

- வியாழக்கிழமை தொடரும்

- விடுதலை நாளேடு, 3. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக